சைவர்கள் திருநீறு அணிந்து கொள்ளும் முறையினை நீறணிதல் அல்லது விபூதிதாரணம் என்று சொல்கின்றனர்.
இவ்வாறு நீறணிதலில் திரிபுண்டரம், உத்தூளனம் என்ற இரு வகைகள் உள்ளன.
அத்துடன் திருநீறு தரித்தலுக்கான வழிமுறைகள் தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை விபூதி இயலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிபுண்டரம்
திரிபுண்டரம் என்பது சைவர்களின் விபூதிதாரண முறைகளுள் ஒன்றாகும். திரிபுண்டரம் எனும் வடமொழி சொல்லிற்கு திருநீறால் சைவர்கள் நெற்றியில் இடும் மூவரி கோடு என்று பொருளாகும். இம்முறையில் திருநீறு, நீர் குழைத்துப் பூசப்படுவதோடு முவ்வரிக் கோடாகவும் இட்டுக் கொள்ளப்படுகிறது.
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள், புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலாப்புறம், முதுகு, கழுத்து என பதினாறு இடங்களில் திரிபுண்டரம் தரிக்கலாம். சிலர் விலாப்புறங்களை நீக்கிக் காதுகளை கொள்வர்.
உத்தூளனம்
உத்தூளனம் என்பது சைவர்களின் விபூதிதாரண முறைகளுள் ஒன்றாகும். இம்முறையில் திருநீறு கையில் எடுக்கப்பெற்று பரவலாகப் பூசப்படுகிறது. நீர் குழைத்துப் பூசப்படுவதில்லை.
திருநீறு இடும் இடங்கள்
* நெற்றியில், தோள்கள், மார்பு, வயிறு என்று 5 இடங்கள்.
* தலை, நெற்றி, காதுகள், தோள்கள், மார்பு, வயிறு என்று இடங்கள்.
* தலை, நெற்றி, காதுகள், கழுத்து, தோள்கள், முழங்கைகள், மணிகட்டை, மார்பு பக்கங்கள், விலா என்று 16 இடங்கள்.
* தலை, நெற்றி, காதுகள், கண்கள், மூக்கு, வாய், கழுத்து, தோள்கள், முழங்கைகள், மணிகட்டை, மார்பின் ஒவ்வொரு பக்கத்திலும், தொப்புள், பிட்டத்தின் இருபுறம், விதைப்பையில், தொடைகள், முழங்கால்கள், கணுக்கால், காலில், இடுப்பு, விலா என்று 32 இடங்கள்.