* எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
* என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே.
* கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையைப் பயிற்றுவிப்பதற்கு.
* அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே.
* நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.
* தொழில் நுட்ப்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.
* தனிமனிதனின் தனிஉரிமையான சிந்தனைகளில் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.
* வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
* அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
* பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்டபின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி.
* மனிதன் நிச்சயம் ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டே இருப்பான்.
* துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.
* மற்றவர்களுக்காகவும் வாழும் வாழ்க்கையே ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.
* கடவுள் நிச்சயம் புத்திசாலி.அனால் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை.
* வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக் கூடாது.
* ஒரு விஷயம் அழகாக பார்க்கப்படுவதால்தான் மட்டுமே அதனை பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.
* ஒருவன் நன்றாக முன்னாள் தாண்டிக்குதிக்க வேண்டுமென்றால் அதற்காக அவன் பின்னாலும் போகத்தான் வேண்டும்.
* ஒரு பிரச்னை எந்த வழியில் ஏற்பட்டதோ , அதே வழியில் அதற்கான தீர்வை பற்றி யோசிக்கும் போது நம்மால் அதைத் தீர்க்க முடியாது.
* முட்டாள்களுக்கும் மேதைகளும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லைகளை அறிந்திருப்பர்.