இந்து சமயத்தினர் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 16 சடங்குகள் குறித்து கல்ப சூத்திரங்கள் மற்றும் தர்ம சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சடங்குகளில் பல இந்து சமயப் புரோகிதரைக் கொண்டு செய்ய வேண்டும்.
1. கர்ப்பதானம் - முதலிரவு அல்லது சாந்தி முகூர்த்தம்.
2. பும்சவனம் - கர்ப்பவதிக்கு 3 அல்லது 4ம் மாதத்தில் செய்ய வேண்டியது.
3. சீமந்தம் - கர்ப்பவதிக்கு 5 அல்லது 7ம் மாதத்தில் செய்ய வேண்டியது.
4. ஜாதகர்மா - பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி நீக்கும் சடங்கு.
5. பெயர் சூட்டுதல் - குழந்தைக்கு நாமகரணம் செய்தல்.
6. நிஷ்கிரமானம் - குழந்தையை முதன்முதலாக வெளியுலகிற்கு அழைத்துச் செல்லுதல்.
7. அன்னப்பிரசன்னம் - குழந்தைக்கு முதன்முதலாக சாதம் ஊட்டுதல்.
8. முடி காணிக்கை - குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல்.
9. காதணி விழா - குழந்தைக்கு முதன்முதலாக காது குத்துதல்.
10. வித்தியாரம்பம் - குழந்தையை நெல் மணி தட்டில் ஓம் என எழுத வைத்தல்.
11. உபநயனம் - குழந்தைக்கு முப்புரி நூல் அணிவித்தல்.
12. வேதாரம்பம் - குருவிடம் வேதங்கள் அல்லது போர்க் கலையை கற்க அனுப்புதல்.
13. மீசை மழித்தல் - இளைஞர்களின் மீசை & தாடியை மழிக்கும் சடங்கு.
14. கல்வி முடிக்கும் சடங்கு - குருவுக்கு குரு தட்சணை வழங்குதல்.
15. திருமணம் - ஆண்-பெண்களுக்கு திருமணம் செய்துவைத்தல்.
16. இறுதிச் சடங்கு - இறப்புச் சடங்கு.