கிறிஸ்தவ போதனைகளில் வகைப்படுத்தப்பட்ட பட்டியலின் படி, பெருமை, பேராசை, கோபம், பொறாமை, காமம், பெருந்தீனி மற்றும் சோம்பல் ஆகியவை ஏழு கொடிய பாவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஏழு மூலதன நற்பண்புகளுக்கு முரணானது. இந்தப் பாவங்கள் பெரும்பான்மையாக, ஒருவரின் இயல்பான திறன்கள் அல்லது உணர்ச்சிகளின் அதீத பிரயோகங்கள் என்றும் கருதப்படுகிறது. இந்த வகைப்பாடு கிறித்தவ பாதிரியாரான தெர்துல்லியன் மூலம் உருவாக்கப்பட்டு மற்றொறு பாதிரியாரான எவாக்ரியஸ் பொன்டிகஸ் மூலம் முறைப்படுத்தபட்டது.
1. பெருமை
ஹப்ரிஸ் ( பண்டைய கிரேக்கத்தில்) அல்லது பயனற்ற தன்மை என்று அழைக்கப்படுகிறது. பண்டையக் காலத்தில் இருந்து தற்போது வரை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பட்டியலிலும் உள்ள ஏழு கொடிய பாவங்களில் இது முதன்மையானதாகவும் மோசமானதாகவும் கருதப்படுகிறது. இது மற்ற மூலதன பாவங்களின் ஆதாரமாகவும் கருதப்படுகிறது. பெருமை என்பது பணிவு என்ற நற்பண்புக்கு எதிரானதாகும்.
பெருமை அனைத்துப் பாவங்களுக்கும் தாய் என்று முத்திரை குத்தப்பட்டு, பிசாசின் மிக முக்கியமான பண்பாகக் கருதப்படுகிறது. சிஎஸ் லூயிஸ் விஞ்சி மிகையளவான கிறித்தவம் என்ற புத்தகத்தில், ‘பெருமை என்பது "கடவுளுக்கு எதிரான" நிலை, மட்டுமல்ல அகங்காரமும் சுயமும் கடவுளை நேரடியாக எதிர்க்கும் நிலை. மேலும் "அசுத்தம், கோபம், பேராசை, குடிப்பழக்கம் மற்றும் அனைத்து பாவங்களையும் ஒப்பிடுகையில் பெருமையே மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இட்டுச் செல்கிறது. மற்றவையெல்லாம் வெறும் வெறுக்கத்தக்கவையே. பெருமையின் மூலம்தான் தேவதை ஒன்று பிசாசாக மாறியது. இது முழு கடவுள் எதிர்ப்பு மனநிலையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். பெருமை என்பது கடவுளிடமிருந்து மனிதனின் ஆவியைத் துண்டிக்கிறது, மட்டுமல்லாமல் அவருடைய உயிர் மற்றும் கருணை தரும் பிரசன்னம் ஆகியவற்றையும் துண்டிக்கிறது.
பெருமையின் நவீனப் பயன்பாடு விவிலிய நீதிமொழியில், “அழிவுக்கு முன்னானது பெருமை, வீழ்ச்சிக்கு முன்னானது அகந்தை" என்று சொல்லப்பட்டிருக்கிறது. பொது அறிவுக்கு எதிரான முட்டாள்தனமான செயல்களை ஏற்படுத்துகிறது. அரசியல் பகுப்பாய்வில், "தற்பெருமை" என்பது பல ஆண்டுகளாக பெரும் சக்தியைக் தன்னகத்தே கொண்டுள்ள தலைவர்கள், தங்களின் தற்பெருமை காரணமாக எவ்வாறு மேலும் மேலும் பகுத்தறிவற்ற தன்னம்பிக்கை மற்றும் அறிவுரைகளை அவமதிப்பவர்களாக மாறுகிறார்கள் என்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது
2. பேராசை
ஹென்றி எட்வர்ட் மானிங்கின் வார்த்தைகளில், "பேராசை ஒரு மனிதனை இந்த உலகின் சேற்றில் ஆழமாக ஆழ்த்துகிறது, அதனால் அவன் அதையே தன்னுடைய கடவுளாக ஆக்குகிறான்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிறித்தவ போதனைகளுக்கு வெளியே வரையறுக்கப்பட்டுள்ளபடி, பேராசை என்பது தனக்குத் தேவையான ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளை அடைவதற்க்கு அல்லது பொருளைத் தனக்குச் சொந்தமாக வைத்திருப்பதற்கும், குறிப்பாக பொருள் செல்வத்தைப் பொறுத்த வரையில் உள்ள அளவு கடந்த ஆசையாகும். பெருமையைப் போலவே, பேராசையும் தீமைக்கு வழிவகுக்கும் என்று அக்வினாஸ் கருதுகிறார்.
3. கோபம்
கோபத்தை ஆத்திரம் மற்றும் வெறுப்பு போன்ற தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள் என வரையறுக்கலாம் . பழி வாங்கும் ஆசையில் கோபம் அடிக்கடி வெளிப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் படி, கோபத்தின் விளைவு ஒரு அப்பாவி நபருக்கு எதிராக தேவையற்ற, வலிமையான அல்லது நீடித்திருக்கும் படி காட்டப்படும்போது, அல்லது அவர்களுக்கு அதிகப்படியான தண்டனையை பெற விரும்பும் போது அத்தகைய கோபம் பாவமாக மாறும். "கோபத்தின் காரணமாக, தனது அண்டை வீட்டாரைக் கொல்ல அல்லது அவர்களைத் தீவிரமாக காயப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டால், அது அறத்திற்கு எதிரானது; அது ஒரு மரண பாவம்." வெறுப்பு என்பது பிறர் துன்பம் அல்லது தீமைக்கு ஆளாக வேண்டும் என்று விரும்புவதன் பாவமாகும், மேலும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் கடுமையான தீங்கை பெற விரும்பும்போது அதுவும் மரண பாவமாகும். ஹென்றி எட்வர்ட் மேனிங், "கோபம் கொண்டவர்கள் அதற்குத் தாங்களே அடிமைகள்" என்று கருதுகிறார்.
4. பொறாமை
பொறாமை என்பது, பேராசை மற்றும் காமம் போன்ற மனிதனின் தீராத ஆசையால் ஏற்படும் பாவமாக வகைப்படுத்தப்படுகிறது. இது வேறொருவரின் குணாதிசயங்கள் அல்லது உடைமைகள் மீது ஏற்படும் சோகமான அல்லது கோபமான பேராசை என்று கூறப்படலாம். அது மற்றொரு பாவமான, வீண்பெருமையிலிருந்து வருகிறது. மேலும், இத்தகையப் பாவம் ஒரு மனிதனை அவனது அண்டை வீட்டாரில் இருந்து பிரித்து விடுகிறது.
புனித தாமஸ் அக்வினாஸின் கூற்றுப்படி, பொறாமையால் தூண்டப்படும் போராட்டம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், பொறாமை கொண்ட நபர் மற்றொருவரின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார். இரண்டாம் கட்டத்தில், பொறாமை கொண்ட நபர், மற்ற நபரை அவதூறு செய்வதில் வெற்றி பெற்றால் அல்லது மற்றொருவரின் செழிப்பில் துக்கம் என்ற நிலையை அடைகிறார். மூன்றாவது நிலை வெறுப்பாக மாறுதல். ஏனெனில், துக்கம் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
பெர்ட்ரண்டு ரசல், “பொறாமை என்பது மனிதனின் மகிழ்ச்சியின்மைக்கு பொறுப்பான சக்திவாய்ந்த காரணங்களில் ஒன்றாகும். பொறாமைப்படுபவர்களுக்கு துக்கத்தையும், மற்றவர்களுக்கு வலியையும் ஏற்படுத்துவதற்கான தூண்டுதலை அவர்களுக்கு அளிக்கிறது” என்கிறார்.
5. காமம்
காமம் என்பது, உடலின்பத்தைக் குறித்தத் தீவிர ஏக்கம் ஆகும். இது பொதுவாக தீவிரமான அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசையாகக் கருதப்படுகிறது. இது கூடா ஒழுக்கம், கற்பழிப்பு, மிருகத்தனம் மற்றும் பிற பாலியல் பாவச் செயல்களுக்கு ஆதாரக் காரணியாகும். இருப்பினும், பல வேளைகளில், இது பணம் அல்லது அதிகாரம் போன்ற கட்டுப்பாடற்ற ஆசையின் பிற வடிவங்களையும் குறிக்கலாம். காமத்தின் தூய்மையற்ற தன்மை ஒருவரை "பிசாசின் அடிமையாக" மாற்றுகிறது என்று ஹென்றி எட்வர்ட் மேனிங் விளக்குகிறார். காமம் பொதுவாக மிகக் கடுமையான பாவமாக கருதப்படுகிறது. தாமஸ் அக்வினாஸ், மனிதர்கள் விலங்குகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு துஷ்பிரயோகப் பிரிவு என்று குறிப்பிடுகிறார்.
6. பெருந்தீனி
பெருந்தீனி என்பது அதிக நுகர்வு மற்றும் வீணாகும் அளவுக்கு எதையும் அதிகமாக உட்கொள்வது என்பதைக் குறிக்கும். தாமஸ் அக்வினாஸ் போன்ற இடைக்கால கிறித்தவ தேவாலயத் தலைவர்கள் பெருந்தீனியைப் பற்றி மிகவும் விரிவாகக் கூறியுள்ளனர், அது உணவைப் பற்றிய வெறித்தனமான எதிர்பார்ப்பு மற்றும் சுவையான உணவுகள் மற்றும் விலையுயர்ந்த உணவுகளில் அதிக ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகச் சொல்லியுள்ளனர். பெருந்தீனியின் ஐந்து வடிவங்களையும் அக்வினாஸ் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்:
1. Laute – மிகவும் விலை உயர்ந்த உணவை சாப்பிடுவது
2. Studiose – மிகவும் சுவையாக சாப்பிடுவது
3. Nimis – மிகவும் அதிகமாக சாப்பிடுவது
4. Praepropere – மிகவும் விரைவாக சாப்பிடுவது
5. Ardenter – மிகவும் ஆவலுடன் சாப்பிடுவது
7. சோம்பல்
சோம்பல் என்பது பழங்காலத்திலிருந்தே மனம், ஆன்மீகம், நோயியல் மற்றும் உடல் நிலைகள் அனைத்துக்கும் உட்பட ஒரு விசித்திரமான குழப்பத்தைக் குறிக்கிறது. இது எதிலும் ஆர்வமின்மை அல்லது உடல் உழைப்புக்கு விருப்பமின்மை எனவும் சொல்லப்படலாம். சோம்பலின் அடிப்படை மிகவும் பரந்தது. ஆன்மீக ரீதியில், கவனமின்மை, முதலில் கிறித்தவர்களுக்கு, குறிப்பாகத் துறவிகளுக்கு ஏற்படும் ஒரு சோதனையைக் குறிப்பிடுகிறது. அவர்கள் கடவுளுக்கான தங்கள் கடமைகள் மற்றும் வேலைகளில் அலட்சியமாகிவிட்டதைக் கூறுகிறது.
மனரீதியாக, கவனமின்மை இன்னும் பல தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது; இவற்றில் மிக முக்கியமானது எதைப் பற்றியும் பாதிப்பின்மை, அதோடு தன்னைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ எந்த உணர்வும் இல்லாமை, சலிப்பு, வெறித்தனம், அக்கறையின்மை மற்றும் செயலற்ற செயலற்ற தன்மை அல்லது மந்தமான மனநிலை ஆகியவற்றைக் கொடுக்கும் மன நிலை என்பதை உள்ளடக்கியது. உடல் ரீதியாக, கவனமின்மை என்பது உடல் இயக்கம் நிறுத்தப்படுதல் மற்றும் வேலை செய்வதில் அக்கறையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது; அது சோம்பல் மற்றும் செயலற்ற தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
சோம்பல் என்பது பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்ட ஏழு கிருபைகளை (ஞானம், புரிதல், அறிவுரை, அறிவு, பக்தி, வலிமை மற்றும் கர்த்தருக்குப் பயம் ) பயன்படுத்துவதை புறக்கணிப்பதை உள்ளடக்கியது. இத்தகையப் புறக்கணிப்பு நித்திய வாழ்வை நோக்கிய ஆன்மீக முன்னேற்றம் குறைவதற்கும், அக்கம் பக்கம் உள்ள வீட்டாரிடம் செய்ய வேண்டிய பலவிதமான தொண்டுகளைப் புறக்கணிப்பதற்கும், கடவுளை நேசிப்பவர்கள் மீது ஏற்படும் பகைமைக்கும் வழிவகுக்கும். மேலும், சோம்பல் உடலின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கிறது, அதன் அன்றாட உணவுகளை கவனிக்காமல், மனதை மெதுவாக்குகிறது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அதன் கவனத்தை நிறுத்துகிறது. சோம்பல் மனிதனை அவனது நீதியான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது, இதனால் மனிதனின் செயலிழப்புக்கு ஒரு பயங்கரமான காரணமாகிறது.