கடவுளும் சமயமும் இல்லாவிட்டால்...!

கர்ப்பூரம் தன்னைக் கரைத்துக் கொண்டு பேரொளியைத் தருகிறது. ஊதுபத்தியும் தன்னை அழித்துக் கொண்டே நறுமணம் தருகிறது. ஆன்மாவை மூடியுள்ள ஆணவமும் இவ்வாறு கரைந்து அழிந்தால்தான் பரம்பொருளாகிய இறைவனை உணரமுடியும்.
- இந்து மதம்

சஞ்சலமானதும் நிலையற்றதுமான மனம் எந்தெந்தக் காரணங்களைப் பற்றி வெளியே வந்து திரியுமோ, அந்தந்தக் காரணங்களிலிருந்து மனதை மீட்டு அடக்கி ஆத்மாவில் (இறைவனிடம்) நிலைநிறுத்த வேண்டும்.
- கீதை

சாஸ்திரம் எல்லையற்றது, அறிய வேண்டியது அதிகம், காலம் குறைவு, இடையூறுகள் பல. இந்த நிலையில் எது முக்கியமாக இருக்கிறதோ அதை நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் கிரகிப்பது போல் ஒருவன் நாடியடைய வேண்டும்.
- விவேகசூடாமணி

நல்லவர்கள் தர்மத்திலிருந்து தவற மாட்டார்கள். கவலைப்பட மாட்டார்கள். அழிய மாட்டார்கள். நல்லவர்களின் தொடர்பு ஒரு போதும் வீணாகாது. நல்லவர்களிடம் பயம் கிடையாது. நல்லவர்கள் சத்தியத்தால் சூரியனை இயக்குகிறார்கள். பூமியை நிலைத்து நிற்க வைக்கிறார்கள். நல்லவர்கள் இடையே நல்லவர்கள் கஷ்டப்படுவதில்லை. இது பெரியோர்கள் சொல்லும் சாசுவதமான நெறி.
– மகாபாரதம்

பக்தன் உலகியல் இழப்பைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவன் தன்னையும் தன்னுடைய எல்லாச் செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டான். ஆனால் பக்தியில் சித்தி (பூரணத்துவம்) ஏற்படாத வரையில் உலக விவகாரங்களைத் துறந்துவிடக் கூடாது; கர்மாக்களின் பயனைத் துறந்து (நிஷ்காம உணர்வுடன்) அந்த பக்திக்கான ஆன்மிகச் சாதனைகளைச் செய்ய வேண்டும்.
- நாரத பக்திசூத்திரம்

வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாவமற்றவரும், ஆசை வழியில் அழியாதவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், பிரம்மஞானிகளில் சிறந்தவரும், விறகில்லாத நெருப்பு போல் அமைதியாக இருப்பவரும், கடல் போல் கருணையுள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு.
- விவேகசூடாமணி

எனக்கு உரிய கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது காலதேவதை தன் கடமையைச் செய்ய என்னை நெருங்கி, தனக்கு உரிய வேலையை என்னிடம் செய்யுமானால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்பேன். கடமையைச் செய்து கொண்டே விடுதலை பெறுவதற்கு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்!
- காந்தியடிகள்

உங்கள் வருகையால் எவர் முகத்தில் மகிழ்ச்சியும், விழிகளில் அன்பும் இல்லையோ அவர்களது இல்லத்தில் மேகம் தங்கி மழை பொழிந்தாலும், அங்கே செல்ல வேண்டாம். சென்றால், உங்களுக்கு இகழே ஏற்படும்.
- துளசிதாசர்

கர்மயோகியின் காரியம் அவனை இந்தப் படைப்பு முழுவதோடும் இணைத்து விடுகிறது. துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் உணவு கொள்ளாமை தாவர சிருஷ்டியுடன் நமக்கு அன்புப் பிணைப்பை உண்டாக்குகிறது.
- விநோபாஜி

உண்டு சுவை கண்டவனும் உணர்ச்சி இன்பம் கண்டவனும் விடான்.
- குரங்காட்டிச் சித்தர்

இரண்டு பரஸ்பர விரோதிகளின் உள்ளங்கள் ஒன்று சேருமிடத்தில் பகவானுக்கு ஆசனம் விரிக்கப்படுகிறது.
- சரத்சந்திர சட்டர்ஜி

ஒருவன் ஒரு பெரிய காரியத்தில் முழுவதும் தன்னை ஈடுபடுத்தினால் அடைத்திருந்த கதவுகள் திறக்கும். அசாத்தியமாகத் தோன்றுவது சாத்தியமாகும்.
- ஜகதீஷ் சந்திரபோஸ்

ரதத்தின் மீது உட்கார்ந்திருக்கும் ஈ 'என்னால் எத்தனை புழுதி கிளம்புகிறது' என்று நினைக்கிறது. அது போலவே பெரும் காரியங்கள் நடைபெறும் போது, தன்னால் அது நடப்பதாக அகந்தை கொண்டவன் எண்ணுகிறான்.
- பேகன்

நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாகப் பழகிய தொழிலாளியிடமேக் கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பைப் பசப்பில் பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடமேக் கொடுக்கிறோம்.
- பிளாட்டோ

அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.
- வினோபாஜி

எந்த உயிரையும் நான் கொல்ல மாட்டேன்; பிறரைக் கொண்டு எந்த உயிரையும் கொல்விக்கவும் மாட்டேன்; எந்த உயிரும் கொல்லப்படுவதற்கு உடன்படவும் மாட்டேன்.
- மகாவீரர்

எல்லோரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்.
- அசோக சக்கரவர்த்தி

ஒருவனுடைய ஆசைகள் வளர வளர, அவனுடைய தேவைகளும் வளர்ந்து கொண்டே போகும்.
- பிளேட்டோ

உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகத்தைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.
- கதே

கோபத்துடன் காரியம் செய்பவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர்கள்.
- பிரெஞ்சு பழமொழி

நீதிக்கும் நேர்மைக்கும் ஒத்திருக்கும் எந்தக் கொள்கையும் மதத்திற்கு விரோதமாக இருக்க முடியாது.
- வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டன்

நாக்கு கொடிய மிருகம்; ஒரு முறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்.
- அரிஸ்டாடில்

உள்ளத்தின் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
- ஷேக்ஸ்பியர்

மனம் பிறழாமல் இறை நெறியில் ஆழ்ந்துவிடுபவனுக்கு, பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள், மித்திரர்கள் பக்கமுண்டு, பவிசுண்டு, தவிசுண்டு, யமபடர் அணுகாத கதி உண்டு, ஞானமாகிய கதிருண்டு, காய சித்திகள் உண்டு.
- தாயுமானவர்

மனிதனுக்குப் பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடைக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடைய வொட்டாமல் தடுக்கின்றன.
- திருநாவுக்கரசர்

விஞ்ஞானத்தின் புனிதமான கடமை உண்மையை நாடுவதாகவே இருக்க வேண்டும்.
- சரோஜினி தேவி

சுமையைத் தாங்கி அலுக்காமல் உழைக்க வேண்டும். வெயிலையும் குளிரையும் பாராட்டக் கூடாது. எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இவை மூன்றையும் கழுதையிடமிருந்து கற்றுக்கொள்.
- சாணக்கியன்

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போனால் அரை நிமிடம் கூட மக்கள் இந்த உலகில் வாழ்க்கையை நடத்த முடியாது. இந்த மனித சமூகம் அத்தகையதோர் ஒற்றுமை இல்லாவிட்டால் கட்டாயம் அழிந்தே தீரும்.
- சி.ஆர்.தாஸ்

உன்னையும் என்னையும் பிரித்திருப்பது இந்தச் சுவர்தான். இந்தச் சுவரை இடித்துத் தள்ளு. பிறகு ஒருவருடைய முகத்தை மற்றொருவர் தெளிவாகக் காணலாம். என்னைச் சேவிக்க இந்த வேற்றுமை உணர்வுகளை அகற்று. இவ்விதமே இடைவிடாமல் சிந்தித்தால் அதன் உண்மையை உணர்வாய்.
- ஷீரடி சாயிபாபா

நல்ல அதிர்ஷ்டத்தை நாம் அடிமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அடிமைப்படுத்திவிடும்.
- சைரஸ்

விதியால் வந்த சுகமும், விலக்க முடியாத துக்கமும் தெய்வப்பிரசாதம் என்று வணக்கத்துடன் ஏற்றுக்கொள். அறவழியினின்றும் தவறிச் செல்லாதே. தவறினால் மிக மிகப் பெரும் கேட்டை நீ அடைவாய்!
- ஒரு சாது

அவசியமானால் நீ உன் உடைகளைப் பற்றி கவனிக்காமலிருக்கலாம். ஆனால், ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
- மார்க்ட்வெயின்

கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால், செய்ய வேண்டிய காரியத்தை மனிதன் செய்ய மாட்டான்; அப்போது சாஸ்திரம் என்ற விளக்குத்தான் வெளிச்சம் காட்டும்.
- மகாகவி பாரதியார்

பயம் இருக்குமிடத்தில் சந்தோஷம் இருப்பதில்லை.
- செனகோ

படித்த முட்டாள், படிக்காத முட்டாளை விட மோசமானவன்
- நிக்கல்ஸன்

உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்தாலும், அந்நெய் இருக்கும் கலத்தை எறும்புகள் சுற்றிக்கொண்டு நிற்கும். அது போல, மறந்தாகிலும் அரைக்காசு கொடாதவராயினும் செல்வந்தர்களை நூறு பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
- நாலடியார்

கடவுளும் சமயமும் இல்லாவிட்டால் மனிதரின் வாழ்க்கை பயனற்றதாகும்; வாழ்க்கையில் எவ்வித உயர்ந்த நோக்கமும் இல்லாமற் போகும்.
- டில்லோட்ஸன்

வாழ்வதில் நான் என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; ஆனால், முறையாக வாழ்வதில் நான் என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
- மகா அலெக்ஸாண்டர்

கல்லைச் செதுக்கி உருவாக்குவது போல மனிதனை உருவாக்க முடியாது. தனக்குத்தானே உருவாகும்படி அவனுக்குக் கற்பிக்க முடியும்.
- கே.எம். முன்ஷி

வேதத்தினால் விளக்கப்பட்டிருப்பதும், இம்மையிலும் மறுமையிலும் மேன்மை எய்துவதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் விரும்புவதும் எதுவோ அதுவே தர்மம்.
- மீமாம்ஸா தரிசனம்

உலகம் என்ற நச்சு மரமே எல்லா ஆபத்துக்களையும் விளைவிக்கிறது. ஆனால், அது அறிவிலிகளை மட்டும் வதைப்பதாகையால் அறிவுள்ளவர்கள் முயன்று தம் அறியாமையை அகற்றிக் கொண்டு விடவேண்டும்.
- யோக வாசிட்டம்

மானிடப் பிறப்பாய் பிறந்த நாம், நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை உரிய நேரத்திலேயே செய்து முடித்துவிட வேண்டும்.
- வடலூர் வள்ளலார்

நாம் தர்மத்தைக் காத்தால் அதுவும் நம்மைக் காக்கிறது. நாம் தர்மத்தை அழிக்க முற்பட்டால் அது நம்மையே அழித்துவிடும்.
- மகாபாரதம்
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.