
அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் 'கோழை' என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.
- பெடிட்லென்

ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.
- டெனிஸன்

குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும்.
- பால்ரிச்சர்ட்

உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு.
- பப்ளியஸ் ஸைரஸ்

உபகாரத்தை விட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும்.
- ஆவ்பரி

என்னைப்ப்ற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடைக்கு ஒப்பானவன்.
- பால் ரிச்சர்ட்

சில தோஷங்கள் குணங்களுடன் உறவு கொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.
- கோல்ட்ஸ்மித்

குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம்.
- லா புரூயர்

தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன் தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை.
- ஹாட்ஜஸன்

கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது.
- ஆங்கிலப் பழமொழி

ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான்.
- வாட்ஸ்

குழந்தைகள் கற்கும் பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வது போல், சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.
-லெய்ட்டன்

பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும்.
- அடிஸன்
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.