இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Rational Thinking
பகுத்தறிவு

ஆடி அமாவாசை எதற்கு?

சந்திரகௌரி சிவபாலன்


ஆடியில் வரும் அமாவாசைக்கு ஒரு சிறப்பு - அது
தந்தைமார்கள் ஆன்மா ஈடேற்றம் காணும் சிறப்பு.
கற்றவர்கள் கூட அதற்கு தரும் மதிப்பு
எப்படியோ ஆகட்டும் என்ற ஒரு போக்கு.

அன்று தந்தைமார்களின் ஆன்மாக்கள் உலகில் இருந்து பிரிக்கப்பட்டு ஈடேற்றம் காணும் நாள். அவ்வுலகிலும் ஒரு இறப்பு நாள் என்றே நான் கருதுகின்றேன். அதுவும் பூமியில் வாழும் தமது பிள்ளைகள், அன்றைய நாள் விரதம் இருந்து, பூசை புரிந்த ஆன்மாக்கள் மட்டுமே ஈடேற்றம் காணும் நாள். அந்த ஆன்மாக்கள், பூமியில் வாழும் போது எப்படி நன்மைகள் செய்திருந்தாலும் பிள்ளைகள் அன்றைய நாள் விரதம் அநுஷ்டிக்க வேண்டும். அப்போதுதான் தந்தைமார் ஆன்மாக்கள் ஈடேற்றம் காணும் என்ற ஒரு நம்பிக்கை நம்மவர் மத்தியில் புகுந்துள்ளது. தந்தைமார் ஆன்மாக்கள் அங்கு தரித்து வைக்கப்படும். மற்றைய உறவுகள் எல்லாம் உலாவித் திரியும்.

சித்திரா பௌர்ணமி வந்தால், மீண்டும் ஒரு பிரிவு. தாய்மார் ஆன்மாக்கள் எல்லாம் ஆன்மாக்கள் உலகில் இருந்து விடைபெற்று ஈடேற்றம் காணும் நாள். அதுவும், பூமியில் வாழும் பிள்ளைகள் சித்திராபௌர்ணமி விரதம் இருக்க வேண்டும். தாய் பௌர்ணமியில் ஆண்டவன் காலடி நாடுவாள். தந்தை அமாவாசையில் ஆண்டவன் காலடி நாடுவார்.

ஆனால் திருமண பந்தத்தில் நுழையாத சகோதரர், பிள்ளைகள் இறந்தால், அவர்கள் ஆன்மாக்கள் ஈடேற்றம் காண எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். அது பற்றி வினா எழவில்லையா? இவர்களின் ஆன்மாக்களின் நிலை தான் என்ன? மனதினுள் எழுந்த வினாக்களின் சிந்தனைகள் விரிந்தவளாய் யான், வழமை போல் அன்றும் ஆடி அமாவாசை அன்று எனது பெற்றோர் படத்திற்கு விளக்கேற்றினேன். மனக்கவலைகள் யாரிடமும் கூறினால் அரைவாசியாகக் குறையும் மனமகிழ்ச்சிகள் யாரிடமும் கூறினால் இரு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறே மகிழ்ச்சியோ கவலையோ எனது பெற்றோர் படங்களின் முன் பகர்வது எனது வழக்கம். அன்றும் அவ்வாறே.



அன்று ஆடி அமாவாசை அடுத்த வீட்டில் இருந்து வந்த அழைப்புக் கூட இருந்தது. நேரம் போதாமையால், வேலைக்குப் போகுமுன் அடுத்த வீட்டார்க்குச் சிறிது கையுதவி செய்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றிருந்தேன். வீட்டுக்குள் சென்ற போது வாசனை மூக்கைத் துளைத்தது. அவர் தந்தையின் உருவப்படம் ஒரு மேசைமேல் வைக்கப்பட்டிருந்தது. அழகான பூக்கள் தந்தையின் படத்திற்கு வைப்பதற்காக, அன்றே வாழத்துடித்து மலர்ந்த மலர்களை அது வாழும் போதே பறித்து எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பூஜைக்குரிய ஆராத்தித் தட்டுக்கள், கற்பூரம், சந்தனக்குச்சி, சாம்புராணி இப்படியெல்லாம் ஒரு சுவாமி படத்திற்கு அலங்கரிப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சமையலறையினுள் அமர்க்களம். 3, 4 குடும்பங்களை விருந்துக்கு அழைத்ததனால், பெண்களின் கலகலப்புப் பேச்சுக்களும் சிரிப்புக்களும் தாளித வாசனையுடன் கலந்து கொண்டு வீடெங்கும் பரவியிருந்தது. தாய்மண்ணிலே உணவுக்காக ஏங்கும் ஏழைகளுக்கு இப்படியான சந்தர்ப்பங்களில் இப்படியாகச் சமைத்துக் கொடுப்பது வழக்கம். இதுவும் இப்படியான நாள்கள் செய்வதன் அவசியமும் கூட. ஆனால், இங்கு........ ஐரோப்பிய நாடுகளில் ..........கலகலப்பில் நானும் கலந்து கொண்டேன். சிறிது கையுதவியும் செய்தேன். சமையலும் முடிவடைந்தது.

தந்தையின் படத்தின் முன் 15 கறிகளுடன் சோறும் வடை பாயாசங்களும் படைக்கப்பட்டன. பூஜை ஆரம்பமானது. தேவாரங்கள் பாடப்பட்டன. கற்பூர ஆராத்தி காட்டப்பட்டது, சாம்புராணி தீபம் போடப்பட்டது. முடிந்தவுடன் எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பின் விஜய் நடித்த சுறா படம் போடப்பட்டது. உணவருந்தி படம் பார்த்து விருந்தினர் விடை பெற்றனர்.

ஒரு மணி நேரம் வேலைக்குத் தாமதமானாலும் கூற வேண்டியவற்றைச் சரியான நேரத்தில் எடுத்துக் கூறாவிட்டால், அது கூறாமலே மறைந்து போய்விடும் அல்லவா! அதனால், அந்தத் தாயின் மகளை அருகே அழைத்தேன். இந்த 4 குடும்பங்களில் ஒருத்தியாக உணவு பிரமாதம் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு விடைபெற்றுச் செல்லும் ஒரு சாதாரணமான பெண் நான் இல்லை. என்றும் எதையும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நான், இன்று இந்த ஆடிஅமாவாசை பற்றிச் சிந்தித்தேன். உங்கள் தந்தையில் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் விருப்பும் புரிகின்றது. ஆனால், ஏன் இது செய்யப்படுகின்றது என்று சிந்தித்தீர்களா?

எதற்காக படத்தின் முன் படையல்கள் படைக்கப்படுகின்றது?

உங்கள் தந்தையின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்திவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவா? அது திவசத்தில் அல்லவா செய்கின்றார்கள். இன்றைய நாள் விரதம் இருந்து தந்தையின் ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவல்லவா செய்யப்படுவது. நீங்கள் படையல்கள் படைத்து அழைத்தால், உங்கள் தந்தையின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்துவதா? இல்லை ஈடேற்றம் காண்பதா? சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் தந்தையின் படத்தின் முன் பூஜைப் பொருட்கள் வைத்திருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் தான் என்ன?

உங்கள் தந்தையார் இறையென்னும் நிலையடைந்து விட்டார் என்று உறுதியான மனநிலை நீங்கள் கொண்டதனால்தானே! அதனால்தானே கற்பூர ஆராத்தி எடுத்தீர்கள். பின் ஏன் ஈடேற்றம் கருதி விரதம் இருக்கின்றீர்கள்? திடமான நம்பிக்கை கொள்ளாத எதுவுமே மனிதர்கள் செய்வது தவறு, என்றே நான் கருதுகின்றேன். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.



இங்கு தேவாரம் பாடப்பட்டதே, ஏன்?

தோடுடைய செவியன் என்பது சிவபெருமானைக் குறித்துத் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் அல்லவா! இங்கு வைக்கப்பட்டிருக்கும் உருவப்படமானது உங்கள் தந்தையினுடையதல்லவா! தந்தையின் உருவப்படத்தின் முன் இறைவனை நினைத்துப் பாடினீர்கள் என்றால், தேவாரங்கள் கரும்பின் சக்கையைச் சப்பித் துப்பியதைப் போன்றவை. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தர் ''தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி'' என்ற தேவாரத்தைப் பாடி உமையம்மையாரால் பாலூட்டப் பெற்றவர். அந்த கரும்பின் சாற்றை அவர் அருந்தி விட்டார். அதன் சக்கையை நாம் பாடுவதில் என்ன இருக்கின்றது? இறைவனை எண்ணி நீங்கள் பாட வேண்டுமானால், நீங்களாகவே நினைத்துப் பாடுங்கள். அதில் பொருள் இருந்தால் போதுமானது. அதை எதிர்பார்த்தால் அவர்கள் கடவுளர்களும் இல்லை. பாடல்களில் கவித்துவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் விளங்காது பாடப்படும் பாடல்களும் பலன் தராது, மந்திரங்களும் பலனளிக்காது. ஏனென்றால், அவை மனதில் பதியப்படுவதில்லை. மூளை ஏற்றுக் கொள்வதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்.

விரதமிருக்கலாமா?

இறந்தவுடன் உயிரென்னும் ஆத்மாவானது வேறு ஒரு உடலினுள் ஐக்கியமாகின்றது என்பது கர்மக்கோட்பாடாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அப்படியெனில், எங்கோ ஒரு உடலினுள் ஐக்கியமாகிவிட்ட அந்த ஆத்மாவிற்கு மீண்டும் ஈடேற்றம் காண நீங்கள் விரதம் இருப்பது பெரிய பாவம் இல்லையா! இது நியாயமாகிவிடுமா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

இல்லை உங்கள் தந்தையின் ஆத்மா இன்னும் அலைந்து திரிகின்றது என்றால், 30 வருடங்கள் கழிந்த நிலையிலும் அந்த ஆன்மா அலைந்துதான் திரிகின்றதா! இத்தனை வருடங்களும் நீங்கள் விரதம் இருந்தது பலன் அளித்திருக்காது என்ற நம்பிக்கையீனம் உங்களிடம் குடிகொண்டிருக்கின்றதா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

உலகில் நன்மைகள் பல செய்து வாழும் மனிதன் இறந்துவிட்டால், அவனது ஆன்மா பிள்ளைகள் சித்திராபௌர்ணமி விரதம் ஆடிஅமாவாசை விரதம் இருந்தாலேயே ஈடேற்றம் காணும் என்றால், உலகில் வாழும் வரை தீமை செய்பவர்கள். பிள்ளைகள் மூலம் ஈடேற்றம் கிடைக்குமென்று கருதியவர்களாக நிம்மதியாக இறக்கலாமே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.



உயிரற்ற உடலால் என்ன பயன் என்று அந்த உடலைத் தீக்கிரையாக்கி விடுகின்றோமே. உடலற்ற அந்த உயிரால் என்ன பயன்! ஆன்மா என்பது உடலுள் இருக்குமானால், சத்திர சிகிச்சையின் போது அது எங்கே செல்கின்றது? ஆழ்ந்த மயக்கம் கழிந்து எழுந்தபின் சத்திர சிகிச்சையின் போது நடந்த நிகழ்ச்சிகளை எமது ஆன்மா தெரியப்படுத்தியிருக்குமே. அந்த மூளைதான் ஆன்மா என்று, அந்த மூளை கொண்ட மனிதன் சிந்திக்கத் தவறுவதுதான் ஏன்?

ஆன்மா என்று அலட்டிக் கொண்டு அதன் மூலம் வருமானம் தேடுபவர்களுக்கு அது தொழிலுக்கு ஆதாரம். ஆனால், அனைவரையும் அறிவற்றவர்களாய்க் கருதுவது தவறு அல்லவா! எனவே வாழும் போதே நன்றிக் கடன் செய்வதாக இருந்தால், செய்ய நினைப்பவர்களுக்கு மனத் திருப்தியுடன் செய்து முடித்துவிட வேண்டும். வாழ்ந்து இறந்து எரிந்துவிட்ட, புழுபூச்சிகளுக்கு இரையாகிவிட்ட உடலுக்குச் செய்கின்றவை எல்லாம் வெறும் போலியாக பிறருக்குக் காட்டுகின்ற வெளிக்காட்டுகை என்பதையும்; புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கிரியைகள் எல்லாம் எமது தாயார் தினம் (ஆழவாநச'ள னயல) போல் பெற்றோர்க்கு நன்றி செலுத்துவதற்காகவும் இறந்த அவர்களை நினைப்பதற்காகவுமே செய்யப்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். உயிரோடு இருக்கும் வரை செய்ய நினைக்கும் அத்தனை காரியங்களையும் செய்து எமது நன்றிக்கடனை செலுத்த வேண்டும்.

இது உங்களுக்கும் உலகுக்கும் சொல்லும் சிந்தனை. நான் வருகின்றேன் என்று ஒருவரைச் சிந்திக்கத் தூண்டிய மனதுடன் விடைபெற்றேன். அவள் சிந்தித்தாளோ இல்லையோ, உலகு உலகத்து மாயையை சிந்திக்கட்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/rational/p11.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License