* இறைவனின் கோபத்தை எடை போடலாம், ஆனால் அவன் அருளுக்கு அளவே கிடையாது.
* மனிதன் தன்னால் இயன்றதைச் செய்வான்; இறைவன் தான் நினைப்பதைச் செய்வான்.
* ஆண்டவன் நிச்சயமாகக் கரைச் சேர்ப்பான்; ஆனால் கடலில் புயல் வராதென்று அவன் உறுதி சொல்லமாட்டான்.
* ஆண்டவனுக்காக ஒரு கோயில் அமைத்தவுடன், சயித்தானும் அருகிலே ஒரு மடத்தைக் கட்டுகிறான்.
* பயத்தினால் மட்டும் இறைவனைத் தொழுவோர், சயித்தான் வந்தால், அவனையும் தொழுவர்.
* ஒழுக்கத்தை இழந்தவன் தன் சமயத்தையும் இழக்கிறான்.
* இருவர் குதிரை ஏறினால், ஒருவர் பின்னால் அமரவேண்டும்.
* கடல் எந்த நதியையும் விலக்குவதில்லை.
* அதிருஷ்டத்தை எதிர்பார்த்திருப்பவனுக்கு மதியச் சாப்பாடு நிச்சயமில்லை.
* எல்லா மக்களுக்கும் மூட நம்பிக்கைகள் உண்டு.
* பூமி, எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி, எல்லாவற்றையும் திரும்ப வாங்கிக் கொண்டு விடும்.
* எந்த நிறம் சேர்ந்தாலும், கறுப்புநிறம் மாறாது.
* பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாகயிருக்க வேண்டும்.
* கல்யாணத்திற்குப் பெண் தேடி நெடுந்துாரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான் அல்லது தான் ஏமாறுவான்.
* கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம்.
* முறையில்லாத வாடகைக்காரனை விட, காலி வீடே மேலானது.
* நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது.
* வெளியேக் கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டிலும், வீட்டிலேயிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல்.
* குழந்தையில்லாதவனுக்கு அன்பு என்னவென்று தெரியாது.
* ஒரு தந்தை நுாறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.
* குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.
* உலகத்திலுள்ள எல்லாத் தலைகளையும்விட, ஒரு நல்ல இதயம் மேலானது.
* பணம், புத்தி, யோக்கியதை மூன்றைப் பற்றியும், கேள்விப் பட்டதில் கால் பாகத்தை மட்டும் நம்பு.
* தீய வழியில் வந்தது தீய வழியிலேயே போய்விடும்.
* வயிறு காயாமலிருந்தால், எந்தத் துக்கமும் குறைவாகத் தோன்றும்.
* நல்லதில் நம்பிக்கை கொள்ளாதவன் தீயதற்கும் அஞ்ச மாட்டான்.
* உலகம் மூடர்களும் வஞ்சகர்களும் நிறைந்தது.
* பொய்யான உண்மைகளும், மெய்யான பொய்களும் உண்டு.
* நாய், எறிந்தவனை விட்டுவிட்டுக் கல்லைக் கடிக்கிறது.
* ஆயுளை நீடிக்க உணவுகளைக் குறை.
* வயிறு நிறைய உணவிருந்தால், விரும்பிப் படிக்க முடியாது.
* பேராசை தீர்ந்ததும் அமைதி ஆரம்பமாகிறது.