இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

தேக ராமாயணம்

வால்மீகி முனிவர் 24,000 சுலோகங்களைக் கொண்ட ஸ்ரீமத் ராமாயண காவியத்தை இயற்றிய பின்னும் மேலும் மனச்சாந்தி கிடைப்பதற்காகவும், ராமாயணத்தில் சில முக்கிய பகுதிகளைக் கூறவில்லை என்ற உணர்வாலும் 109 சர்க்கங்களும் 12,252 சுலோகங்களும் கொண்ட ஆனந்த ராமாயணத்தை இயற்றினார். வால்மீகி ராமாயணத்தில் கூறப்படாத பல சிறப்பான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனந்த ராமாயணத்தில், விலாச காண்டத்தில், மூன்றாவது சர்க்கத்தில் ஸ்ரீராமர், சீதாதேவிக்கு உரைத்த சம்ஞான பேடிகா என்னும் தேக ராமாயணம் கலியுகத்தில் மிகப் பயனுள்ளதாக விளங்கும் என ஸ்ரீராமரே கூறினார்.

இது சகல வேதாந்த சாரமும் அடங்கியது. பக்தி முக்திகளைக் கொடுக்கக்கூடியது.

ஒரு நாள் சீதை ஸ்ரீராமரிடம், ''தங்கள் விஷயமாய் நல்ல ஞானம் கொடுக்கக் கூடியதை எனக்குத் தயவுடன் உபதேசியுங்கள்'' என்று கேட்க, ஸ்ரீராமர் தேக ராமாயணத்தை விளக்கிக் கூறினார்:

* சச்சிதானந்த ஸ்வரூபம் என்ற கடலுக்கு, அலையாகிய அதனது இச்சையினால் சுத்த ஆத்மாவின் அம்சத்தின் வித்து உண்டானது. அதன் பெயர் ஆத்மா. புத்தி இதன் தாய், சுத்த சத்வ அந்தக்கரணமே அதன் தந்தை.

* அந்த ஆத்மாவின் நான்கு வேறுபாடுகளும் அதன் உறவுகள். அவை துரியாவஸ்தை, ஜாக்ரதாவஸ்தை, ஸ்வப்னாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தைகளாகும்.

* அவற்றின் இருப்பிடம் இருதயாகாசம். மனோ வேகம் என்பது வெளிப்பயணம். மனதின் கெட்ட விருத்திகளை ஒழிப்பதே மனதின் வேகத்தை அடக்குவது. அதன் பூர்வ சம்ஸ்காரங்களை அடக்குவதே மாயா யோகம்.

* ஆத்மா பல காலம் சம்சாரமாகிய காட்டில் சஞ்சரிப்பதற்குக் காரணம் புத்திதான். அங்கு டம்பத்தை அடக்குவது என்பது ஸ்திரமான பஞ்சபூத ஸ்வரூபமாகும்.

* ஆத்மாவுக்குச் சிரமபரிகாரம் செய்து கொள்ளும் இடம் பர்ணசாலை. காமம், குரோதம், லோபம் இவற்றை வெல்வது, முக்குண ஆசையை அடக்குவதாகும்.

* ஆசையை அடக்குவது என்பது சுத்த மாயையை அடைவதாகும். பிறகு ரஜோ ரூபமான மாயையானது ஜடராக்னியில் சேர்கிறது. பிறகு அஞ்ஞான சம்பந்தமான மாயை பிரிவதால் பெரிய வருத்தம் உண்டாகி, பின்னர் துக்கத்தின் பங்கமும் உண்டாகிறது. அப்போது அதனுடன் விவேகமும் பக்தியும் சேர்கின்றன.


* திரிகுணங்களுக்கும் அடைக்கலமான வீட்டில் அஞ்ஞானத்தைத் தாண்டும் உபாயம், லிங்கம் என்னும் பெயருடைய மதத்தை அடக்குவது எனப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்சரமும், அகங்காரமும் அடக்கப்பட்டு, லிங்கதேகம் பிரிகிறது. பின்பு ஆனந்தமாகிய ஏக சுகம் அடைந்து, அதன் பின் மாயையை விடுவது சாத்விக நிலையை அடைவதாகும். சாத்வீகமான நிலை உத்தமமான இருதயாகாசம் சச்சிதானந்தம் என்ற பெயருள்ள மஹாகாசத்தில் இணைக்கப்படுகிறது. ஆத்மாவைச் சாகரத்தில் பிரவேசிக்கும்படி செய்வதே அதற்குத் தலையாய முக்தியாகும். நான்கு முக்தியிலும் அதுவே சாயுஜ்ய முக்தி.

சீதாதேவி இந்த உரையாடலைத் தனது மனதில் நன்றாய் நிலைநிறுத்தி, புத்தியால் ஆலோசித்து, தான் அறிந்து கொண்டதை ஆனந்தத்துடன் ராமரிடம் விவரிக்கிறாள்:

* சச்சிதானந்த ஸ்வரூபியான விஷ்ணுதான் கடல். அவருக்குப் பூபாரத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாவதே அலை எனப்படுவது. இதனால் மங்களகரமான அவரது அம்சத்தின் ஸ்வரூபமாக கடலிலிருந்து வெளிப்படுகிறது எதுவோ அதுவே ஆத்மா. அதன் தாயாகிய புத்தியின் பிரதிபிம்பம்தான் கௌசல்யை. அந்த ஆத்மாவுக்குப் பிதாவான சுத்த சத்வ அந்தக்கரணம்தான் சத்ய பராக்ரமரான தசரத மகாராஜா.

* அந்த ஆன்மாவின் நான்கு பேதங்கள்தாம் ராமலட்சுமண பரத சத்ருக்னர்கள். அவர்களுள் சத்வகுணப் பிரதானமான துரிய அவஸ்தைதான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி. ஜாக்ரதாவஸ்தைதான் லட்சுமணர். ஸ்வப்னாவஸ்தை பரதர், சுஷுப்தி அவஸ்தைதான் சத்ருக்னர். இவற்றிற்கு ஸ்தானமான ஹ்ருதயாகாசம்தான் அயோத்யா நகரம்.

* மனோவேகம் என்பது வெளியில் பயணம் – தீய சக்திகளை அழிக்க விசுவாமித்ரரின் யாகத்திற்குப் போவது. மனதின் சஞ்சலத்தை நிறுத்தி, கெட்ட எண்ணங்களை அழிப்பதே தாடகை வதம். எப்போதும் பரபரப்பாகவும் நிலையற்றும் இருக்கும் மனோவேகத்தைப் பங்கப்படுத்துவதே சிவதனுஸை முறித்தது. வில்லை முறித்ததன் மூலம் நீர் என்னை மணக்கச் சங்கல்பித்தது மாயா யோகத்தோடு சேர்வதாகும். அதுவே என்னைத் திருமணம் செய்து கொண்டது.

* சித்தத்தில் படிந்துள்ள முந்தைய சம்ஸ்காரங்களின் விதைகளைப் பிடுங்கி எறிந்ததே பரசுராமரின் அகங்காரத்தை அடக்கியது. புத்தியின் எதிர்மறை விளைவால் நீர் நாடுவிட்டு தண்டகாரண்யம் சென்றது கைகேயி என்ற புத்தியின் சூழ்ச்சி.

* கானகத்தில் நீர் அழித்த அரக்கர்கள் யாவரும் 'நானே எல்லாம்' என்ற ஆணவத்தின் வெளிப்பாடுகள். டம்பத்தை அடக்குவது என்பது ஸ்திரமான பஞ்சபூத ஸ்வரூபமான இந்த உடலுக்கு ஓய்வு தேடுவது. ஆத்மா சிரம பரிகாரம் செய்து கொள்ளும் இடமே பர்ணசாலை.

* காம, குரோத, லோபங்களை ஜபிப்பது என்பது ஆசையை அடக்குவது, அதன் வெளிப்பாடுகள் கரன், தூஷணன் வதம். மித மிஞ்சிய காமத்தை அடக்குவது போல திரிசிரஸ் என்ற அரக்கன் அழிவு, தவறான ஆசையை அழிக்காமல் மனதிலிருந்து அகற்றுவதே சூர்ப்பணகையைப் பங்கப்படுத்தி அனுப்பியது.

* மனிதனைப் பந்தங்களிலிருந்து விடுவிக்க நீர் புரிந்த உதவியே மிருக ரூபியான மாரீசனை அழித்தது. பிறகு சுத்த மாயையை அடைவதே தண்டகாரண்யத்தில் சத்வகுணம் பிரதானமான என்னை இடப் புறத்தில் அடைவதாம்.


* ஜடராக்னியில் ரஜோ ரூபமாய் இருப்பதாக எண்ணப்படும் மாயைதான் அக்னியில் பிரவேசித்த ரஜோ ரூபமான நான்.

* அப்போது தாமஸ ரூபமான மாயையின் வியோகம் என்பது தமஸ்வரூபிணியான என்னை ராவணன் அபகரித்துக் கொண்டு போனது. சுகமில்லா பெரிய வருத்தமே நான் உம்மை விட்டுப் பிரிந்தது. பிறகு துக்கத்தின் பங்கம்தான் கபந்த வதம், விவேகத்தை அடைவது சுக்ரீவ நட்பு.

* அதீத பக்தியை அடைவதே நீர் அனுமனை அடைந்தது, அவிவேகத்தை நாசம் செய்வதே நீர் வாலியைக் கொன்றது. பின்னர் உற்சாகத்துடன் சேருவதுதான் விபீஷண சரணாகதி. அஞ்ஞானத்தைத் தாண்டுவதற்கு வேண்டிய உபாயம் நீர் பெரிய சமுத்திரத்தில் அணைபோட்டது.

* மங்களகரமான திரிகுணங்களுக்கும் அடைக்கலமான லிங்கதேகத்தை அடைவதுதான் நீர் திரிகூட மலையின் மேலுள்ள இலங்கையை அடைந்தது.

* அங்கே மதத்தை அடக்குவதுதான் தாமஸமே உருவமான கும்பகர்ணனைக் கொன்றது. பொறாமையை அடக்குவது நீர் இந்திரஜித்தைக் கொன்றது. அங்கே எல்லாவற்றிற்கும் மேலான அகங்காரத்தை ஒழிப்பதே நீர் ராவணனை வதைத்தது.


* சத்வ, ரஜ, தாமஸ உருவில் மூன்று விதமாக இருந்த என்னோடு சேர்ந்தே நீர் மாயையோடு இணைவது எனப்படும்.

* இதயாகாசத்தைக் கடைசியாக அடைவது நீர் அயோத்திக்குத் திரும்பியது. இலங்கையிலிருந்து திரும்பியது என்பது லிங்கதேகத்தின் வியோகம்.

* ஆனந்தமான ஏகசுகம் என்பதுதான் அயோத்தியில் நீர் ராஜ்ய சுகங்களை அனுபவிப்பது.

* இனி வரப்போகும் நிகழ்ச்சிகளையும் நீர் வெளிப்படுத்தி உள்ளீர். மாயையை விடுவது என்பது வால்மீகியின் ஆசிரமத்தில் என்னைத் தாங்கள் விடப்போவது.

* மீண்டும் நீர் என்னை சத்வ மாயையோடு சேருவது இதயாகாசத்தை மஹா ஆகாசத்தில் லயிக்கும்படி செய்வது என்பது நீர் அயோத்தியை நீங்கி வைகுண்டம் செல்வது. சச்சிதானந்தம் என்ற சமுத்திரத்தில் பிரவேசிப்பதுதான் நீர் மானுட ரூபத்தை விட்டு விஷ்ணு ரூபத்தைக் காட்டுவது. சாயுஜ்யமானது உமது ஆத்மா முக்தியை அடைவது.

* ஏ ராம! சுப அசுபமான எந்தெந்தக் காரியங்கள் உம்மால் செய்யப்பட்டனவோ அவை எல்லாம் மக்கள் அறிவை அடைவதற்காகவும் உலக நன்மைக்காகவும்தான். சச்சிதானந்த ஸ்வரூபியும் நிர்க்குண ஆத்ம ஸ்வரூபமான உமக்கு அவற்றால் ஆகப் போவது ஒன்றும் இல்லை.

இந்த மங்களகரமான உரையாடலை நான் உணர்ந்ததால் ஜீவன் முக்தையாகிவிட்டேன். இந்த தேக ராமாயணத்தை நான் மாலையைப் போல் தரித்துக் கொண்டுவிட்டேன்.

நன்றி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (ஏப்ரல், 2019)

தொகுப்பு: மு. சு. முத்துக்கமலம்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1156.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License