இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

இராமாயணங்கள்

மு. சு. முத்துக்கமலம்

ராமாயணம் என்ற சொல்லுக்கு, 'ராமன் வழி' என்று பொருள் கொள்ளல் வேண்டும். வால்மீகி, கம்பர் ஆகியோர் முறையே வடமொழியிலும் தமிழிலும் இயற்றிய ராமாயணம் உலகக் காப்பியங்களுள் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன. இவ்வேளையில் ராமனை மையமாகக் கொண்டு தோன்றியிருக்கும் மேலும் சில ராமாயணங்களை அறிந்து கொள்ளலாமா?.

1. ஆதிகால ராமாயணங்கள்

ராமனுடைய காலத்திலேயே பல அருளாளர்கள் அவன் சரிதத்தைச் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் சியவனர், போதாயனர், பரத்துவாசர் முதலியவர்கள் செய்த ராமாயணம் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தின் வெளிப்பாட்டால், அவை மறைந்திருக்கலாம்.

2. ஆனந்த ராமாயணம்

இது 9 காண்டங்களையும், 109 சருக்கங்களையும் 12,252 பாடல்களையுமுடைய வடமொழி நூல். இதில் சார காண்டத்தில் வால்மீகி ராமாயணம் சுருக்கிச் சொல்லப்படுகிறது. யாத்ரா காண்டத்தில் ராமனின் தீர்த்த யாத்திரை சொல்லப்படுகிறது. யாக காண்டத்தில் ராமன் செய்த 108 அசுவ மேத யாகங்கள் கூறப்பெறுகின்றன. இதில் ராமனுடைய பூசை, உபாசனை பற்றிய விதிகள், ராமநாமம் செய்த விரதப் பூர்த்தி; அனுமன், சீதை, இலக்குவன், பரதன், சத்துருக்கனன் ஆகியோரை வணங்கத் தேவையான கவசநூல்களும் உள்ளன. எனவே இது சதகோடி ராமயணத்தின் ஒரு பகுதி என்றே அழைக்கப்படுகிறது.

3. அத்யாத்ம ராமாயணம்

இது பிரம்மாண்ட புராணத்தில் அடங்கிய பகுதி. ராமானந்த சுவாமிகள் பரமசிவன் வரத்தாலும், கிருஷ்ண சைதன்யர் என்பவரின் கட்டளையாலும் இதனைச் செய்தார் என்று தெரிகிறது. வால்மீகி சொல்லாத பல உள்ளுறைப் பொருள்கள் இதில் கூறப்பெற்றிருக்கின்றன.

4. அற்புத ராமாயணம்

இது வால்மீகியால் பரத்துவாசன் என்ற சீடனுக்கு உபதேசிக்கப் பெற்றுள்ளதாக அமைந்துள்ளது. 27 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் ஆஞ்சனேயருக்கு ராமன் செய்த உபதேசம் ஒரு முக்கியப் பகுதி.

5. அக்னிவேசிய ராமாயணம்

ராமாயணத்தின் முக்கியமான செய்திகளை வருடம், மாதம், திதி ஆகிய குறிப்புக்களுடன் பஞ்சாங்க ரூபமாக சொல்லும் நூல்.


6. ஸங்க்ரஹ ராமாயணம்

வால்மீகி ராமாயணத்தையொட்டி நாராயண பண்டிதரால் செய்யப் பெற்றது.

7. யோகவாசிஷ்ட ராமாயணம்

இதற்கு வேறு பெயர் ஞானவாசிட்டம். தத்துவ உபதேசங்களும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற அறுவகை உட்பகைகளை நீக்கும் முறையும் இதில் கூறப்பெறுவது மிகச் சிறப்பானது.

8. ஸ்ரீதர ராமாயணம்

பாகவதத்திற்கு உரைசெய்த ஸ்ரீதர சுவாமிகளே இதன் ஆசிரியர். வேறு எந்த ராமாயண ஆசிரியராலும் சொல்லப்படாத, கர்ண பரம்பரையாகக் கருதப்பெறும் கதைகள் பல உள்ளன. இதனை சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் பெரிதும் போற்றியுள்ளார்.

9. மந்திர ராமாயணம்

லட்சுமணார்யர் என்பவரால் செய்யப்பட்டது. ராமாயண சம்பவங்களுக்கு ஏற்ப மந்திரங்களுக்கு விரிவுரை செய்யப்பட்டுள்ளது.

10. ரகுவம்சம்

காளிதாசன் இயற்றியது. 19 சருக்கங்களுடன் திடீரென முடிந்து விடுகிறது. சூரியவம்சப் பேரரசர்களின் வரலாறுகள் கூறப்பெறுகின்றன. இதில் உள்ள பல அம்சங்கள் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. முன்னிருந்த சான்றோர் பலர் மொழிந்த கதையை அடிப்படையாகக் கொண்டே தாம் இதை இயற்றியிருப்பதாகக் காளிதாசரே தெளிவுறக் கூறுகிறார்.

11. பட்டிகாவியம்

இது ராவணவதத்தைக் குறிப்பது. வலபி என்ற நகரத்தில் இருந்த தரசேனன் என்பானது அவைக் களத்தில் பட்டிகவி என்பவரால் இயற்றப் பெற்றது.

12. ராமநாடகம்

தமிழகத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அருணாசலக் கவிராயரால் இயற்றப் பெற்றது. தரு, திபதை, கண்ணி, விருத்தம், ஓரடி, கீர்த்தனை எனப் பலவகைப் பாவினங்களால் ஆனது. மிக எளிய மக்களுக்கும் புரியுமாறு தமிழ்மொழியில் செய்யப்பெற்ற இந்த நாடகம் தமிழகத்தில் மிகப் பிரபலமானது.

13. பாஸ்கர ராமாயணம்

இது தெலுங்கு மொழியில் பாஸ்கரக் கவியால் இயற்றப் பெற்றது. அரிய கற்பனைகளும், விருத்தங்களும், சொல் சேர்க்கையும் உடையது. இதில் உள்ள சில கடினமான சொல் பயன்பாடுகள் புலவரால் பெரிதும் விவாதிக்கப்பெறுவன.


14. துளசிதாசர் ராமாயணம்

இதற்கு வேறு பெயர் ராமசரிதமானஸம் என்பது. இது புசுண்ட மகரிஷியால் கருடனுக்கும் யாக்ஞவல்கியருக்கும் சொல்லப்பெற்றது. யாக்ஞவல்கியருடைய சீடர் பரம்பரையைச் சார்ந்த துளசிதாசர் என்பவரே இதனைக் காவிய வடிவில் தந்தார். இவர் காலம் கி.பி. 1575-1624. ஹஸ்தினாபுரத்தில் பிறந்து காசியில் வளர்ந்தவர். இது ஹிந்தி மொழியில் ஏழு காண்டங்களைக் கொண்டதாக உள்ளது.

15. ஜைன ராமாயணம்

ஹேமசந்திராசார்யர் என்ற ஜைனகவி இயற்றியது. இது மாகதி மொழியில் இயற்ற பெற்றது. குடந்தை நகர் பாரதாசாரியார் இதனை வெகு காலத்திற்கு பின்பு வட மொழியில் மொழிபெயர்த்தார். தமிழிலும் வெளிவந்துள்ளது.

16. பௌத்த ராமாயணம்

புத்தரால் அருளச் செய்யப்பெற்ற தம்மபதம் என்ற நீதிநூலுக்குப் புத்தகோஷர் என்பவர் இயற்றிய உரையிலும், மகாவம்ச சரிதத்திலும், புத்தருடைய முற்பிறவிக் கதைகளில் ஒன்றான தசரதஜாதகக் கதையிலும் உள்ள குறிப்புக்கள் இதில் உள்ளன.

17. மொல்ல ராமாயணம்

ஆந்திரத்தைச் சேர்ந்த பெண்பாற்புலவரான மொல்ல என்பவரால் இயற்றப் பெற்றது.

18. பாசுரப்படி ராமாயணம்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் காணும் ஆழ்வார்கள் பாசுரத்தினின்றும் ராமாயணத் தொடர்பான வரிகளை எடுத்துத் தொகுத்துப் பெரியவாச்சான்பிள்ளை என்பவரால் தரப்பெற்றது. பத்து நிமிடங்களுள் முழுமையாக ராமாயணத்தை அழகு தமிழில் கற்க இதுவே சிறந்த நூல். 800 ஆண்டுகளுக்கு முன்பு குடந்தைக்கு அண்மையிலுள்ள திருச்சேய்ஞலூர் என்ற இடத்தில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணபாதர் என்பவரே பெரியவாச்சான்பிள்ளை எனப்பெறுபவர். ஆழ்வார்கள் பாசுரங்கள் அனைத்துக்கும் உரை இயற்றி 'வியாக்யான சக்கரவர்த்தி' என்று புகழ் பெற்றவர். இதனை நித்திய பாராயணம் செய்தால் நினைத்த செயல் கைகூடும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1216.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License