இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Rational Thinking
பகுத்தறிவு

இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை?

வி. பி.மணிகண்டன்


இப்போதெல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஜோதிடம், சாஸ்திரமென்று மூடநம்பிக்கையான செயல்பாடுகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஒரு ஆணும், பெண்ணும் இணையும் உடலுறவு விஷயத்திலும் கூட சில மூட நம்பிக்கைக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

1. அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்ததி போன்ற நாட்களில் உடலுறவு கூடாது.

2. ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்தரம், சதயம் நட்சத்திரங்கள் உடலுறவுக்கு ஆகாது.

3. மாதப்பிறப்பு, வருசப் பிறப்பு, விரததினம், விரதத்துக்கு முந்தைய, பிந்தைய தினங்கள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, கிரகணம் போன்ற நாட்களிலும் உடலுறவு கொள்ளக் கூடாது.

இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை), அதிகாலை நான்காம் ஜாமத்திலும் (அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை) உடலுறவு கொள்ளக் கூடாது.

- என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.



ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், மகிழ்வான மனநிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் உடலுறவும் அதன் மூலம் கிடைக்கும் இன்பமும் இந்த ஜோதிட சாஸ்திரங்களால் தள்ளிப் போடப்படுகின்றன. இதனால் அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதுடன் மன அழுத்தங்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.

ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்கிற தவறான கருத்தும் தமிழ்நாட்டில் இருக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், உடலுறவு கொள்வதற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் ஒரு ஆணையும், பெண்ணையும் பிரிந்திருக்கவே வலியுறுத்துகின்றனர். இது ஒரு தவறான செயலாகும்.

மேலும் நண்பகல் 12 மணி, இரவு 12 மணி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது என்கிறார்கள். இந்த நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஏதாவது தீமைகள் ஏற்படும் என்று எந்த மருத்துவச் செய்திகளும் இல்லை. இருப்பினும் இந்த நேரங்களைத் தவிர்த்து விடுகிறார்கள்.

ஆடி மாதம் உறவு வைத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். இப்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். இதற்கு அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. இருந்தாலும் புதுமணத் தம்பதிகளை ஆடி மாதங்களில் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. உலகில் எத்தனையோ குழந்தைகள் சித்திரை மாதத்தில் பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளின் தந்தைகளுக்கெல்லாம் பாதிப்புகளா வந்துவிட்டது?

ஒரு ஆண் மாதவிடாய் ஆன பெண்ணுடன் மாதவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக் கூடாது. பெண்ணுக்கு மாதவிடாய் ஆன நாள் முதல் 6, 8, 10, 12, 14, 16 ஆகிய இரட்டை வரிசை நாட்களில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தையும், 5, 7, 9, 11, 13, 15 ஆகிய ஒற்றை வரிசை நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் குழந்தையும் பிறக்கும் என்கிறார்கள். இதில் சிறிது கூட உண்மையில்லை. மாதவிலக்கான நாட்களில் உடலுறவு கொள்வதால் இருவருடைய உடலுக்கும் மருத்துவ ரீதியாக எவ்வித நோய்களும், தொல்லைகளும் வரப் போவதில்லை. மாதவிலக்கான நாட்களில் பெண்களுக்கு மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எவ்வித பிரச்சனையுமில்லாவிடில் தாராளமாக உடலுறவு கொள்ளலாம். தவறில்லை என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். மேலும் ஒற்றை வரிசை, இரட்டை வரிசை நாட்களுக்கும் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இருந்தாலும் இதையும் சிலர் நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்.



இந்த ஜோதிட சாஸ்திரங்கள் தவிர, உடல் ரீதியாகவும் சில மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. உடல் ரீதியான நம்பிக்கைகளில் நிறம், உடல் பருமன், உயரம் போன்றவை குறித்து பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பொதுவாக நிறம், பருமன, உயரம் போன்றவைக்கும் உடலுறவுக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை. இருந்தாலும் இவைகள் குறித்த தவறான கருத்துக்களில் பலர் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளாகவே தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

மேலும் சிறிய மார்பகங்களுடைய பெண்களுடன் உடலுறவு கொள்வதில் ஆண்களுக்கு திருப்தி இருப்பதில்லை என்கிற தவறான கருத்தும் இருக்கிறது. மார்பகங்கள் பெரியதாகவோ, சிறியதாகவோ இருப்பது உடலுறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆண்தான் பெண்ணின் மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். உண்மையில் சிறிய மார்பகங்களுடைய பெண்கள்தான் வேகமாகக் கிளர்ச்சியடைந்து உடலுறவில் ஆணுக்கு அதிகமான இன்பத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்ணின் மார்பகங்களின் அளவுக்கும் உடலுறவுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

தொந்தியுடையவர்களால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாது என்கிற எண்ணமும் சிலரிடம் இருக்கிறது. இதுவும் தவறான ஒன்றுதான். உடலுறவில் தொந்தியுடையவர்களுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் உடலுறவுக்கென்று எத்தனையோ முறைகள் இருப்பதால் அவர்களுடைய இணைகளுக்கேற்றபடி சரியான முறையைத் தேர்வு செய்து, உடலுறவு கொள்ளும் போது இருவருமே இன்பமடையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படி ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவில் உடலுறவு குறித்து தனித்தனியான கருத்து வேறுபாடுகள் எத்தனையோ இருக்கிறது. இந்த கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். உடலுறவில் ஈடுபட விரும்பும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அவர்களுக்குள்ள நெருக்கமும் விருப்பமும்தான் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் உடலுறவில் அதிகமான இன்பத்தை அள்ளித் தருகிறது.

எனவே ஜோதிடம் மற்றும் உடல் வழியிலான தவறான எண்ணம் போன்ற மூட நம்பிக்கைகளைத் தூக்கி வீசுங்கள். உங்கள் ஜோடிக்கு உங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கி மகிழுங்கள்.



இரவு நேரத்தில் இன்பமடைய

படுக்கையறைக்குச் செல்லும் போது உங்கள் அனைத்துக் கவலைகளையும் கதவுகளை மூடும் போதே மூடிப்போட்டு விடுங்கள்.

இன்றைய இரவு நாளை கிடைக்காமல் போகலாம் என்கிற எண்ணத்துடன் ஒவ்வொரு நாள் இரவையும் உல்லாசமாக்கிக் கொள்ளுங்கள்.

உடல்நிலை, மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் கருதினால் உங்கள் துணையிடம் சொல்லி நாளை இரவை நமதாக்கிக் கொள்வோம் என்று நம்பிக்கையூட்டுங்கள்.

புத்தகத்தில் படித்தது, படங்களில் பார்த்தது, பிறரிடம் கேட்டது என்று சொல்லி உங்கள் துணையிடம் எதிர்பார்த்து அது அமையாமல் ஏமாற்றமானால் அதை அடைய அடுத்தடுத்து முயற்சிக்கும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.

உங்கள் படுக்கையறை உங்களுக்கான இன்பக் களமாக இருக்க வேண்டுமே தவிர இருவருக்கிடையிலான கருத்து மோதல் களமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கிடையிலான உறவுகள் உல்லாசமான இரவுகளாக வாழ்த்துக்கள்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/rational/p9.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License