Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Rational Thinking
பகுத்தறிவு

தீட்டுக்காலம் எதற்காக?

சந்திரகௌரி சிவபாலன்


தமிழர்கள் மத்தியில் தீட்டு என்றும் துடக்கு என்றும் விலக்கி வைக்கும் நாட்கள் பல. இந்த நாட்களை நீக்க பூஜை, கிரியைகள் என்றெல்லாம் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் நம்மவர் மத்தியில் இருக்கின்றன. எப்போதோ நமது தலையில் அரைக்கத் தொடங்கிய மிளகாய் இப்போதும் அரைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

முப்பதாவது நாள் நடத்தவேண்டிய கிரியைகளுக்காக இந்தத் தடுப்புநாள் தந்தவர் யார்? கிரியைகள் தேவையா? இவைபற்றி விளக்கமாய்த் தெரிந்து கொள்ள மீண்டும் சுரண்டியது என் மூளை. தேடியது தெளிவுபெற பேனா திறந்தது.

மாதவிடாய்த் தீட்டு

தீட்டு என்னும் சொல், மகளிர் சூதகம், ஆசூசம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. பெண்களுக்கு வருகின்ற மாதவிடாய்க் காலங்கள் தீட்டு வந்த நாட்களாக கருதப்படுகின்றன. இக்காலப் பகுதியில் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் இல்லை. அதிகமாக வெளியில் நடமாட மாட்டார்கள். புத்தியைத் தீட்ட வேண்டிய பெண்கள் மூளையில் அடங்கியிருப்பார்கள். அக்காலத்தில் போதிய சுகாதார வசதிகள் குறைந்திருந்த காரணத்தினால் பெண்கள் ஒதுங்கியிருந்தார்களே தவிர ஒதுக்கப்படவில்லை.

இக்காலத்தில் இருப்பது போன்று அக்காலங்களில் போதிய கிருமிநாசினிகள் இருந்ததில்லை. பெண்கள் கைகளில் கிருமிகள் விரைவாக வளரக்கூடிய கூடிய சூட்டுத்தன்மை உள்ளது. பெண்கள் வயிற்றினுள் முட்டையையே கருவாக்கக் கூடிய வெப்பத்தையுடையவர்கள். அதனால் இவர்கள் மூலம் கிருமிகள் இலகுவாகப் பரவக்கூடியதாக இருக்கும். இக்காலங்களில் இவர்களுடைய உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், மனநிலையிலும் மாற்றங்களைச் செய்வதுடன், ஒருவித எரிச்சல் உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும். முதன்முதல் மாதவிடாய் கண்ட பெண்கள். மனநிலையால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அத்துடன் உடல் உபாதைகளும் (அடிவயிற்றில் வலி,கால்கள் நோ, இடுப்பு நோ) இவர்களுக்கு ஏற்படும். இவர்கள் மனஉணர்வு எதிலுமே மனதை ஒட்ட வைக்காது. இந்த உணர்வு கோயிலுக்குச் சென்று ஆண்டவனைத் தரிசிப்பதற்குத் தடையாக இருக்கும்.

அவ்வாறே கோயிலுக்குச் சென்று மற்றையவர்களுக்கும் இவர்களின் உடலில் இருந்து வரும் மனஉணர்வினால் ஏற்படும் அதிர்வுகளும் கோயிலின் ஒருநிலைப்பாட்டு வணக்கமுறையைத் தடைசெய்யும். ஒரு மனிதனின் உடலில் இருந்து வருகின்ற அதிர்வுகள் மற்றைய மனிதர்களைச் சென்றடைகின்றன என்னும் விளக்கம் யாவரும் அறியவேண்டியதே.

இதனாலேயே இந்த கட்டிப்பிடி வைத்தியம், சுவாமிமார்கள் என்று சொல்லப்படும் மனிதர்கள், தமது கையை அடியார்களின் தலையில் வைப்பது, போன்றவையெல்லாம் நடைபெறுகின்றன. எனவே ஒரு மனிதனின் உடலில் இருந்துவரும் அதிர்வுகள் அருகே இருக்கின்ற மனிதர்களைச் சென்றடையும். இதனாலேயே மாதவிடாய்க் காலங்களில் இருக்கின்ற பெண்களினுடைய மனநிலை அதிர்வுகள் ஆலயத்தில் வழிபாடு செய்கின்ற மற்றைய மனிதர்களின் வழிபாட்டைத் தடுக்கக் கூடியதாக இருப்பதனால், இக்காலங்களில் பெண்கள் ஆலயங்களைத் தவிர்த்துக் கொள்வார்கள்.

அத்துடன் சுகாதாரவசதி குறைந்த அக்காலப் பகுதியில் சரியான முறையில் தன்னைச் சுத்தமாக்கி வெளியில் செல்லக் கூடிய வசதி வாய்ப்புக்கள் அக்காலப் பெண்களிடம் இருந்ததில்லை. இதனாலேயே அப்பெண்கள், கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டது. செல்லக்கூடாது என்பதைவிட அப்பெண்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்பதே பொருந்தும்.



பிள்ளை பிறந்த வீட்டுத் தீட்டு

அற்புதமான பிஞ்சு உடல் இந்த பூமியில் வந்து பிறப்பெடுக்கின்றது. இந்த உலகமே அதனை வரவேற்கின்றது. பூமித்தாய் வாஞ்சையுடன் தாங்குகின்றாள். மருத்துவர்கள் தாதிகள் முகம் மலர வரவேற்கின்றார்கள். அக்குழந்தையின் உடலை வருடும் இன்பமும் அக்குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும் இன்பமும் கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்யும். ஆனால் அக்குழந்தையைக் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஆண்டவன் தன்னகம் வரவேற்பதில்லை. 30 நாட்கள் காக்க வைத்தே தன்னிடம் அழைப்பார். அதுவும் அக்குழந்தையில் பிடித்திருக்கும் துடக்குக் கழிய வேண்டும். அதுமட்டுமல்ல இரத்த உறவுகள் யாவரும் கோயிலுக்குத் தூரத்தில் நிற்க வேண்டும். ஏனென்றால், எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது அத்துடக்கு. இவ்வாறு சலித்துக் கொள்பவர்கள் இன்று நம்மத்தியில் இருக்கின்றார்கள்.

தாயின் சுத்தமின்மை இதற்கும் பொருந்தும். தாயையும் பிள்ளையையும் பிரித்துக் கோயிலுக்குக் கொண்டு போக முடியாது. தாய் உடனடியாக சரியான மனநிலைக்கு வருவதற்கும் எழுந்து நடமாடுவதற்கும் நாளாகும். இவற்றைவிட குழந்தைக்கு இலகுவில் நோய்க்கிருமிகள் தொற்றிக் கொள்ளும். இதனால் இப்பச்சிளம் குழந்தை நோய்க்கு ஆளாகலாம். ஆனால், காலப்போக்கில் மெல்லமெல்ல தாய்ப்பாலிலிருந்து இக்குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொள்ளும். எனவே இக்குழந்தை உலகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள நாட்கள் எடுக்கும். இதனாலேயே வெளியில் குழந்தைகளைக் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டது. வெளியிலிருந்து வீட்டிற்கு வருபவர்களும், வீட்டில் இருந்து வெளியில் செல்பவர்களும் ஆசையுடன் இக்குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கும் போதும் வெளியில் இருந்து கொண்டு சேர்க்கும் நோய்க் கிருமிகள் இக்குழந்தையை வந்தடைவதுடன் இக்குழந்தைக்குப் பாதிப்பும் ஏற்படும்.

இந்தக் காரணத்தினாலேயே இவ்வீட்டில் இருப்பவர்களுக்கும் கட்டுப்பாடு விதித்து துடக்கு வீட்டுக்காரர் என்று பட்டமும் கொடுக்கப்படுகின்றது.

இன்னும் ஒருவிடயம் ஒலியைக் கடத்துவதற்கு உதவும் குழந்தையின் செவிப்பறை மென்சவ்வு மிகவும் மென்மையாக இருக்கும். கோயிலுக்குக் குழந்தையைக் கொண்டு செல்லும் போது ஆலயங்களில் ஒலிக்கும் மணிச்சத்தங்கள், மேளவாத்தியங்கள் போன்றவற்றிலிருந்து வரும் பலத்த ஒலியலைகள் குழந்தையில் செவிப்பறையைப் பழுதுபடுத்தி விடும். இக்காரணத்தினாலுமே கோயிலுக்கு குழந்தையைக் கொண்டு செல்லும் வழக்கம் தடைப்படுத்தப்பட்டது.

இவ்வாறான காரணங்களினாலேயே அக்கால மக்கள் துடக்கு என்ற நாட்களைத் தடுப்பு நாட்களாகப் பயன்படுத்தினார்கள். இது புரிந்த பின்னும் கிரியைகள் (சடங்குகள்) தேவையா?



இறப்பு வீட்டுத் தீட்டு

ஒரு வீட்டில் ஒருவர் இறந்தால், அவருடைய குடும்பத்தினர், இரத்த உறவினர்களுக்குத் துடக்கு.

ஒருவர் ஒரு வீட்டில் இறந்து விட்டால், அவ்வீட்டிலுள்ள அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய இரத்த உறவினர்களுக்கும் துடக்கு வந்துவிடுவதாகவும் அவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாது என்பதும் வழக்கமாக இருக்கின்றது. அந்த வீட்டிற்கு வருபவர்கள் யாவரும் அவ்வீட்டில் நீரருந்தக் கூடாது என்பதும், அவ்வீட்டிற்கு வந்து சென்றால், தலைமுழுக வேண்டும் என்பதும் நியதியாக இருந்தது. வெளிநாட்டில் இருந்தால் கூட உறவினர்கள் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். அந்த உறவினர்கள் வீட்டிற்குச் செல்பவர்கள் கூட குளித்து முழுகியே அடுத்த கருமங்களைச் செய்வார்கள். உறவுகள் எங்கிருந்தாலும் அன்பும் பாசமும் ஒன்றுதான். அருகாமையிருந்து பெறும் பாசத்தைப் போல் சேய்மையிலிருந்து நாளும் எண்ணி ஏங்கும் பாசமும் வலிமை மிக்கதே. சொந்தங்கள் மீளாப்பிரிவில் சென்று விட்டால், அத்துயரை ஈடுசெய்யவொண்ணாக் கவலையில் கலந்திருக்கும் சொந்தங்கள் வாடித்துயருறுவதும் இயற்கையே.

மனிதனின் உடலிலே சுரக்கப்படுகின்ற பெரமோன என்னும் ஒரு சுரப்பானது மனிதனுடைய வியர்வை அல்லது அவருடைய தனிப்பட்ட நறுமணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மையுள்ளது. இந்தத் திரவமே ஒருவருக்கொருவர் காதல் உணர்வு ஏற்படுவதற்கும் காம உணர்ச்சி ஏற்படுவதற்கும், காரணமாக அமைகின்றன. இத்திரவத்தை மூளையிலுள்ள அமிக்டாலா உணர்ந்து கொள்ளும். இந்த அமிக்டாலாவானது மூளையின் உச்சியில் வலது இடது பக்கங்களில் அமைந்திருக்கின்றன. இது நாம் உணராமலேயே பெரமோனாவை அறிந்து கொள்ளும். பிரிவுத்துயரில் இருக்கும் ஒருவருடைய உடலிலே ஏற்படும் நறுமண மாற்றத்தை, அருகே இருப்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமிக்டாலா தொழிற்படும். இதனால், இவர்களை நாடிச் செல்பவர்களின் உணர்வுகளிலும், சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவேதான் அவ்வீட்டிற்குச் செல்பவர்களும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன் குளித்து முழுகித் தத்தம் காரியங்களில் ஈடுபடுகின்றார்கள்.

குளிப்பதன் காரணம் யாதெனில், நீரானது ஒலியைக் கடத்த வல்லது. அதிலிருக்கும் மூலக்கூறுகள் எண்ண அலைகளையும் கடத்தக்கூடியது. இறந்தவரின் சம்பந்தமுள்ள உறவுகளின் எண்ண அலைகளினால் பாதிப்புற்றவர்களின் எண்ணங்களை நீரலை கொண்டு நீக்குவார்கள். நீக்கம் சக்தியும் நீருக்கு உண்டு. அதனாலேயே செப்புப் பாத்திரத்தில் நீர் எடுத்து மந்திரங்களை எமது சுவாமிமார் ஓதிக் கொடுக்கின்றார்கள். நீருக்குள்ள சக்தியே அது. அத்துடன் செப்புப் பாத்திரம் மின்சக்தியைக் கடத்தும் அல்லவா. நாம் நீரில் கூறும் சொற்கள் வலிமைமிக்கவை. எனவே தான் நீரால் தமக்குள்ளாய் நிரம்பியிருக்கும் கவலையலைகளைக் கழுவித் துடைக்கின்றார்கள்.



அடுத்து இந்தத் துடக்கு நீங்குவதற்கு 30 நாள்கள் கடக்க வேண்டும் என்னும் விடயத்திற்கு வருகின்றேன். நம்மவர்கள் சந்திரனின் வளர்ச்சி 14 நாட்கள் தேய்வு 14 நாட்கள் என்னும் 28 நாள்க் கணக்கையே எல்லாவற்றிற்கும் வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே அது 31 நாள்கள் ஆகியது. இதில் பொற்கொல்லர், பிராமணர் போன்றோர்க்கு 16 நாட்களில் தொடக்குக் கழிப்பார்கள். இவர்கள் கோயில்களில் பூசை செய்பவர்கள். இது மனிதனால், காலம்காலமாகக் கொண்டுவரப்பட்ட வழக்கம். இவர்கள் ஒருநிலைப்படுத்தும் பயிற்சி மூலம், தாமாகவே தம்மை கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றிருப்பார்கள். இதனால் மிகக் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் வாழ்வியலுக்குள் தம்மை ஈடுபடுத்தும் தன்மை இவர்களுக்குள் இருக்கின்றது. இதனாலேயே இவர்கள் குறைந்த நாட்களில் துடக்கு நீங்குபவர்களாகக் கருதப்படுகின்றார்கள். தம்மைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமது மனநிலையில் உடனடித் திருத்தத்தைக் கொண்டுவர முடியாதவர்கள் எப்படி 16 நாட்களில் துடக்கு நீங்குபவர்களாக கருத முடியும்.

இதை விடுத்து துடக்கு என்பது அவரவர் உடல் எண்ணங்களின் தொழிற்பாடே என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இருந்து விட்டாலே துடக்கு நம்மைவிட்டுத் தூரப் போய்விடும். புரியாத மந்திரங்களால் பலனளிக்காத கிரியைகளால் நாம் என்ன பலனைப் பெறப் போகின்றோம்? என்று நாம் புரிந்து கொள்வதால் மட்டுமே நாம் பலனைப் பெற்றுக் கொள்வோம்.

ஏனென்ற கேள்வி கேட்காது விட்டால்
மடையன் நீயென்று ஆக்கிடும் உலகு
ஆமென்று எதற்கும் தலையாட்டிவிட்டால்
தலையில் ஏனிந்த மூளை இடம்பிடிக்க வேண்டும்?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/rational/p12.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License