இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

ஓடுவதால் பயனில்லை... அப்படியென்றால்...?


 காலம் பறந்து செல்வது. நம் இளமையில் இறைவனை நாம் நினைவில் கொள்ளாவிடில், முதுமையில் அவனைப் பற்றி எண்ண ஆற்றல் நமக்கு இல்லாது போகும்.

— ஹான்ஸ் கிரிஸ்ட்டியன் ஆண்டர்லைன்

 காலமெனும் முட்டாள், ஓசைப்படாமல் விரைந்து கடக்கின்றான்; காளைப் பருவம் பற்றி நான் கனவு காணும் முன்பே, முதுமை நெருங்குகிறது.

— வில்லியம் கிஃப்போர்ட்

 கெட்டுப் போய் விட்டது காலமல்ல, மனிதன்தான்.

— ஜே. ப்யூமாண்ட்

 நாம் வாழும் காலத்தைப் பழிப்பது, அதிகாரத்தில் உள்ளவர்களைக் குறை கூறுவது, கடந்த காலத்தை எண்ணிக் கண்ணீர் சிந்துவது, எதிர்காலத்தைப் பற்றி ஆதாரமற்ற கனவுகள் காண்பது, இது மனித சமுதாயத்தில் பெரும் பகுதியினருக்கு இயல்பு.

— எட்மண்ட் பர்க்

 காலம் என்பது, கடக்கும் நிகழ்ச்சிகளால் உருவான ஆறு, கட்டுக்கடங்கா வேகம் கொண்ட நீரோடை அது. ஒரு பொருள் கண்ணுக்குப் புலப்பட்ட உடனேயே, அது அடித்துச் செல்லப்படுகிறது. இன்னொன்று, அதன் இடத்தில் வந்து, அதுவும் அடித்துச் செல்லப்படுகிறது.

— மார்க்கஸ் அரேலியஸ்

 சிந்தனை, வாழ்வின் அடிமை; வாழ்வு, காலத்தின் ஏமாளி; உலகனைத்தும் அளக்கும் காலம்; ஒரு நேரம் நின்றுவிடும்.

— வில்லியம் ஷேக்ஸ்பியர்

 வாழ்வின் காலம் குறுகியது; குறுகியதைப் புன்மையாய்க் கழிப்பது, கொடியதை நெடியதாக்கி விடும்.

— வில்லியம் ஷேக்ஸ்பியர்

 கொடுங்கோலர்களில் தலையாயது, காலம். முதுமையை நோக்கி நாம் வளர்ந்து செல்கையில், நம் உடல் நலன், உடல் உறுப்புகள், புலன்கள், வலிமை, இயல்புகள், அனைத்தின் மீதும் வரி விதிக்கின்றார், அக் கொடுங்கோலர்.

— ஜான் ஃபாஸ்ட்டர்

 நாம் பெரிதும் விரும்புவதும், அந்தோ, மிக மோசமாகப் பயன்படுத்துவதும், காலமே.

— வில்லியம் பென்

 ஒழுக்கத் துறையில் கூட, பலவற்றை சட்டப்படி நியாயப்படுத்தும் சக்தி, காலம்.

— ஹென்ரி எல் மெங்க்கென்

 காலமே காசு என்பதைக் கருத்திற் கொள்.

— பெஞ்சமின் ஃபிராங்க்ளின்


 ஆண்டவனுக்கு அடுத்தபடியாக காலத்தைப் போற்றுவதே, ஒழுக்க நடத்தையின் உயர்ந்த ஒரு விதி.

— ஜோஹன் லேவேட்டர்

 நேரத்தை மட்டும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், போதிய காலம் நமக்கு எப்பொழுதுமே இருக்கும்.

— யொஹன் கேத்தே

 வாழ்வை ஒரே நேரத்தில் வீசிப் பறி கொடுப்பது பற்றி எண்ணவேப் பயப்படுவதும், அதே சமயத்தில், சிறிது சிறிதாகவும், சிப்பம் சிப்பமாகவும் வாழ்க்கையை வீணடிப்பதைப் பற்றிக் கவலைப்படாததும், எவ்வளவு மடைமை.

— ஜான் ஹோஷ்

 அரை மணியைக் கூட அற்பமாகக் கருதுவதைக் காட்டிலும், அந்த அரை மணி நேரத்தில் மிக அற்புதமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பதே மேல்.

— யொஹன் கேத்தே

 உறுதியான நண்பனாகவும், குணமாக்குபவனாகவும், இருக்கும் காலம், கருணையற்ற பகைவனாகவும் இருக்கும்.

— மகாத்மா காந்தி

 நம் எண்ணங்கள் அனைத்தையும் விட, காலம், நமக்கு அதிகம் போதிக்கும்.

— பெஞ்சமின் டிஸ்ரேலி

 வருங்கால சந்ததியார்க்குக் காலம் அனைத்தையும் அம்பலப்படுத்திவிடும். அது பெரிய உளறுவாயன்; கேள்வி கேட்கப்படாத போது கூடப் பேசும்.

— யூரிப்பிடிஸ்

 காலத்தின் துணையில்லாமல் நீ செய்யும் எதையும், காக்க உதவுவதில்லை, காலம்.

— அனட்டோல் ஃபிரான்ஸ்

 காலம், குழந்தைப் பருவத்தின் கனத்த சிறகுகள்; வயதில், ஓசையின்றி விரைந்தோடும் ஆறு.

— வால்ட்டர் டெலாமேர்

 நேரத்தைத் தேர்ந்தெடுப்பது, நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்.

— ஃபிரசன்ஸிஸ் பேக்கன்

 நிகழ்காலத்தை நாம் கவனிப்போம். வருங்காலத்தைப் பொறுத்தவரை தருணம் வந்து வாய்க்கும் போது அதைச் சமாளிக்கும் வகையை நாம் அறிந்து கொள்வோம்.

— பியேர் கோர்னேய்ல்

 சீராக ஒழுங்கு செய்யப்படும் நேரம், சீராக ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளத்திற்கு, உறுதியான அறிகுறி.

— ஸர் ஐஸ்க் பிட்மன்


 நாம் உறங்குகிறோம். ஆனால், வாழ்வெனும் தறி ஒரு போதும் நிற்பதில்லை. கதிரவன் மறைந்த நேரம், நெசவிலிருந்த வடிவமைப்பு, காலையில் கதிரவன் உதிக்கும் நேரத்திலும், நெசவிலிருக்கும்.

— ஹென்ரி வார்ட் பீச்சர்

 நான் நேரத்தை விரயமாக்கினேன். இப்பொழுது நேரம் என்னை விரயமாக்குகிறது;

— வில்லியம் ஷேக்ஸ்பியர்

 கருத்துக்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவே, காலம், எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டது.

— நிக்கலஸ் மர்ரே பட்லர்

 காலம், தலைச்சிறந்த ஆசான்.

— எட்மண்ட் பர்க்

 காலம் பறக்கின்றது; நம்மையும் தன்னுடன் ஈர்த்துச் செல்கிறது. நான் பேசிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுது, ஏற்கனவே என்னை விட்டுத் தொலைவில் சென்று விட்டது.

— நிக்கோலா புவாலோ

 காலமெனும் குடை இராட்டினம். இவ்வாறு தன் வஞ்சங்களை வெளிக்கொணர்கிறது.

— வில்லியம் ஷேக்ஸ்பியர்

 வரையறை விளக்கம் செய்ய முடியாமலும், முரண்பாடுள்ள புதிராகவும் இருப்பவற்றில் தலையாயது, காலம், கடந்த காலம் சென்று விட்டது. எதிர்காலம் வந்து சேரவில்லை. நாம் விளக்கி இனம் காண முற்படும் நேரத்திலே, நிகழ்காலம், கடந்த காலமாகிறது; மின்னல் வீச்சுப் போல், தோன்றுவதும் மறைவதும், அக்கணமே.

— சார்ல்ஸ் கோல்ட்டஸ்

 மனிதன் ஓயாமல் கொல்ல முயல்வதும், மனிதனை இறுதியில் கொன்று முடிப்பதும் காலம்.

— ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர்

 எனக்குரிய காலம் இன்னமும் தோன்றவில்லை. சிலர், தங்கள் பிறவிக்காலம் முன்பேப் பிறக்கின்றனர்.

— ஃப்ரீட்ரிஷ் நீட்ஷே.

 ஒவ்வொரு சகாப்தமும், கருகி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கனவு; அல்லது, கருவில் உருக்கொண்டு இன்னும் பிறக்காத ஒரு கனவு.

— ஆர்த்தர் ஒ' ஷாக்னெஸ்ஸி

 கடந்த காலத்தின் கதையைச் சொல்பவர்கள், வரலாற்று அறிஞர்கள். நிகழ்காலத்தின் கதையைச் சொல்பவர்கள், நாவலாசிரியர்கள்.

— எட்மண்ட், ஜூல்ஸ், தெ கோன் கூர்

 வாழ்க்கையை நீ நேசிக்கிறாயா? அவ்வாறாயின், காலத்தை நீ விரயம் செய்யாதே. காலம் என்னும் கருப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டதே, வாழ்க்கை.

— பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

 காலங்கள் மாறுவதில்லை; மனிதர்கள்தான் மாறுகின்றனர்.

— திபெத் நாட்டுப் பழமொழி

 காலமும் வெளியும் போல், என்னைத் திகைக்க வைப்பது வேறெதுவுமில்லை. ஆயினும் அவற்றைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அவற்றைப் பற்றி கான் எண்ணுவதேயில்லை.

— சார்ல்ஸ் லேம்ப்

 செய்ய வேண்டியதை நாம் செய்வதில்லை; செய்யக் கூடாதவற்றைச் செய்து விடுகிறோம்; நல்ல காலம் நம்மைக் காத்துக் கரையேற்றுமென நம்பி, வாழ்நாளைக் நடத்துகின்றோம்.

— மேத்யூ ஆர்னால்ட்

 எல்லாம் பறிபோன பின்பும், எதிர்காலம், மிஞ்சி நிற்கும்.
— கிரிஸ்ட்டியன் போவி

 காலம் கடக்கின்றது என்று கூறுகிறாய். அந்தோ, பாபம்! காலம் நிலைக்கிறது; நாம்தான் கடக்கின்றோம்.

— ஆஸ்ட்டின் டாப்ஸன்

 காலமெனும் மூலிகை, எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லது.

— பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

 ஒவ்வொன்றிற்கும் அதற்கு உரிய நேரம் உண்டு. அந்நேரம் பார்த்துக் கவனமாய் இருக்க வேண்டும்.

— தாமஸ் ஃபுல்லர்

 இன்றைய நாளை, இறுகப் பற்றிக் கொள், நாளைய நாளைப் பற்றி, அதிகம் நம்ப வேண்டாம்.

— ஹோரஸ்

 காலம் என்பது, உன் வாழ்க்கையின் நாணயம். உன்னிடம் இருக்கும் ஒரே நாணயம். அதை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யக் கூடியது, நீ மட்டுமே. உன் சார்பில் மற்றவர்கள் அதைச் செய்ய அனுமதிக்காமல், எச்சரிக்கையாய் இரு.

— கார்ல் லேன்ட்பர்க்

 நான் மீன் பிடிக்கச் செல்லும் நீரோடையே, காலம்.

— ஹென்ரி டேவிட் தோரோ

 நேற்றையப் பொழுதைத் திரும்ப அழை; காலத்தை மீண்டும் வர கட்டளையிடு.

— வில்லியம் ஷேக்ஸ்பியர்

 காலத்துக்கு ஏவல் செய்யக் காத்திருப்போருக்கு, காலம் என்றும் துணை செய்யும்.

— மகாத்மா காந்தி

 மற்றெல்லாக் காலங்களையும் போல், இந்தக் காலமும் மிக நல்ல காலம்தான். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால்.

— ரால்ஃப் வால்டோ எமெர்ஸன்


 போன காலங்கள் இப்போதுள்ள காலங்களை விடச் சிறந்தவை, என்ற மயக்கம், எல்லாக் காலங்களிலும் ஓங்கி நின்றுள்ளது எனலாம்.

— ஹோரஸ் கிரீலி

 வாழ்வை அளக்க வேண்டியது, சிந்தனையாலும் செயலாலும், காலத்தால் அல்ல.

— ஸர் ஜான் லுப்பாக்

 மாட்சிமை மிக்க ஒரு மணி நேர வாழ்வு, நற்சாட்சியம் சொல்லப் பேரில்லா யுகத்திற்குச் சமம்.
— சார்ல்ஸ் மார்டான்ட்

 வாழ்க்கை, வாழ்வதில்தான் உள்ளது ஒவ்வொரு நாளின், மணியின், இழைமத்தில் உள்ளது என்ற உண்மையை, காலம் கடந்த பின் தான், நாம் உணர்கிறோம்.

— ஸ்டீஃபன் லீக்காக்

 காலம், பெரிதும் அரிதானது, உத்தமச் செயல்களைச் செய்து காலத்தைப் பயன்படுத்தும் மனிதன், மதிப்பு மிக்கவன்; ஒரு சமயம் கடந்து விட்ட காலம், ஒரு போதும் திரும்பாது.

— ஸ்ரீமத் ராஜேந்திர சூரி

 செல்வம் அருமையானது; அதனினும் அருமையானது மனித வாழ்க்கை; அனைத்திலும் அருமையானது காலம்.

— ஏ. வி. லல்வரவ்

 கண நேரச் சுணக்கமின்றி, முடிவில்லாத சுழற்சிதான், காலம். அதை வேறெந்த வகையிலும் கருத முடியாது.

— லியோ டால்ஸ்டாய்

 எல்லாவற்றிற்கும் உரிய காலம் ஒன்றுண்டு; விண்ணுலகத்தின் கீழ் ஒவ்வொரு குறிக்கோளுக்கும் குறித்த ஒரு காலம் ஒன்று உண்டு.

— ஸாலமன் மன்னன் (விவிலியம்)

 பிறக்க ஒரு காலம்; இறக்க ஒரு காலம்; நடவு செய்ய ஒரு காலம்; நட்டதைப் பிடுங்க ஒரு காலம்; கொல்ல ஒரு காலம்; குணமாக்க ஒரு காலம்; இடிக்க ஒரு காலம்; கட்ட ஒரு காலம்; அழ ஒரு காலம்; நகைக்க ஒரு காலம்; புலம்ப ஒரு காலம்; ஆடலாட ஒரு காலம்.

— ஸாலமன் மன்னன் (விவிலியம்)

 காலம் தாழ்த்திச் செய்யும் இயல்புடையவன், மிகுதியான கால அளவில் சிறிய காரியத்தைச் செய்து முடிப்பான். அச்சிறு செயலால் விளையும் சுருங்கிய பயனால் துன்பமும் எய்துவான்.

— சுக்கிர நீதி

 மக்கள், இறைவனால் கொடுக்கப் பெற்ற இரண்டு வரங்களை எப்போதும் மறந்து விடுகிறார்கள். ஒன்று நேரம். மற்றொன்று ஆரோக்கியம்.

— முகம்மது நபி

 விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்தே. மனிதன் உயிருக்கு அஞ்சிப் பின் வாங்கலாகாது. பாதையில் ஒரு கணம் கூட தாமதிக்கக் கூடாது. ஒரு கணம் கூடச் சோம்பியிருக்கக் கூடாது. தாமதம் செய்பவன் பாதையினின்று வலிந்து புறத்தேத் தள்ளப்படுகிறான்.

— பரீத் உத்தீன் சுதீதர்

 கண்ணைக் கலக்கும் கண்ணிர் எதையுமே, காலமும் பொறுமையும் துடைத்து விடும்.

— ப்ரெட் ஹார்ட்

 இரும்பு சூடாக இருக்கும் போதே அதை அடித்து உருவாக்க வேண்டும்.

— டிக்கன்ஸ்

 காலம் தவறாமையை வெற்றிகரமாகப் பின்பற்றினால் அது பிறருக்குத் திருப்தியளிக்கும். காலம் தவறுவது என்பது உறுதியற்ற தன்மையையும், மற்றவர்களின் வசதி பற்றிய கவலையின்மையையும், குறிக்கிறபடியால் பிறருக்கு அதிருப்தி தரும்.

— நிக்கல்ஸன்

 நேரத்தின் அருமை அந்தந்த நேரத்தில்தான் நமக்குத் தெரிய வரும். நேரம் தவறிப் போன பின்தான் அதன் அருமை தெரிய வரும். எந்தப் பொருளுக்கும் கையில் இருக்கும் போது மதிப்பிருப்பதில்லை. கைதவறிப் போன பின்பே அதற்கு அதிக மதிப்பு ஏற்படும்.

— லார்டு புக்மாஸ்டர்

 காலம் பொன்னை விட மதிப்பு உயர்ந்தது. பொன் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். காலம் போனால் மீண்டும் வராது.

— ஸ்மைல்ஸ்


 அற்பமான, பயனற்ற விஷயங்களில், நேரத்தைக் கூடுதலாகச் செலவழிப்பதை விட, ஓர் அறிவாளிக்குத் தகுதியற்றதும், வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை.

— பிளேட்டோ

 வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தைக் கண நேரமும் வீணாக்கக் கூடாது. காலத்தால் செய்யப்பட்டதுதான் வாழ்க்கை.

— சாண்டர்ஸ்

 காலத்தை வீணாக்குவது போன்ற சுலபமான காரியமும் இல்லை. அதைத் திருத்துவது போன்ற கடினமான காரியமும் இல்லை.

— ஹென்றி போர்டு

 நேரத்தை வீணாக்காதே. ஏதாவது உபயோக மானவற்றிலேயே உன்னுடைய எல்லா நேரத்தையும் ஈடுபடுத்து. அனாவசியமான செய்கைகளையெல்லாம் தவிர்த்து விடு. ஏனென்றால், வாழ்க்கையின் மூலப்பொருளே நேரம்தான்.

— பிராங்ளின்

 ஐயோ, காலம் பறந்து கொண்டிருக்கிறதே என்று உணர்கிறவனே உண்மையான ஞானி.

— தாந்தே

 காலத்தின் நிலையை அறிந்து கொள். காலமே உன் உயிர். அதை விணாக்குவது உன்னையே நீ கொலை செய்து கொள்வது போலாகும்.

— ஜேம்ஸ் ஆலன்

 காலத்தில் தாமதம் வேண்டாம். தாமதங்களால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்.

— ஷேக்ஸ்பியர்

 செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும், ஊதாரித்தனமுமாகும்.

— தியோப்ரேஸ்டஸ்

 மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்தியவரிடம் சென்று, நாம் அவற்றை எப்படி உபயோகித்தோம் என்பதைத் தெரிவிக்கும்.

— மில்டன்

 நம் கஷ்டங்களிலெல்லாம், தாமதத்தினால் ஏற்படும் கஷ்டங்களே மிக அதிகமாயும், அதிகப் பொருள் மதிப்புள்ளவையாயும் இருக்கின்றன.

— எட்வர்ட்ஸ்

 ஓடுவதால் பயனில்லை; குறித்த நேரத்திற்கு முன்பே புறப்படுவதுதான் அவசியம்.
— லா பான்டெய்ஸ்

 நான் எனக்குக் குறித்த நேரத்திற்குக் கால் மணி நேரம் முந்தியே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது.

— நெல்ஸன்

 காலம், சிலர் முழுவதையும் வீணாக்குகின்றனர். அநேகர் பெரும் பகுதியை வீணாக்குகின்றனர். ஆனால் அனைவரும் சிறிதேனும் வீணாக்காமல் இருப்பதில்லை.

— மாத்யு அர்னால்டு

 நாளை, நாளை என்று எதையும் தள்ளிப் போடாதே. உனக்கு நாளைய தினம் சூரியன் உதயமாகாமலேப் போகலாம்.

— சுரங்கீரீவ்

 நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்வில் மீண்டும் பெற முடியாப் பெரும் செல்வம் ஆகும்.

— கார்ல் மார்க்ஸ்

 நேரத்தைக் கடவுளுக்கு அடுத்தபடியாக மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.
— லவேட்டர்

 செல்வ நிலையைப் பார்ககினும், வறுமையிலுள்ள நண்பனிடம், குறித்த நேரம் தவறாமல் நீ செல்ல வேண்டும்.

— சிலோ

 ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப்பு உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிஷ நேரமும்.

— ஜான் மேஸன்

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p293.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License