முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறை, திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி), அருப்புக்கோட்டை சைவபானு சத்திரிய கல்லூரி, ஒயிஸ்கா சர்வதேச நிறுவனம் (ஜப்பான்) தமிழ்நாடு கிளை, தமிழ் அநிதம் (அமெரிக்கா), தமிழ்திறவூற்று மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), பக்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம், நாகூர் தமிழ்ச் சங்கம், வல்லமை மின்னிதழ், தமிழ் அநிதம் அறக்கட்டளை (இந்தியா) ஆகிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து 28-12-2022 மற்றும் 29-12-2022 ஆகிய இரு நாட்கள் ‘கற்பித்தலுக்கான தொழில்நுட்பங்கள்’ எனும் பொருண்மையில் எனும் “மூன்றாவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு - 2022” ஒன்றினைத் திண்டுக்கல், பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடத்தியிருக்கிறது.
இம்மாநாட்டிற்கு வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்வு செய்யப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுக் கோவை ஒன்று வெளியிடப்பட்டது.