
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.
- லெனின்

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்.
- காந்தியடிகள்

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது.
- டேவிட்ஹ்யூம்

ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்.
- ரூஸோ

பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்.
- ரவீந்திரநாத் தாகூர்

பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி.
- வில்சன் மிஸ்னர்

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்.
- ஷேக்ஸ்பியர்

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்.
- வேட்லி

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.
- நேரு

பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது.
- லார்ட் பைரன்

பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை.
- ஷேக்ஸ்பியர்

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது.
- ஷேக்ஸ்பியர்

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை.
- லாண்டர்

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்.
- மகாபாரதம்

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு.
- ஒளவையார்

பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்.
- தேசிக விநாயகம் பிள்ளை

ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்.
- பெஸ்லிங்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.