இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

இளம் பெண்களுக்கான பாவை நோன்பு

உ. தாமரைச்செல்வி

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, நீராடிச் சுத்தமான ஆடைகளை அணிந்து இறைவனை வழிபடும் இளம் பெண்களுக்கு, அவர்கள் விரும்பியபடி சிறந்த கணவன் அமைவான் என்பது தொன்ம நம்பிக்கை. இந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் சைவம் இதைத் திருவெம்பாவை நோன்பாகவும், வைணவம் இதைத் திருப்பாவை நோன்பாகவும் கொண்டிருக்கிறது.

திருப்பாவை நோன்பு

வைணவப் பெரியார்களுள் ஒருவரான விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) காட்டில் கண்டெடுத்து வளர்த்து வந்த குழந்தை கோதைக்கு இளம் வயதிலேயே கண்ணன் மீது பக்தியும், அன்பும் அதிகமாக இருந்தது. கண்ணன் மீது அளவற்ற அன்பு கொண்ட கோதை கண்ணனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். இதற்காகத் தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து கொள்வார். ஒவ்வொரு நாளும் கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை, அவருக்குத் தெரியாமல் எடுத்துத் தான் அணிந்து கொண்டு, கண்ணாடி முன்பு நின்று, தான் கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறோமா என்று பார்த்து மகிழ்ந்து கொள்வார். அதன் பின்னர், அம்மாலையைத் தான் எடுத்த இடத்திலேயே திரும்பவும் கொண்டு போய் வைத்து விடுவார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கு சூட்டப்பட்டு வந்தன.

ஒரு நாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கி விட்டுப் புதிய மாலை ஒன்றைத் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். ஆனால், அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவன், கோதை அணிந்த மாலைகளே தனக்கு விருப்பமானது என்றும், அதையே தனக்குச் சூட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனால் கோதை, "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்பட்டார்.


இந்நிலையில் விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். இத்திருமண ஏற்பாட்டை மறுத்த ஆண்டாள், தான் திருவரங்கம் கோயிலில் இருக்கும் இறைவன் திருவரங்கனையே மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார். இதனால் விஷ்ணுசித்தர் மிகுந்த கவலையடைந்தார்.

இதைத் தொடர்ந்து, ஆண்டாள் ஸ்ரீ பாகவதத்தில், கோகுலத்து இடைக்குலத்து இளம் பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, தோழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் வரலாற்றுப் பாடலைப் பாடியபடியே நீராடிப் பின், மணலில் கார்த்தியாயினி உருவம் அமைத்து, அத்தேவியிடம் கண்ணனே தங்களுக்குக் கணவனாக வர வேண்டும் என்று வேண்டுவதை நினைவில் கொண்டு, தானும் இறைவனைக் கணவனாக அடைந்திட, மார்கழி மாதத்தில் அதற்கான வழிபாட்டைத் தொடங்கினார். இந்த வழிபாட்டில், மார்கழி மாதத்தில் முப்பது நாட்களுக்கும், முப்பது பாடல்களை இயற்றி இறைவனைப் பாடல்களால் பாடி வழிபட்டார். ஆண்டாள் இயற்றிய இந்த முப்பது பாடல்களும் திருப்பாவை எனப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய இறைவன், ஆண்டாளை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார். இதன்படி ஆண்டாள் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டுத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோயில் கருவறைக்குள் சென்ற ஆண்டாள் இறைவனுடன் ஒன்றாகக் கலந்தாள். இறைவனையே கணவனாக அடைய வேண்டுமென்று விரும்பிய ஆண்டாளின் எண்ணமும் நிறைவேறியது.

இறைவனே கணவனாக வர வேண்டும் என்று விரும்பிய ஆண்டாள் மார்கழி மாதப் பாவை நோன்புக்கு இயற்றிய திருப்பாவையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் திருப்பாவை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் விடியும் முன்பாக எழுந்து, அருகிலுள்ள நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, அதன் பிறகு அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று இறைவனைப் பாடி வழிபட வேண்டும். இக்காலத்தில் நெய் மற்றும் பால் உண்ணாமலும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக் கொள்ளுதல் போன்ற அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாமலும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறைவன் குறித்த சிந்தனையுடன் திருப்பாவை பாடி வழிபாடுகள் செய்ய வேண்டும். இத்துடன் ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களையும் பாடி வழிபடலாம். திருப்பாவை நோன்பு மேற்கொள்ளும் இளம் பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி சிறந்த கணவன் அமைவான் என்பது வைணவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

சங்ககாலப் பாடல் செய்தி

மகளிர் கடற்கரை மணற்பரப்பிலிலும், ஆற்றங்கரையிலும் வண்டல் மண் கொண்டு பாவை (பொம்மை) போன்ற உருவம் செய்து விளையாடும் “வண்டல் அயர்தல்” எனப்படும் விளையாட்டு குறித்த செய்திகள் சங்க காலப் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது. தாம் விரும்பிய வண்ணம், தமக்கு ஏற்ற கணவர் கிடைக்க வேண்டும் என்று தைத்திங்கள் முழுவதும் நோன்பிருந்து வழிபடும் இந்நோன்பை “தை நீராடுதல்” என்றும் “அம்பா ஆடல்” என்றும் அழைப்பதுண்டு.

திருவெம்பாவை நோன்பு

மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியர்களுடன் அருகிலுள்ள நீர் நிலைகளுக்குச் சென்று சிவன் - பார்வதி புகழ் பாடியபடி நீராடிப் பின்பு வழிபடும் முறையினைக் கண்ட மாணிக்கவாசகர், இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இருபத்தொன்று பாடல்களில் திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட்டார்.

மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளை இறுதி நாளாகக் கொண்டு, அதற்கு முன்பாக வரும் ஒன்பது நாட்களையும் சேர்த்து மொத்தம் பத்து நாட்கள் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாட்களில் இளம் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடை அணிந்து கொண்டு அருகிலுள்ள நடராஜர் கோயிலுக்குச் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜர் முன்பாகத் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும். இந்நோன்பை இளம் பெண்கள் மட்டுமின்றி, சிவ பக்தர்களும் மேற்கொள்கின்றனர்.


இந்நோன்புக் காலத்தில் இளம் பெண்களும், இந்நோன்பை மேற்கொள்ளும் சிவ பக்தர்களும் ஒரு நேர உணவாக அவித்த உணவினை மட்டுமே உண்ண வேண்டும். திருவெம்பாவைப் பூசையின் போது, இறைவனுக்குப் பிட்டு படையலாக வைக்கப்படுகிறது. இதனால் இப்பூசையினைப் பிட்டுப்பூசை என்றும் அழைப்பதுண்டு. இந்நோன்பின் இறுதி நாளான திருவாதிரை நாளன்று இறைவனுக்குக் கேழ்வரகுக் களி படையலாக படைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

திருவெம்பாவை நோன்பு மேற்கொள்ளும் இளம் பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி சிவ பக்தியுடையவன் கணவனாக அமைவான் என்பதும், சிவ பக்தர்கள் வேண்டியவற்றைப் பெறுவார்கள் என்பதும் சைவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் அவர்கள் விரும்பும் ஏதாவதொரு வழியில் பாவை நோன்பைக் கடைப்பிடித்து, மிகச் சிறந்த கணவரைப் பெற்று இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியடையலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p118.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License