பொதுவாக அனைத்து மதத்திலும் கஷ்டம் வரும் போதும் காரியம் நடக்க வேண்டும் என்று எண்ணும் போதும் கடவுளைத் தேடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்து மதத்தில் இந்த காரியத்திற்கு இந்த கடவுளை வணங்கினால் காரியம் வெற்றி பெறும். இந்த நோய்க்கு இந்த கடவுளை வணங்கினால் நலம் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர -ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான்
பித்தம் - முருகன்
வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன்
அம்மை நோய்கள் - மாரியம்மன்
தலைவலி, ஜீரம் - பிள்ளையார்
புற்று நோய் - சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு
நன்றி: தினசரி வாழ்வில் செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும் நூல்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.