அளவில்லாத ஆசை என்னவாகும்?

பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!
– புத்தர்

கடந்ததைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!
– ஸ்ரீ அன்னை

வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!
– டால்ஸ்டாய்

அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!
– வள்ளலார்

அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை!
– அரவிந்தர்

அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும்.
- மகாவீரர்

கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
– அரிஸ்டாட்டில்

செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம்.
– முகம்மது நபிகள்

பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால், அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும்.
- ஹென்றி ஃபீல்டிங்

சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை.
– ஆண்டர்சன்

மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது.
– தாகூர்

அதிர்ஷ்டத்தை என்றும் நம்பாதே... அது உன்னைச் சோம்பேறியாக்கும்.
– ஆதிசங்கரர்

கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள்.
– மகாகவி மில்டன்

சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிக்க் கடினமானதாக இருக்காது.
– ஹென்றி போர்ட்

சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள்.
– டாரா ஆல்பர்ட்

குற்றவாளி சட்டத்திற்கு அஞ்சுகிறான். நல்ல மனிதன் தன் மனசாட்சிக்கு அஞ்சுகிறான்.
– உய்கோ

கடுமையாக உழைப்பவனுக்குக் கவலைப்பட நேரமில்லை!
– சாணக்கியர்

வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்.
– ஷேக்ஸ்பியர்

மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்.
– விவேகானந்தர்

மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்.
– குருநானக்

தேவைப்படும்போது தன் முடிவை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன்தான் அறிவாளி.
– டாக்டர் ஜான்சன்

நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
- ஜார்ஜ் எலியட்

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
– கன்ஃபூஷியஸ்

தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும்.
- தோரோ

ஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
– வால்டேர்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.