ஒவ்வொரு மாத பெளர்ணமி எனும் முழு நிலவு நாளன்றும் சிவபெருமானுக்குச் சிறப்பான அபிசேகப் பொருள் உண்டு. ஐப்பசி மாதத்து முழுநிலவு நாளில் அன்னம் கொண்டு அபிசேகம் செய்யப்படுவது போல, ஒவ்வொரு மாத முழு நிலவு நாளிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிசேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாத்திரங்கள் கூறுகின்றன. அவை;
1. சித்திரை முழுநிலவு நாள்- மருக்கொழுந்து - புகழ் கிடைக்கும்.
2. வைகாசி முழுநிலவு நாள் - சந்தனம்- மனை, வீடு, நிலம் வாங்க முடியும். புதையல் கிட்டும்.
3. ஆனி முழுநிலவு நாள் - முக்கனி (மா, பலா, வாழை) - கேட்ட வரம் கிட்டும்.
4. ஆடி முழுநிலவு நாள் - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்.
5. ஆவணி முழுநிலவு நாள் - வெல்லம் / சர்க்கரை - சாபம், தோஷம், பாவம் நீங்கும்.
6. புரட்டாசி முழுநிலவு நாள் - கோதுமை + பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - எட்டு வகைச் செல்வங்களும் கிடைக்கும்.
7. ஐப்பசி முழுநிலவு நாள்- அன்னாபிஷேகம் - கல்வி, கலை தேர்ச்சி, ஞானம் கிட்டும்.
8. கார்த்திகை முழுநிலவு நாள் - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கில் வெற்றி கிட்டும்.
9. மார்கழி முழுநிலவு நாள் - பசு நெய் & நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
10. தை முழுநிலவு நாள் - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி நலம் கிடைக்கும்.
11. மாசி முழுநிலவு நாள் - பசு நெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
12. பங்குனி முழுநிலவு நாள் - பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி கிடைக்கும்.