இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

தேங்காய் வழிபாடு

மு. சு. முத்துக்கமலம்

இந்து சமய வழிபாட்டில் தேங்காய் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காய் வழிபாட்டில் பல்வேறு தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.

தேங்காய் நீர் என்பது உயிர் எனலாம். தேங்காயின் மட்டை , நார், ஓட்டுப் பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, அங்கே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது. நீர் இறைவன் திருவுருவம் முன் அர்ப்பணிக்கப்படுகிறது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

தேங்காய் ஓடு அகங்காரம்; தேங்காய்ப் பருப்பு-ஞான உணர்வு. இறைவனது திருக்காட்சியை உயிர் பெறாதபடி இடையில் இரும்புத்திரை போன்று அகங்காரமே இருக்கிறது. அகங்கார 'ஓடு', உடைந்தால், உயிர், ஞான உணர்வைப் பெற்று இறைவனைத் தரிசிக்கிறது என்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது.

தேங்காய்-இதயம்; மூன்றாம் கண் ஞானக்கண்; வெண்மை -சத்துவக்குணம். ‘சத்துவக்குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும் போது தோன்றும் பக்தி, உணர்வுகளை இதயம் உணர்கிறது' என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது என்று மற்றொரு கருத்தும் இருக்கிறது.

இதே போன்று, தேங்காய் உடைப்பதைப் பற்றியும் பல உட்கருத்துகள் இருக்கின்றன.


சிதறு தேங்காய்

கோயிலின் முன்பாக, குறிப்பாக பிள்ளையார் கோயிலின் முன்பாக, தேங்காய் சிதறித் தூளாகும்படி தரையில் அடிக்கும் சிதறு தேங்காய் போடும் நிகழ்வு நடைபெறுகிறது.

' சிதறிய தேங்காய்ப் பகுதிகளை, பலர் எடுத்துக் கொள்ளும்படி 'கொள்ளை' விடுவது சூறைத் தேங்காய். நான்கு திசைகளிலும் சிதறும்படி தேங்காயை உடைப்பது 'சதுர்த்தேங்காய்’ என்றும் சொல்வர்.

சிதறு தேங்காயைச் சூறை விட்டு, அர்ச்சனை செய்து வழிபடும் வழிபாடு விநாயகருக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. விநாயகரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு சிலர் 108 எனும் எண்ணிக்கையில் தேங்காய்களைச் சூறை விடுவதுண்டு. சிதறிய தேங்காய்ச் சிதறல்களைத் தொகுத்து எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கே உரியது. சிறுவர்களில்லாத நிலையில், பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சிதறு தேங்காயின் தத்துவப் பொருள் இதுதான். சிதறுகாய் அகங்காரத்தின் முடிவையும், தியாகத்தின் தொடக்கத்தையும் ஒருங்கே தெரிவிக்கிறது. சிறுவர்கள் சிதறல்களைத் தொகுப்பது, சூறைக்காயை உடைப்பவர், மறைமுகமாகச் செய்கின்ற தர்மமாகும். எனவே, அகங்கார மண்டையோடு உடைய வேண்டும்; அமுதமயமான அறிவுநீரை அடைய வேண்டும் என்பதுதான் சிதறு தேங்காய் சொல்லும் உட்கருத்துகளாகும்.

இதே போன்று, தேங்காயில் நெய்யை நிரப்பி, அதனால் வழிபடும் வழக்கமும் இருக்கிறது. இவ்வழிபாடு பெரும்பான்மையாக, ஐயப்பனுக்கே உரியது. ஐயப்பப் பக்தர்கள் கடும் விரதமிருந்து கட்டுகின்ற 'இருமுடியில்', முதல் முடியில் முக்கியமாக நெய்த்தேங்காய் இடம் பெறுகிறது. இதில் தேங்காயின் நீருக்குப் பதிலாக நெய் நிரப்பப்படுகிறது.

தேங்காய்-உடம்பு, நெய்-உயிர்; அல்லது பக்தி. நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேங்காய் சபரிமலைத் திருக்கோயிலில், எப்போதும் எரியும் பெரிய ஓம குண்டத்தில் எறியப்படுகிறது. நெய் (உயிர்) இறைவனுடன் சங்கமமாகிறது; தேங்காய் (உடம்பு) எரியில் அடக்கமாகிறது.

மனிதனின் உயிர், உடம்போடு தோன்றுவதன் பயன், அது இறைவனுடன் ஒன்றுபடுவதுதான் என்ற அடிப்படைத் தத்துவத்தை நெய்த்தேங்காய் உணர்த்துகிறது.


கலசத்தேங்காய்

வரலட்சுமி விரதத்தின்போது கலசத்தின் மீது வைக்கப்படுவது, கலசத்தேங்காய். ஒரு கலசத்தில் நூல் வரிசைகளைச் சுற்றி, அதில் அரிசி அல்லது நீரால் நிரப்பி, ஐந்து மாவிலைகளை அமைத்து, கலசத்தின் மீது நாருடைய அல்லது நாரில்லாத தேங்காயைப் பொருத்துகின்றனர். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமமிட்டு, மலர்களாலும், நகைகளாலும், துணிகளாலும் மிகவும் தெய்விகக் கவர்ச்சி பொங்க அலங்கரிக்கிறார்கள். கலசத்தில் லட்சுமியின் முகத்தைப் பொருத்துகின்றனர்; அல்லது மஞ்சளால் முகத்தை உருவாக்குகின்றனர். இதற்கென்றே வெள்ளி, பொன்னாலான லட்சுமியின் முகம் உள்ளது.

வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன் மீது வைக்கப்படும் கலசம் மிகப் புனிதமானது, லட்சுமிகரமானது. ஆதிசங்கரர் கலசத்தேங்காயை 'ஞானபலம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கலசம் - மனம்; நூல் - பிரேமை, நீர், மகிழ்ச்சி , மாவிலை - இறைவனடி. 'மனமாகிய கும்பத்தின் மேல், இறைவனடி பொருந்தியிருக்க, தேங்காய் என்ற ஞானபலம் அதிகமாகிறது' என்பது இதன் கருத்து. அதாவது, கலசம் நல்ல தூய நீரால் நிறைந்திருப்பதைப் போல், மனம் நல்ல தூய எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும். கலசத்திலும், நீரிலிலும் மாவிலை இருப்பதைப் போல், மனதிலும், எண்ணங்களிலும் எப்போதும் இறைவனது திருவடிகளே நிலைத்திருக்க வேண்டும். அப்போது 'ஞானபலம்' பெருகி இறைக்காட்சி கிடைக்கிறது.

மற்றொரு கருத்தும் உள்ளது.

கலசம் - உடம்பு, நூல் நரம்புகள், நீர் - உயிர் அல்லது மனம்; மாவிலைகள் - தெய்வத்தின் அருளை உயிருக்கு மாற்றும் சாதனம்; தேங்காய் - தெய்வம்.

தெய்வமூர்த்தமாகவே கலசத் தேங்காயைக் கருதி, அதைச் சிறப்பாக அலங்கரிக்கிறார்கள். கலசத்தேங்காயின் உயர்ந்த மதிப்பு இங்குக் கருதத்தக்கது. அது தெய்வமாகவே கருதப்படுகிறது. வரலட்சுமி பூஜையில் மட்டுமல்லாமல், யாக சாலைகளில் விநாயகர், நவக்கிரகப் பூஜைகளிலும் கலசங்கள் பல பயன்படுகின்றன.

பூரண கும்பம் - கலசத்திற்கும், பூரண கும்பத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. சிறிய செம்பைப் பயன்படுத்துவது கலசம், பெரிய செம்பு அல்லது குடத்தைப் பயன்படுத்துவது பூரண கும்பம். பூரண கும்பத்தில் வீற்றிருப்பவள் லட்சுமி; அதைக் கையில் ஏந்திக்கொண்டிருப்பவளும் அவளே. கோயில் முதலான இடங்களுக்கு வருகை தரும் சான்றோர் முதலியவர்களைப் பூரண கும்பத்துடன் வரவேற்பது வழக்கம். பூரண கும்பம் மங்கலத்தின் சின்னம்; அதன் விளிம்பில் பொருத்தப்படும் தேங்காய் இறைவன் திருமேனி. கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படும் இறைவனுக்குக் 'கும்பமூர்த்தி' என்பது பெயராகும்.


கும்பத்தேங்காய்

கும்ப தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகம் நடத்தி, மந்திர உருவேற்றி, அந்தக் கும்ப தீர்த்தத்தை இறைவனின் மூர்த்தம் முதலியவற்றின் மேல் அபிஷேகம் செய்வதே கும்பாபிஷேகம்.

1. தானியம் - ஆசனம், 2. கும்பம் - இறைவனின் திருமேனி, 3. நூல் - நரம்புகள், 4. நீர் - இரத்தம், 5. அதனுள் போடப்படும் பொன் - உயிர், 6. தேங்காய் - திருமுடி.

கும்பத்தேங்காய் இறைவனின் திருமுடியாகத் திகழ்கிறது. அதாவது, கும்பமும், தேங்காயும் இணைவது இறைவனின் முழு வடிவமாகும்.

முகூர்த்தத் தேங்காய்

திருமண வீடுகளில், வரவேற்பு நுழைவாயிலில், குலையுடன் கூடிய வாழை மரத்தில், தேங்காய்க் குலையையும் கட்டுவது சந்தான அபிவிருத்தியின் அடையாளங்கள் மற்றும், செல்வ வளமையின் சான்றுகள்.

நாருடன் அமைந்த, எந்தக் குற்றமும் இல்லாத முகூர்த்தத் தேங்காய்க்கு மஞ்சள், குங்குமமிட்டு அதில் தாலியைச் சுற்றி வைக்கிறார்கள். தேங்காய் - ஒரு தெய்வம்; அதனுடன் தொடர்புடையது தாலி, சபையோருக்குத் தாலி காட்டப்படும் போது, அவர்கள் தேங்காயை வணங்குகிறார்கள், தாலியை வாழ்த்துகிறார்கள். ஆகவே, தேங்காய் ஒரு தெய்வம், அல்லது தெய்வத்திற்கு நிகரானது, வழிபடத் தகுந்தது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முடிவில் அன்பளிப்பாகத் தரப்படுவதும் ஒரு தேங்காய்தான். இது நன்றியுணர்வை எடுத்துக் காட்டுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1232.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License