இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Rational Thinking
பகுத்தறிவு

பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?

சந்திரகௌரி சிவபாலன்


பாதணி என்ன கேவலமா? - அதை
வெளியே ஒதுக்குவதென்ன தர்மமா?
காலணி திருத்தும் மனிதனையும்
கேவலமாய் எண்ணல் வேதமா?
அர்த்தம் புரிந்தும் புரியாதுலகில் வாழ்கின்றோம்
அதன் பயனை மட்டும் பெறுகின்றோம்
வேடிக்கை உலகதனில் மனிதன்
விளையாட்டுத்தனமாய் வாழுகின்றான்
விளக்கம் இன்றிய பண்பாடு பேணுகிறான்
சிந்தனை புரியும் மனிதனையும்
நிந்தனை செய்துகேலி பண்ணுகிறான்.



காலணி என்றும், செருப்பு என்றும், சப்பாத்து என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் பாதணி பற்றிப் பேசப்படுவதே இவ்வாக்கம். நமது பாதங்கள் நமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதார சக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள் போல் அமைந்திருக்கின்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது, நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர் சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா....தணி என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?



கொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் நமைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி நமது பாதங்களைத் சுத்தமாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க, பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று நமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை நமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க வெளியே கழட்டி வைத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு நமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. நமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் நம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார். பாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப் பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காக கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது.



இதைவிடப் பூப்புனித நீராட்டுவிழா என்பது ஒரு மதச்சடங்கல்ல. பூப்படைந்த பெண்ணில் பிடித்திருப்பதாகக் கருதும் துடக்கு நீங்க வேண்டும் என்ற கருத்தில் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பெண் உண்ட பொருள்கள் எல்லாவற்றையும் ஆரத்தி மூலம் கழித்து விடுவதான சம்பிரதாயம் நம் மத்தியில் இருக்கின்றது. எந்தவிதமான மத சம்பந்தமான சடங்குகளும் இங்கு இல்லை. புதிய புதிய முறைகள் அவரவர் பண வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நமது பெண் வயதுக்கு வந்துவிட்டாள். ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களே, உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். என்பதை நாள் குறித்து உறவினர் நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இங்கு என்ன பாதணி சமாச்சாரம் வருகின்றது என்று எண்ணுகின்றீர்களா?



அழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆரத்தித் தட்டு, பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்பட அழகுக் காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆரத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டி விட்டே ஆரத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களை பாதணியுடனேயே தரிசித்து திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம். தலையைப் பிய்க்க வேண்டியிருக்கின்றதே. புரியவில்லை, புரியவில்லை. புரியாமல்த்தானோ எல்லாம் நடைபெறுகின்றது.

மேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆரத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக் கழட்டி வருகின்ற போது அலங்காரம் செய்தவர்கள் விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. ஏனென்று கேட்டால், அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத்தனமாகவே படுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனித நீராட்டு விழாக்களில் நடைபெறுகின்றன.

காரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது, காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடை அலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுபட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும். அது அப்படித்தான் எனில் அது எப்படி? என்று அறியும் பக்குவம் பெற்று மனிதன் என்ற நிலைக்கு உயிர் பெற்ற உடல் மாக்கள் என்ற இடத்தில் இருந்து மக்கள் என்ற நிலைக்கு உயரும். காரணம் கேட்பவன் மடையன் என்றால், இவ்வுலகு கல் மண்ணில் இருந்து நாடுகள் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றிருக்க மாட்டாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/rational/p13.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License