* ஒவ்வொரு வீடும் ஓர் உலகம்.
* என் வீட்டில் நானே அரசன்.
* ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
* சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
* ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.
* அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.
* ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல்.
* மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
* செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.
* காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.
* ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.
* காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும்.
* ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.
* காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும்.
* 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது.
* தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை.
* நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.
* சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.
* காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர்.
* அழகுள்ள விதவையை (விரைவில்) விவாகம் செய்து வைக்க வேண்டும், அல்லது புதைக்க வேண்டும், அல்லது கன்னிகா மடத்தில் அடைத்து வைக்க வேண்டும்.
* தாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும்.
* எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை.
* ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்காவிட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான்.
* உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம்.
* திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும்.
* காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும்.
* திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது.
* நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம்
* மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.
* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
* கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
* தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
* கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
* கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
* பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
* உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.
* மரணம் குட்டிகளையும், ஆடுகளையும் சேர்த்து விழுங்குகின்றது.
* ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான்.
* மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான்.
* கிழவனுக்குத் தண்ணீர் இறங்கவில்லையானால், சமாதியைத் தயாரிக்கலாம்.
* விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.