இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

கடவுளும் சமயமும் இல்லாவிட்டால்...!


 கர்ப்பூரம் தன்னைக் கரைத்துக் கொண்டு பேரொளியைத் தருகிறது. ஊதுபத்தியும் தன்னை அழித்துக் கொண்டே நறுமணம் தருகிறது. ஆன்மாவை மூடியுள்ள ஆணவமும் இவ்வாறு கரைந்து அழிந்தால்தான் பரம்பொருளாகிய இறைவனை உணரமுடியும்.

- இந்து மதம்

 சஞ்சலமானதும் நிலையற்றதுமான மனம் எந்தெந்தக் காரணங்களைப் பற்றி வெளியே வந்து திரியுமோ, அந்தந்தக் காரணங்களிலிருந்து மனதை மீட்டு அடக்கி ஆத்மாவில் (இறைவனிடம்) நிலைநிறுத்த வேண்டும்.

- கீதை

 சாஸ்திரம் எல்லையற்றது, அறிய வேண்டியது அதிகம், காலம் குறைவு, இடையூறுகள் பல. இந்த நிலையில் எது முக்கியமாக இருக்கிறதோ அதை நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் கிரகிப்பது போல் ஒருவன் நாடியடைய வேண்டும்.

- விவேகசூடாமணி

 நல்லவர்கள் தர்மத்திலிருந்து தவற மாட்டார்கள். கவலைப்பட மாட்டார்கள். அழிய மாட்டார்கள். நல்லவர்களின் தொடர்பு ஒரு போதும் வீணாகாது. நல்லவர்களிடம் பயம் கிடையாது. நல்லவர்கள் சத்தியத்தால் சூரியனை இயக்குகிறார்கள். பூமியை நிலைத்து நிற்க வைக்கிறார்கள். நல்லவர்கள் இடையே நல்லவர்கள் கஷ்டப்படுவதில்லை. இது பெரியோர்கள் சொல்லும் சாசுவதமான நெறி.

– மகாபாரதம்

 பக்தன் உலகியல் இழப்பைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவன் தன்னையும் தன்னுடைய எல்லாச் செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டான். ஆனால் பக்தியில் சித்தி (பூரணத்துவம்) ஏற்படாத வரையில் உலக விவகாரங்களைத் துறந்துவிடக் கூடாது; கர்மாக்களின் பயனைத் துறந்து (நிஷ்காம உணர்வுடன்) அந்த பக்திக்கான ஆன்மிகச் சாதனைகளைச் செய்ய வேண்டும்.

- நாரத பக்திசூத்திரம்

 வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாவமற்றவரும், ஆசை வழியில் அழியாதவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், பிரம்மஞானிகளில் சிறந்தவரும், விறகில்லாத நெருப்பு போல் அமைதியாக இருப்பவரும், கடல் போல் கருணையுள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு.

- விவேகசூடாமணி


 எனக்கு உரிய கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது காலதேவதை தன் கடமையைச் செய்ய என்னை நெருங்கி, தனக்கு உரிய வேலையை என்னிடம் செய்யுமானால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்பேன். கடமையைச் செய்து கொண்டே விடுதலை பெறுவதற்கு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்!

- காந்தியடிகள்

 உங்கள் வருகையால் எவர் முகத்தில் மகிழ்ச்சியும், விழிகளில் அன்பும் இல்லையோ அவர்களது இல்லத்தில் மேகம் தங்கி மழை பொழிந்தாலும், அங்கே செல்ல வேண்டாம். சென்றால், உங்களுக்கு இகழே ஏற்படும்.

- துளசிதாசர்

 கர்மயோகியின் காரியம் அவனை இந்தப் படைப்பு முழுவதோடும் இணைத்து விடுகிறது. துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் உணவு கொள்ளாமை தாவர சிருஷ்டியுடன் நமக்கு அன்புப் பிணைப்பை உண்டாக்குகிறது.

- விநோபாஜி

 உண்டு சுவை கண்டவனும் உணர்ச்சி இன்பம் கண்டவனும் விடான்.

- குரங்காட்டிச் சித்தர்

 இரண்டு பரஸ்பர விரோதிகளின் உள்ளங்கள் ஒன்று சேருமிடத்தில் பகவானுக்கு ஆசனம் விரிக்கப்படுகிறது.

- சரத்சந்திர சட்டர்ஜி

 ஒருவன் ஒரு பெரிய காரியத்தில் முழுவதும் தன்னை ஈடுபடுத்தினால் அடைத்திருந்த கதவுகள் திறக்கும். அசாத்தியமாகத் தோன்றுவது சாத்தியமாகும்.

- ஜகதீஷ் சந்திரபோஸ்

 ரதத்தின் மீது உட்கார்ந்திருக்கும் ஈ 'என்னால் எத்தனை புழுதி கிளம்புகிறது' என்று நினைக்கிறது. அது போலவே பெரும் காரியங்கள் நடைபெறும் போது, தன்னால் அது நடப்பதாக அகந்தை கொண்டவன் எண்ணுகிறான்.

- பேகன்

 நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாகப் பழகிய தொழிலாளியிடமேக் கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பைப் பசப்பில் பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடமேக் கொடுக்கிறோம்.

- பிளாட்டோ

 அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.

- வினோபாஜி

 எந்த உயிரையும் நான் கொல்ல மாட்டேன்; பிறரைக் கொண்டு எந்த உயிரையும் கொல்விக்கவும் மாட்டேன்; எந்த உயிரும் கொல்லப்படுவதற்கு உடன்படவும் மாட்டேன்.

- மகாவீரர்

 எல்லோரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்.

- அசோக சக்கரவர்த்தி

 ஒருவனுடைய ஆசைகள் வளர வளர, அவனுடைய தேவைகளும் வளர்ந்து கொண்டே போகும்.

- பிளேட்டோ


 உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகத்தைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.

- கதே

 கோபத்துடன் காரியம் செய்பவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர்கள்.

- பிரெஞ்சு பழமொழி

 நீதிக்கும் நேர்மைக்கும் ஒத்திருக்கும் எந்தக் கொள்கையும் மதத்திற்கு விரோதமாக இருக்க முடியாது.

- வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டன்
 நாக்கு கொடிய மிருகம்; ஒரு முறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்.

- அரிஸ்டாடில்

 உள்ளத்தின் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

- ஷேக்ஸ்பியர்

 மனம் பிறழாமல் இறை நெறியில் ஆழ்ந்துவிடுபவனுக்கு, பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள், மித்திரர்கள் பக்கமுண்டு, பவிசுண்டு, தவிசுண்டு, யமபடர் அணுகாத கதி உண்டு, ஞானமாகிய கதிருண்டு, காய சித்திகள் உண்டு.

- தாயுமானவர்

 மனிதனுக்குப் பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடைக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடைய வொட்டாமல் தடுக்கின்றன.

- திருநாவுக்கரசர்

 விஞ்ஞானத்தின் புனிதமான கடமை உண்மையை நாடுவதாகவே இருக்க வேண்டும்.
- சரோஜினி தேவி

 சுமையைத் தாங்கி அலுக்காமல் உழைக்க வேண்டும். வெயிலையும் குளிரையும் பாராட்டக் கூடாது. எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இவை மூன்றையும் கழுதையிடமிருந்து கற்றுக்கொள்.

- சாணக்கியன்

 ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போனால் அரை நிமிடம் கூட மக்கள் இந்த உலகில் வாழ்க்கையை நடத்த முடியாது. இந்த மனித சமூகம் அத்தகையதோர் ஒற்றுமை இல்லாவிட்டால் கட்டாயம் அழிந்தே தீரும்.

- சி.ஆர்.தாஸ்

 உன்னையும் என்னையும் பிரித்திருப்பது இந்தச் சுவர்தான். இந்தச் சுவரை இடித்துத் தள்ளு. பிறகு ஒருவருடைய முகத்தை மற்றொருவர் தெளிவாகக் காணலாம். என்னைச் சேவிக்க இந்த வேற்றுமை உணர்வுகளை அகற்று. இவ்விதமே இடைவிடாமல் சிந்தித்தால் அதன் உண்மையை உணர்வாய்.

- ஷீரடி சாயிபாபா

 நல்ல அதிர்ஷ்டத்தை நாம் அடிமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அடிமைப்படுத்திவிடும்.
- சைரஸ்

 விதியால் வந்த சுகமும், விலக்க முடியாத துக்கமும் தெய்வப்பிரசாதம் என்று வணக்கத்துடன் ஏற்றுக்கொள். அறவழியினின்றும் தவறிச் செல்லாதே. தவறினால் மிக மிகப் பெரும் கேட்டை நீ அடைவாய்!

- ஒரு சாது

 அவசியமானால் நீ உன் உடைகளைப் பற்றி கவனிக்காமலிருக்கலாம். ஆனால், ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

- மார்க்ட்வெயின்

 கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால், செய்ய வேண்டிய காரியத்தை மனிதன் செய்ய மாட்டான்; அப்போது சாஸ்திரம் என்ற விளக்குத்தான் வெளிச்சம் காட்டும்.

- மகாகவி பாரதியார்

 பயம் இருக்குமிடத்தில் சந்தோஷம் இருப்பதில்லை.

- செனகோ

 படித்த முட்டாள், படிக்காத முட்டாளை விட மோசமானவன்

- நிக்கல்ஸன்

 உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்தாலும், அந்நெய் இருக்கும் கலத்தை எறும்புகள் சுற்றிக்கொண்டு நிற்கும். அது போல, மறந்தாகிலும் அரைக்காசு கொடாதவராயினும் செல்வந்தர்களை நூறு பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

- நாலடியார்

 கடவுளும் சமயமும் இல்லாவிட்டால் மனிதரின் வாழ்க்கை பயனற்றதாகும்; வாழ்க்கையில் எவ்வித உயர்ந்த நோக்கமும் இல்லாமற் போகும்.

- டில்லோட்ஸன்

 வாழ்வதில் நான் என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; ஆனால், முறையாக வாழ்வதில் நான் என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- மகா அலெக்ஸாண்டர்

 கல்லைச் செதுக்கி உருவாக்குவது போல மனிதனை உருவாக்க முடியாது. தனக்குத்தானே உருவாகும்படி அவனுக்குக் கற்பிக்க முடியும்.

- கே.எம். முன்ஷி


 வேதத்தினால் விளக்கப்பட்டிருப்பதும், இம்மையிலும் மறுமையிலும் மேன்மை எய்துவதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் விரும்புவதும் எதுவோ அதுவே தர்மம்.

- மீமாம்ஸா தரிசனம்

 உலகம் என்ற நச்சு மரமே எல்லா ஆபத்துக்களையும் விளைவிக்கிறது. ஆனால், அது அறிவிலிகளை மட்டும் வதைப்பதாகையால் அறிவுள்ளவர்கள் முயன்று தம் அறியாமையை அகற்றிக் கொண்டு விடவேண்டும்.

- யோக வாசிட்டம்

 மானிடப் பிறப்பாய் பிறந்த நாம், நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை உரிய நேரத்திலேயே செய்து முடித்துவிட வேண்டும்.

- வடலூர் வள்ளலார்

 நாம் தர்மத்தைக் காத்தால் அதுவும் நம்மைக் காக்கிறது. நாம் தர்மத்தை அழிக்க முற்பட்டால் அது நம்மையே அழித்துவிடும்.

- மகாபாரதம்

தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p310.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License