வாழ்க்கையின் நோக்கம்
எமர்சன் சொன்னது
மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது.
அறியாமையிலிருந்ததே பயம் தோன்றுகிறது.
நம்பிக்கையின் திருடன்தான் மேடைப்பிரசங்கி.
உயர்ந்த பண்புக்கு அடிப்படை சிறிசிறு தியாகங்கள்.
சொர்க்கம் என்பது ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு ஏதோ அன்று.
பகையோ, குறைகூறலோ அணுக முடியாது, உன்னை நீயே பெரியவனாக்கிக் கொள்.
முதலாவது செல்வம் ஆரோக்கியம்,
நான் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்தெல்லாம் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
கற்பனை நம் வாழ்க்கையை உயர்வடையச் செய்கிறது.
நாளை என்பது சோம்பேறிகளின் தினமாகும்.
புத்தர் சொன்னது
உண்மை ஒன்றுதான் என்றும் நிலைத்து நிற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது.
ஒரு பகைவனால் ஏற்ப்டும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது.
வாழ்க்கையின் நோக்கமே பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.
ஒருவன் என்ன செயல் செயிகிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.
ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்கு தலைவனாக இருக்க முடியாது. தன்னைத்தானே அடக்கி கட்டுப்ப்டுத்த்த் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற் முடியும்.
பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.
எந்த செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்த்து என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பின்பற்றுங்கள்.