பஞ்சக புராணம் என்பது நூல் அன்று. சிவாலயங்களில் திருமுறை ஓதும் முறைமை. இது பன்னிரு திருமுறை தொகுக்கப்பட்ட காலத்திலிருந்து பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.
பன்னிரு திருமுறைகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பாடல் பாடுவதற்குப் பதிலாக ஐந்து பாடல்களை மட்டும் பாடும் முறைமையைப் 'பஞ்சக புராணம்' என்னும் பெயரால் குறிப்பிட்டு வந்தனர்.
புராணம் என்னும் சொல், இங்கு 'பழமை' என்னும் பொருளைத் தரும். பஞ்சக புராண மரபில் பாடப்படும் 5 பாடல்கள் இவைதான்:
1. தேவார அடங்கல் முறை முழுவதிலுமிருந்து ஒரு பாடல்
2. திருவாசகம் நூலிலிருந்து ஒரு பாடல்
3. திருவிசைப்பா பாடல் ஒன்று
4. திருப்பல்லாண்டு பாடல் ஒன்று
5. பெரியபுராணம் பாடல் ஒன்று