இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

அண்ணாமலையாரின் அருள் பெறுவோம்!

தி. செல்லப்பா

மலைக்கோவில்களுக்கு செல்வதற்கு முழுநிலவு நாளையே பக்தர்கள் தேர்வு செய்கின்றனர். அன்று சந்திரம் முழு ஒளியுடன் இருப்பார். குறிப்பாக, சித்திரை முழுநிலவு நாளன்று சந்திரன் கூடுதல் சக்தியுடன் ஒளிர்வார். அதனால்தான் அந்த நாளைத் தேர்ந்தெடுத்து விழாக்கள் நடத்தப்படுகின்றன.

நவக்கிரகங்களில் சந்திரன் மனபலம் தருபவர். ஜோதிடத்தில் அவரை மனோகாரகன் என்பர். மன பலம் கிடைத்து விட்டால், எதிலும் வெற்றிதான். எனவே, அந்நாளில் மலைக்கோவில்களில் மலை வலம் வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலையில் மலை வலத்திற்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகின்றனர். சித்திரை முழு நிலவு நாளிலான மலை வளம் சிறப்பு மிக்கதாக இருக்கிறது.

சிவன், முருகன், பெருமாள், அம்பாள் என பல தெய்வங்கள் மலையில் குடி கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு மலையே சிவனாக இருக்கிறது என்றால் அதுதான் அண்ணாமலை. ‘அண்ணா’ என்றால் ‘மிக உயர்ந்த’ என பொருள். அண்ணாந்து பார்க்க வைக்க வைக்கும் மலை என்பதால், இதற்கு இப்படி ஒரு பெயர். அத்துடன் மரியாதை நிமித்தமாக ‘திரு’ சேர்த்து, ‘திருவண்ணாமலை’ ஆயிற்று. இங்கே அண்ணாமலையாரும், அபிதகுஜாம்பிகை என்னும் உண்ணாமுலை அம்மனும் இருந்து அருள் புரிகின்றனர். தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலை வற்றாமல் வழங்குவது போல், இந்த அம்பாள் வற்றாத அருளை உலக உயிர்களுக்கு அருள்பவள். இதனால் ‘உண்ணாமுலை’ என்று இவளுக்குப் பெயர். எவ்வளவு கேட்டாலும் வரம் தரும் இயல்புள்ளவள் எனறு இதற்குப் பொருள்.

திருவண்ணாமலை 2748 அடி உயரம் கொண்டது. இதை ஒரு முறை சுற்றி வர 14 கிலோ மீட்டர் தொலைவினைக் கடக்க வேண்டும். புவியியல் அமைப்பின்படி இந்த மலை தோன்றி 260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தொடக்கத்தில் நெருப்பைக் கக்கி வந்த இந்த நெருப்பு மலை, இப்போது சிவனின் மனம் போல் குளிர்ந்து, அனைவரையும் அருகில் நெருங்க அனுமதிக்கிறது.


அண்ணாமலையார் கோயில் 24 ஏக்கர்(10 லட்சத்து 67ஆயிரத்து 993 சதுர அடி) பரப்பளவு உடையது. இங்கு ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் உள்ளன. வடக்கிலுள்ள அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி, மேற்கிலுள்ள பேய்க்கோபுரம் 160 அடி, வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் ஆகியவை 81 அடி, தெற்கு, மேற்கு கட்டை கோபுரங்கள் 70 அடி, வடக்கு கட்டை கோபுரம் 45 அடி உயரம் கொண்டவை.

இங்கு திருக்கார்த்திகை மற்றும் சி்த்திரை முழு நிலவு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் தீபமேற்றுவர். பிரம்மாவுக்கும், பெருமாளுக்கும் அண்ணாமலையார் நெருப்பு மலையாக காட்சி தந்ததன் அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இங்கு தீபமேற்றும் வழக்கம் வந்த வரலாறு சுவையானது.

பிரம்மாவுக்கும், பெருமாளுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. அவர்கள் சிவனை அணுகினர். அவர் மலை போன்ற நெருப்பு வடிவாக வானத்துக்கும் பூமிக்கும் உயர்ந்து நின்றார். பிரம்மாவைத் தனது உச்சியையும், பெருமாளைத் தனது பாதத்தையும் பார்த்து வரும்படி அனுப்பினார். இருவரும் களமிறங்கினர். இருவராலும் அதைச் செய்ய முடியவில்லை. பெருமாள் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மாவோ முடியைக் கண்டுவிட்டதாக பொய் சொன்னார். அதனால் அவருக்கு பூமியில் பூஜை கிடையாது என்ற தண்டனையைப் பெற்றார். சிவனின் நெருப்பு வடிவம் குளிர்ந்து மலையாக மாறி விட்டது. இதுவே அண்ணாமலை ஆயிற்று.

‘அண்ணா’ என்னும் சொல்லுக்கு ‘நெருங்க முடியாத’ என்ற பொருளும் உண்டு. அது நெருப்பு மலை என்பதால், யாராலும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. கலியுகத்தில் நம் மீது அன்பு கொண்டு, மலையாய் இருக்கும் சிவன் குளிர்ந்து நம்மை அருகில் வர அனுமதிக்கிறார் என்பர்.


இவ்வூரில் வசித்த சிவனடியார் ஒருவர், கணம்புல் கொண்டு இந்த கோயிலில் தீபமேற்றி வந்தார். ஒருமுறை கணம்புல்லுக்கு தட்டுப்பாடு ஏற்படவே, சற்றும் யோசிக்காமல் தனது முடியை அறுத்து திரியாக்கி தீபமேற்ற முயன்றார். அப்போது சிவனும், பார்வதியும் அங்கு தோன்றி அவரைத் தடுத்து ஆட்கொண்டனர். அவரது மனதிடத்தையும் சேவையையும் பாராட்டினர். நாயன்மார்களில் ஒருவரான அவர் கணம்புல் கொண்டு விளக்கேற்றியதால், கணம்புல்லர் என பெயர் பெற்றார். அவர் கணம்புல்லால் அன்று விளக்கேற்றியது போல, இன்று காடாத்துணி கொண்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்றுகின்றனர்.

திருவண்ணாமலை மலை வலப் பாதையில் அஷ்ட லிங்கம் எனப்படும் எட்டு லிங்கக் கோயில்கள் உள்ளன. முதலில் இந்திரலிங்கத்தை வணங்கி விட்டு மலைவலத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ந்து அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் தரிசனம் முடித்து, சுடுகாட்டிலுள்ள ஈசானலிங்கக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். மனிதன் என்னதான் சம்பாதித்தாலும், கடவுளிடம் என்ன வேண்டினாலும், மரணம் ஒன்றே உண்மையானது என்ற தத்துவத்தை இங்கே உணரலாம். அடுத்து அண்ணாமலையார் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதுடன் அண்ணாமலை தரிசனம் நிறைவடையும். கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை, நேர் அண்ணாமலை கோயில்களும் உள்ளன.

சித்திரை மாதத்தில் ஒரு நாளாவது திருவண்ணாமலை சென்று, அண்ணாமலையாரின் அருளைப் பெற்று வாருங்கள்....!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1218.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License