Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Quotes
பொன்மொழிகள்

எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா?


 உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம்.

- உட்வெல்.

 பயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது.

- மகாவீர்.

 யார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர்.

- புளுடர்கி.

 மிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு.

- ஸைரஸ்.

 மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும்.

- பேகன்.

 வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம். மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு.

- பர்த்ருஹரி.

 எடுத்தால் குறைவது செல்வம். கொடுத்தால் வளர்வது கல்வி.

- ஜீவெனாப்.

 வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே.

- கோல்டன்.

 பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

- ஸைரஸ்.

 கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.

- மெரிடித்.

 துன்பப்படுவோர் மத்தியில், நாம் மகிழ்ச்சியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

- புத்தர்.

 இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.

- அரிஸ்டாட்டில்.

 வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது.

- மெஹர்பாபா.

 உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர்.

- ஐன்ஸ்டீன்.



 தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.

- சாக்ரடீஸ்.

 எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.

- அரவிந்தர்.

 தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

- எட்கார் ஆலன்யோ.

 உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு.

- கிரேஸியன்.

 யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.

- மாண்டேயின்.

 அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.

- ஜே. ஆர். லெவல்.

 வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

- மால்ட்ஸ்.

 கோபம் என்பது வைர அட்டிகை போன்றது. அதை எப்போதும் அணிந்திருந்தால் அதன் மதிப்பு போய்விடும். வைரமா? என்கிற சந்தேகமும் வந்துவிடும்.

- அனுராதாரமணன்.

 மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

- மார்ட்டின் புபெர்.

 இளைத்துப் போன குதிரைக்கு அதனுடைய சொந்த வால் கூட சுமையாகத் தெரிகிறது. ஆனால் அது உண்மையல்ல.

- ஓட்பே.

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p99.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்