இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

இரவீந்தரநாத் தாகூர் எண்ணக் களஞ்சியம்


* தன் காதலன் முன்பாக விரிந்து பரந்த தனது முகத்திரையை விலக்கிக் கொள்கிறது உலகம். அது அழிவற்ற ஒரு முத்தம் போல, ஒரு பாட்டைப் போன்று சிறியதாக ஆகிவிடுகிறது.

* ஒளியின் குழந்தைகளே மாந்தர்கள். தங்களைத் தாங்களே நன்கு அறியும் பொழுது, தாங்கள் அழியாநிலை பெற்றவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

* அமைதியாகிய கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் மாறி மாறி எழும் நுரைபோன்றது உலகம்.

* முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே குழந்தைகள் கூடுகின்றன.

* கானகத்தில் அலைந்து திரியும் பறவையாகிற எனது நெஞ்சம் விண்ணாகிய உன் கண்களைக் கண்டு விட்டது. தனித்து நிற்கிற அந்த விண்ணை நோக்கி நான் மேலும் மேலும் உயரே செல்வேனாக.

* அளவற்றது. தனது எல்லை என்பதை என்று மாந்தன் உணர்கிறானோ, என்று அவன் தெய்வீக நிலையை அடைகி றானோ, அந்த இறை உணர்வே அவனுள் உறைகிற படைப்பாளி.

* ஓசை களைப்புற்றிருக்கும் அந்தக் கங்குலில் கடலின் முணு முணுப்பு விண்ணை நிறைக்கிறது. அன்பு வழிபாடாக உருவெடுப்பதும் அந்த நேரத்தில்தான்.

* எல்லையற்ற வானகம் மேலே அசைவற்று இருக்கிறது. முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொண்டும் மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டும் குழந்தைகள் கூடுகின்றன.


* என் நெஞ்சத்தை நீ வருடி விடுகிறாய், அதன் ஆழ் பொருளை உணர்த்திட என் தனிமைக்கு நிழலளிக்கிறது இன்புற்றிருக்கும் விண்ணகம்.

* முழுமையான வைகறைப் பொழுது அருகில் நெருங்கி வருகிறது. அந்த நேரத்தில் இதர உயிர்களுடன் உனது உயிர் ஒன்றிவிடுகிறது. முடிவில் உன் குறிக்கோளையும் நீ புரிந்து கொள்கிறாய்.

* இருள் படர்ந்திருக்கும் சந்துகளிலும் நம்பிக்கை ஒளியை உறுதி செய்வது இறைவனால் மட்டுமே இயலும்.

* சிரிப்புடன் பொங்கி எழுகிறது கடல். மென்மையான ஒளியுடன் முறுவலிக்கிறது கடற்கரை. சேயின் தொட்டிலை ஆட்டும் தாய்போல இருக்கும் அலைகள் குழந்தையின் செவிகளில் விழும்படிப் பொருளற்ற தாலாட்டைப் பாடுகின்றன. குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறது கடல்; வெளிறிய முறுவல் பூக்கிறது கடற்கரை!

* கருப்பையிலிருந்து வெளியேறிய பின்னர்தான் குழந்தை தாய் முகம் காண்கிறது. உன்னிடமிருந்து நான் பிரியும்போதுதான் உன் முகத்தை நான் எளிதில் காண முடியும்.

* மனத்தின் கிளர்ச்சியற்ற இருண்ட குகைகளில், பகலில் பயணிகள் விட்டுச் சென்ற சிதறல்களைக் கொண்டு, மனக் கனவுகள் தங்களின் கூடுகளைக் கட்டிக் கொள்கின்றன.

* என்னை நெருங்கி நெருங்கி அவன் வருவதை நான் உணர்கிறேன்; என் நெஞ்சம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது.

* ஊதல் பரிசு நாணமடைகிறது, தன் பெயரை அது சொல்வதேயில்லை, புழுதியுனூடே மகிழ்ச்சி அதிர்வைப் பரப்பியவாறே நிழலின் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து திரிகிறது.

* பாதையே இல்லா வானத்திலே சூறைக்காற்று அலைந்து திரிகிறது; சுவடு தெரியாதக் கடலிலே கப்பல்கள் மோதியுடைகின்றன. காலன் உலா வருகிறான்; குழந்தைகள் விளையாடுகின்றன.

* பசும்புல் தரையிலிருந்து கிளர்த்தெழும் மலர் கண்ணுக்கு எத்தனை அருகில் உள்ளதோ, அதைப் போன்றே அவள் என் நெஞ்சத்தின் அருகில் இருக்கிறான்.


* காணிக்கைகள் கொண்டு இறைவனை நெருங்கும் பொழுது, உண்மையிலேயே நாம் அவனைச் சந்திக்கிறோம். வரங்களை வேண்டிச் செல்லும் பொழுது, அவ்வாறில்லை.

* குழந்தாய், அரசன் உன்னை நேசிக்கிறான். உன்னைக் காண அவனே வந்து கொண்டிருக்கிறான்.

* இந்தப் புல், இப்புழுதி, அந்த விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் இவற்றின் மறைவில் நிற்கும் நீ ஓவியமா? வெறும் ஓவியமா?

* அவ்வப்பொழுது உனது உயர்ந்த கேட்போர் அவையிலிருந்து கீழிறங்கி வா. இன்ப துன்பங்களுக்கிடையே வாழ்ந்து பார். என் நெஞ்சத்தைத் தொடுமாறு இசை பொழிவாய்.

* என் தலைவா, தந்திகள் மீட்டப்படும்போது அதிகமாக வலி ஏற்படுகிறது.

* இசைக்கத் தொடங்கு; என் வலியை மறந்திருப்பேனாக. கருணையற்ற இந்த நாட்களில் உன் உள்ளத்தில் நுகர்ந்ததை நான் அதில் உணர்வேனாக.

* பாப்பாவுக்குத் தெரிந்த அறிவுச் சொற்கள் எத்தனையோ! எனினும் அவற்றின் பொருளை அறியக் கூடியவர் இவ்வுலகில் மிகச் சிலர் தான்!

* காலைப் பொழுதில் ஒளியாகிய தன் உள்ளத்தை உலகம் திறந்து வைத்துள்ளது. வெளியே புறப்பட்டு, வருவாய் என் உள்ளமே. அன்புடன் அதைச் சந்திப்பாயாக.

* மனித உலகில் சிறப்பானவை யாவற்றையும் இறைவனிடத்தில் மனிதன் வைத்துள்ள நம்பிக்கை எழுப்பியுள்ளது.

* திடீரென எவ்வாறு ஏன் நெஞ்சம் தன் வாயில்களைத் திறந்து வைத்துள்ளது? எனக்குப் புரியவில்லை.

* அன்பிற்குரியவளே, உன்னை நான் விரும்புகிறேன். என் அன்பே என்னை மன்னித்து விடு. வழிதவறிய பறவையின் நிலையில், நான் இருக்கிறேன்.

* நீரோடையின் முணுமுணுப்பைப் போன்று, என் அன்புக்குரியவளுடன் எனது பாடல்கள் ஒன்றிப் போயுள்ளன.

* என் தலைவனே, உனது பேச்சு எளிமையானது, ஆனால் உன்னை பற்றிப் பேசுகிறவர்களின் பேச்சு அப்படியில்லை.

* என் குழந்தையின் தனி உலகத்துக்கு நடுவில், அமைதி நிலவும் ஒரு சிறுமூலை கிடைத்தால் கூடப் போதும்; அவ்வளவு ஆர்வம் எனக்கு:

* சுமையாயிருக்குமாகில் கொடையாளிகளின் பட்டியலிலிருந்து. என் பெயரை நீக்கி விடுவாய். ஆனால் என் பாடலையன்று.


* களைத்துள்ள உறுப்புகளுக்குத் தூக்கம் போன்று அவள் எனக்கு இனியவள்.

* என் நண்பனே, எனது அன்பு என்றுமே உனக்கு சுமையாயிருந்து விடக்கூடாது. அது பலனளிப்பது என்று புரிந்து கொள்.

* மனிதன் குழந்தையாகவே பிறக்கிறான். வளர்ச்சியின் ஆற்றலே அவனது ஆற்றல்.

* என் அன்பே, தோட்டத்தில் என் கூட உலாவிட வா. உன் கண்ணில் படுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கும் ஒளி வீசும் மலர்களைக் கடந்து செல்வாய்.

* இருளின் நுழைவாயில் முன்னர் பகல் தன் யாழினை மீட்டுகிறது. மறைவதாயிருந்தாலும் முதலில் தோன்று வதைக் கண்டே பகல் மனநிறைவு அடைகிறது.

* ஒவ்வொரு விதையிலும் உயிர்த்தன்மை இருப்பது போல, இறைவன் என்னுள் இருக்கிறான், உன்னிடமும் இருக்கிறான்.

* அவள் மட்டும் என்னுடையவளாய் இருந்து விட்டால், இவ் உலகின் மிகச் சிறிய மூலையிலும் கூட நான் மனநிறைவுடன் இருப்பேன்.

* என் விருப்புகள் பித்தானவை. இறைவா, உனது பாடல்கள் இசைக்கப்படும் பொழுது, அவை உரக்கக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றன. உனது பாடங்களைக் கேட்க மட்டும் என்னை அனுமதிப்பாயாக.

* பலர் பேருலகமாகக் காண்பதை என்னிடமுள்ள இந்த ஒன்றே நன்கு அறிந்து வைத்துள்ளது.

* என் அன்புக்குரியவன் எனது நெஞ்சத்திலேயே வாழ்கிறான். அதனால் தான் அவனை நான் எங்கும் காண்கிறேன்.


* கடலருகில் தோட்டத்தில், நெருங்கி வரும் கோடைக் காலத்தில் அன்பு மலருமாக.

* பேரண்டத்தின் அடி ஆழத்திலிருந்து கிளம்பிடும் எதிரொலி நம்மிடம் அன்பு செலுத்துபவனின் முகத்திலிருந்து நமது நெஞ்சத்தில் எதிரொலிக்கிறது.

* மிகச் சிறந்ததை நான் தேர்ந்தெடுக்க இயலாது. மிகச் சிறந்தது எதுவோ அது என்னைத் தேர்ந்தெடுக்கிறது.

* தன்னைக் கடந்த வாழ்க்கையில்தான் மனிதன் உண்மையில் வாழ்கிறான். அறிந்திறாத ஆண்டைக்காக அவன் உழைக்கிறான், உலகில் பிறந்திராதவர்களுக்காக சேமித்து வைக்கிறான்.

* எவனொருவனின் பேச்சு தூய்மையாயிருக்கிறதோ, எவனொருவன் செருக்கையும், தற்பெருமையையும் விட்டொழித்திருக்கிறானோ அத்தகையவன் உண்மையான பெயரடைகிறான்.

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p296.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License