கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கலாமா?
உ. தாமரைச்செல்வி.

அடக்கம் என்ற வேரிலிருந்துதான் தெய்விகக் குணம் கிளைத்து வளர்கிறது.
- மூர்

அவிழ்த்துவிடப்பட்ட யானையானது மரங்களையும் செடிகளையும் வேரோடு பிடுங்கிக்கொண்டு போகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தினதும் அது சாந்தாமாகி விடுகிறது. அதுபோல, அடக்கிஆளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகின்றது. விவேகம் என்ற அங்குசத்தால் இடிக்கப்பட்டதும் அது சாந்தமாக அமைகிறது.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு, ஈரமும் இரக்கமும் கொண்டு நெஞ்சில் அன்போடு, இரகசியமான பகைமையும் இல்லாமல் நாம் வாழ்வோமாக. இந்த அன்பு பரவுவதற்கு ஓர் எல்லையே இல்லை. இது மிகவும் பெரியதாகவும் எல்லையற்றதாகவும் வளர்ந்துவிடும். இந்த அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்புக்கும் மனக் கசப்புக்கும் இடமே இல்லை.
- புத்தர்

இறைவன் சத்தியத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குபவன். நீ அவனை அனுபூதியில் உணர்கிற வரையில் அவனுடைய திருநாமத்தை ஜபித்துக்கொண்டிரு.
- குரு நானக்

இறைவனை நேரில் காண்பது போல் அவனை வணங்கு. ஏனென்றால், நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
- நபிகள் நாயகம்

துறவு என்பது வெளிவேஷமல்ல. அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய வெற்றியாகும்.
– ராஜாஜி

தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக்கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்காமல், நான் பிறரைப் புரிந்துகொள்ள முயல் வேனாக. பிறர் என்னை நேசிகட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்பேனாக.
- புனித பிரான்ஸிஸ்

பலவீனம் உள்ளவனாகவும் தீயவனாகவும் இருப்பது தனது இயற்கைத் தன்மை என்று மனிதன் நினைத்துக்கொள்வது பெரும் தவறாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வலிமை மிக்க தெய்வசக்தி குடிகொண்டிருக்கிறது. அவனுடைய பழக்க வழக்கங்களும் ஆசைகளும் எண்ணங்களும்தாம் நலிவுற்றும் தீமை நிறைந்தும் இருக்கின்றன. ஆனால் அவனது ஆத்மா பரிசுத்தமாகவே இருக்கிறது.
– ரமண மகரிஷி

மனச்சாட்சியே அவரவருக்குக் காவலாக நின்றால், நாடு மாசற்று விளங்கும். ஒரு நாட்டிற்கு ஆயுதப் படையினும் அறவோர்க் கூட்டமே முக்கியத் தேவையாகும்.
- சுத்தானந்த பாரதி

மனித உடலை ஆபரணங்கள் அழகுபடுத்துவது போல், தெய்வத்தன்மை வாய்ந்த சாதகனை உண்மை, அடக்கம், அன்பு, தயை, காருண்யம் போன்றவை அழகுபடுத்துகின்றன.
- சந்த் ஞானதேவர்

தீர புருஷர்கள், நீதியறிந்த பெரியோர்கள் திட்டினாலும், புகழ்ந்தாலும், செல்வம் வந்தடைந்தாலும், செல்வம் அழிந்து போனாலும், இன்றே மரணம் வரினும் சரி, அல்லது நீண்ட நாள் கழித்து வருவதானாலும் சரி, நியாய வழியிலிருந்து ஓர் அடிகூட மாறிச் செல்லமாட்டார்கள்.
- நீதி சதகம்

பெரும்பாலோர் தங்கள் நலத்தையே தாங்கள் தேடிக்கொள்கிறார்கள். சிற்சிலர் தங்கள் உடன் பிறப்பாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நலன் செய்கிறார்கள். வேற்றுமையின்றி எல்லோருக்கும் நலம் செய்பவர்களே பாராட்டுக்கு உரியவராவர்.
- துளசிதாசர்

அஞ்சி ஒடுங்கிக் கொண்டிருக்கும் மக்கள் சேற்றிலே வேரற்றுக் கிடக்கும் செடி கொடிகளைப் போல் அழுகிப்போவர்.
- மாக்ஸிம் கார்க்கி

பெருமைக்காரன் கடவுளை இழக்கிறான். பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான். கோபக்காரனோ தன்னையே இழந்துவிடுகிறான்.
- மாக்த்ஸ்ஸோ

மனிதர்களிடமே நீ நம்பிக்கை வை. அவர்கள் உன்னிடம் விசுவாசமாகவே இருப்பார்கள். அவர்களைப் பெரிய மனிதர்கள் போல் நடத்து. அவர்கள் உன்னிடம் பெரிய மனிதர்கள் போல நடந்து கொள்வார்கள்.
- எமர்ஸன்

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
- சாணக்கியர்

பணம் சேரச் சேர மனமும் மாறிக்கொண்டே போகும். பணத்தாசை பிடித்தவர்களுக்கு உறவினர் இருக்க மாட்டார்கள். பெரியோரிடமும் அவர்களுக்கு மதிப்பு இராது.
- சமஸ்கிருதப் பழமொழி

`குழந்தையாக இரு’ என்று உபநிஷதம் சொல்கிறது. ஏனெனில் அது கபடம் இல்லாதது. எனவே அது கடவுளுக்கு ஒப்பாகும்.
- காஞ்சிப் பெரியவர்

நேர்மையான மனம் படைத்தவனுக்குச் சட்டம்தான் இறைவன். ஆனால் முட்டாள்களுக்குக் கேளிக்கைகள்தாம் இறைவன்.
- பிளேட்டோ

ஆசையை விட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது. சிற்றின்ப நாட்டம் இல்லாதவனுக்கு, தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆசை இருக்காது. பேச்சில் கள்ளம் கபடம் இல்லாதவனிடத்தில் வஞ்சனை இராது.
- பஞ்ச தந்திரம்

நாணயம் உள்ளவனிடம் எப்பொழுதும் குழந்தைப் பண்பு காணப்படும்.
- மார்ஷியஸ்

ஒரு நாடு வலிமையுறுவது, சிறிய எண்ணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களால் அன்று; பெரிய எண்ணங்களைக் கொண்ட சிறிய மனிர்களாலேயே.
- சுவாமி ராமதீர்த்தர்

அரசன் எல்லா நாடுகளுடனும் ஒற்றுமையை விரும்ப வேண்டும். ஆனால் தமது நாட்டின் முன்னேற்றத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது. அத போல் நாமும் எல்லா மதங்களின் ஒற்றுமையை விரும்ப வேண்டும். ஆனால் நமது மதத்தின் வளர்ச்சியை விட்டுக் கொடுக்கலாகாது.
– கிருஷ்ணப்ரேமி

கடவுளிடம் எப்போதும், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இராதீர்கள். கடவுள் ஏற்கனவே கொடுத்திருப்பதற்கு நன்றி செலுத்துங்கள்.
- நார்மன் வின்ஸென்ட்

மதுபானம் கெட்டது. அது ஒரு தலைமுறையைக் கெடுத்துவிடும். ஆனால் புகையிலை எல்லாத் தலைமுறைகளையும் கெடுத்துவிடும்.
- கோவிந்தசிங்

மனைவி, மக்கள், சுற்றம் என்ற மாயவலையைக் கடக்க அறியாமல் ஆன்மா துன்புறுகிறது.
- மாணிக்கவாசகர்

நெல்லிலுள்ள அரிசிதான் முளைக்கிறது. ஆனால், அதன் உமி நீங்கிவிட்டால் அது முளைப்பதில்லை. எவ்வளவோ பெரும் ஆற்றல் வாய்ந்த திறமைசாலியாக இருந்தாலும், பக்கபலம் இல்லாவிட்டால் அவன் எடுத்துக்கொண்ட எந்தக் காரியமும் நிறைவேறுவதில்லை.
- ஒளவையார்

புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை; கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்; நல்லோரின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத காதுகள் ஆகியன இருந்தும் பயனற்றவை.
- விவேக சிந்தாமணி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.