சிவதத்துவங்கள் என்பது சிவனோடு அன்பு கொள்ளும் ஐந்து முறைகளைக் குறிப்பிடுகிறது. அவை;
1. சுத்த வித்தை
அறிவு குறைவாக இருந்து செயல் அதிகமாக இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது.
2. ஈசுவரம்
அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருகின்றது.
3. சாதாக்கியம்
சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
4. விந்து
இது சக்தியின் வடிவம்.
5. நாதம்
இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.