பணம் குறித்தப் பொன்மொழிகள்

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
– பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.
– தாமஸ் புல்லர்.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
- ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்.
– ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
- வீப்பர்.

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
- பெர்னார்ட்ஷா.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!
– கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
– ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
– தாமஸ் பெயின்.

பயிருக்கு முள் வேலி. பணத்துக்கு தர்மம் வேலி.
- வாரியார்.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.
– வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
- ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.
– ஷோப்பன் ஹொபர்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.
- பிராங்கிலின்.

பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம்; தவறான வழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம்.
- ரஸ்கின்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை.
– டென்மார்க்.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை.
– பாரசீகம்.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
– ஆஸ்திரேலியா.

யாராலும் பணத்தைச் சம்பாதிக்க முடியும். ஆனால், அறிவாளியால்தான் அதைப் பத்திரமாக வைத்திருக்க முடியும்.
- அமெரிக்கா.

பணமாக இருந்தால் நீ பாம்பு. பணமில்லாவிட்டால் புழு.
- சீனா.

பணமில்லாதவன் பாய்களில்லாத கப்பலைப் போன்றவன்.
- ஜப்பான்.

இறைவன் வானை ஆள்கிறான். பணம் உலகை ஆள்கிறது.
- ஜெர்மனி.
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.