தமிழ்நாட்டில் சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.
“உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று"
சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14 நூல்களை இயற்றியவர்கள்;
1. திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
3. சிவஞான போதம் - மெய்கண்ட தேவநாயனார்
4. சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்
5. இருபா இருபஃது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்
6. உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
7. சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்
8. திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்
9. வினா வெண்பா - உமாபதி சிவாசாரியார்
10. போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்
11. உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்
12. கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்
13. நெஞ்சுவிடுதூது - உமாபதி சிவாசாரியார்
14. சங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார்
இந்தப் 14 நூல்களிலும் தலைச் சிறந்ததாகக் கருதப்படுவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் ஆகும். இந்தப் 14 நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுள் தலையாய நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுத் தொகுதியையும் மெய்கண்ட சாத்திரம் என்கின்றனர்.