ஒவ்வொரு ஜீவனும் தனியாகவே பிறக்கிறது; தனியாகவே இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்கிறது.

சோம்பலைத் தடுக்க வேண்டுமா? அதிகமாக உண்பதைத் தவிர்த்திடு.
- டால்ஸ்டாய்

உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. நாம் ஈட்டிய பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
- தாகூர்

நல்ல குடிமக்கள் உள்ள நாட்டில் தான் நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும்.
– பிளேட்டோ

மற்றவர்களை வெறுப்பது கொடுமையானது. அதை விட கொடுமையானது, மற்றவர்கள் இருப்பதைக் கூட கவனிக்காமல் வாழ்ந்து வருவதுதான்.
- ஜார்ஜ் பெர்னாட்ஷா

அதிகப் பணம் இல்லாதவன் ஏழையல்ல; அதிகப் பணத்திற்கு ஆசைப்படுபவனே ஏழை.
- தாமஸ்

புகழ்ச்சி என்பது வார்த்தைகளால் ஆனது; உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
– பிரௌன்

தவறுகளுடன் இருப்பது தகாது; அதைவிடத் தகாதது தன்னிடம் இருக்கும் பல தவறுகளை உணராமல் இருப்பது.
– பாஸ்கல்

நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
– மகாவீரர்

உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.
- மில்டன்

கூரையை மழை இல்லாத போதே செப்பன்னிட்டுக் கொள்ள வேண்டும்.
- கென்னடி

எப்போது அமைதியாக இருக்க வேண்டுமென்று அறிந்தவன்தான் புத்திசாலி.
- யூரிபைட்ஸ்

கடவுளும் சமயமும் இல்லாவிட்டால் மனிதரின் வாழ்க்கை பயனற்றதாகும்; வாழ்க்கையில் எவ்வித உயர்ந்த நோக்கமும் இல்லாமற்போகும்.
- டில்லோட்ஸன்

உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகத்தைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.
- கதே

படித்த முட்டாள், படிக்காத முட்டாளைவிட மோசமானவன்.
- நிக்கல்ஸன்

உணர்ச்சிகள் நம்மை ஆட்கொண்டால், அவையே கெட்ட பழக்கங்களாகும்.
- பாஸ்கல்

இந்த உலகத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் சரக்கு புத்திமதி ஒன்றுதான்.
- பேகால்

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்தே சென்று கொண்டிருப்பதைக் காணலாம்.
- கோல்ட்ஸ்மித்

ஒவ்வொரு மனிதனிடமும் ஒருவித அமைப்பு இருக்கிறது. அதனை அவன் பயன்படுத்தாமலிருப்பது, வங்கியில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு பட்டினி கிடப்பதற்கு ஒப்பாகும்.
- மெகஸ்தனிஸ்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.