21 வகையான தீய குணங்கள், மனிதர்களைத் தீயவனாக்கி விடுகின்றன என்று இந்து சமய வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;
1. தற்பெருமை கொள்ளுதல்
2. பிறரைக் கொடுமை செய்தல்
3. கோபப்படுதல்
4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்
5. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6. பொய் பேசுதல்
7. கெட்ட சொற்களைப் பேசுதல்
8. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9. புறம்பேசுதல்
10. தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11. பாரபட்சமாக நடத்தல்
12. பொருத்தமற்றவர்களைப் புகழுதல்
13. பொய்சாட்சி கூறுதல்
14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15. வாக்குறுதியை மீறுதல்
16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18. வதந்தி பரப்புதல்
19. கோள் சொல்லுதல்
20. பொறாமைப்படுதல்
21. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.