வைணவக் கோயில்களில் பயன்படுத்தப்படும் சில சொற்களுக்கு என்ன பொருள் என்று அறிந்து கொள்ளுங்கள்...
* திருவாபரணம் – பெருமாளுக்கு சாற்றப்படும் ஆபரணம்
* திருவாராதனம் – பெருமாளுக்குப் பூசை செய்தல்
* பெருமாள் தீர்த்தம் – திருவாராதனம் முடிந்த பின் கொடுக்கப்படும் தீர்த்தம்
* பெரிய திருவடி – கருடன்
* சிறிய திருவடி – அனுமன்
* திருமணி ஸேவித்தல் – பூஜையின் போது மணி அடிப்பது
* திருப்பாவாடை – பிரசாதம் நைவேத்யம் செய்வது
* திருவந்திக்காப்பு – வீதி உலா முடிந்து சமர்பிக்கப்படும் ஆரத்தி
* திருப்பரிவட்டம் – பெருமாள் வஸ்திரம்
* பீதாம்பரம் – பெருமாள் வஸ்திரம்
* திருத்துழாய் – துளசி
* திருஆலவட்டம் – விசிறி
* திருக்காவேரி – பூஜைக்கான ஜலம் வைக்கும் பாத்திரம்
* திருக்காப்பு நீக்குதல் – ஸாலக்கிராமம் எழுந்தருளிய பெட்டியின் கதவை திறப்பது
* கோவிலாழ்வார் – ஸாலக்கிராமம் அல்லது விக்ரஹம் எழுந்தருளிய மரப்பெட்டி
* சாற்றுமுறை – சாற்று (முடிவு) பாசுரங்களை ஒதுதல்
* சாற்றுப்படி – சந்தனம் சாத்துவது அல்லது அலங்காரம்
* வட்டில் – அர்க்யம், பாத்யம் சமர்பிககப்படும் பாத்திரம்
* அடைக்காய் – தாம்பூலம்
* எச்சரிக்கை – பிரசாத கோஷ்டி முடிவு பற்றிய அறிவிப்பு
* திருக்கண் வளருதல் – தூங்குதல்
* அரவணை – பெருமாளின் பாம்புப்படுக்கை
* திருப்பள்ளிக்கட்டில் – பெருமாளின் கட்டில்
* திருநடை சார்த்துவது – கோவில் கதவு முடுதல்
* திருப்பள்ளி எழுச்சி – பெருமாளை துயிலெழுப்புவது