இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

பரிகார விளக்குகள்

உ. தாமரைச்செல்வி

தற்போதைய சோதிடப் பரிகாரங்களின் மூலம் மக்களிடையே சில பரிகார விளக்குகள் பிரபலமடைந்துள்ளன. இவ்விளக்கு ஏற்றப்படுவதன் வழியாக, மன அமைதி, எதிர்மறை ஆற்றல் நீக்கம் மற்றும் உடனடித் தீர்வு போன்றவை கிடைக்கும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

1. வெற்றிலை விளக்கு

இந்து சமயத்தில் வெற்றிலை என்பது மங்களகரமான பொருளாகவும், மகாலட்சுமியின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முழுமையான, காம்புகளுடன் கூடிய பச்சையான வெற்றிலைகளை நட்சத்திர வடிவத்திலோ அல்லது வட்ட வடிவத்திலோ அடுக்கிக் கொள்கின்றனர். அதன் மையப்பகுதியில் ஒரு சிறிய களிமண் அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றித் தீபமேற்றப்படுகிறது. கடன்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் நீங்கவும், கணவன் - மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும், சுபகாரியத் தடைகள் அகலவும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தீபம் ஏற்றப்படுகிறது.

2. பசுஞ்சான விளக்கு

பசுவின் சாணத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாகப் பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. தூய்மையான நாட்டுப் பசுவின் சாணத்தைச் சேகரித்து, அதனை உலர வைத்து, களிமண் அகல் விளக்கு போன்ற வடிவத்தில் கைகளால் செய்து, அந்தச் சாணக் கிண்ணத்தின் உள்ளேயே எண்ணெய் மற்றும் திரி இட்டு நேரடியாக ஏற்றப்படும் விளக்கு வடிவமாகும். இவ்விளக்கு எரியும் போது அதன் நெய் தீர்ந்தவுடன், சாணக் கிண்ணமும் சேர்ந்து முழுமையாக எரியத் தொடங்கும். இது எரியும்போது வெளிப்படும் புகை, காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். வீட்டில் உள்ள தரித்திரம், கண்புருவம் மற்றும் தீய சக்திகள் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாக இது பயன்படுகிறது.

3. பஞ்சகவ்ய விளக்கு

பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகிய ஐந்து புனிதப் பொருட்களை (பஞ்சகவ்யம்) சில மூலிகைகளுடன் கலந்து விளக்குக் கிண்ணமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்த விளக்கை அரச இலை, வாழையிலை அல்லது வெற்றிலையின் மீது வைத்து, அதன் உள்ளே பசு நெய் ஊற்றித் தீபமேற்ற வேண்டும். விளக்கு எரிந்து முடிந்த பின் எஞ்சும் சாம்பலைத் தூய்மையான "விபூதி" பிரசாதமாகவும், செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்துகின்றனர். பஞ்சகவ்ய விளக்கு எரியும் போது வெளிப்படும் மூலிகைப் புகை, வீட்டில் கணபதி ஹோமம் அல்லது நவகிரக ஹோமம் நடத்தியதற்கு நிகரான நேர்மறை அதிர்வுகளை உருவாக்கி, கடுமையான வாஸ்து தோஷங்களை நீக்கும் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.


4. மிளகு விளக்கு

ஒரு சிறிய சிவப்பு நிறப் பருத்தித் துணியில் சில கருப்பு மிளகுகளை இட்டு முடிச்சாகக் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு முடிச்சைத் திரியாகப் பயன்படுத்தித் தீபமேற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி திதி நாட்களில் மாலை நேரத்தில் காலபைரவர் சன்னதியில் இது ஏற்றப்படுகிறது. இழந்த சொத்துக்கள் மற்றும் பணத்தை மீண்டும் பெறவும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இத்தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. 5. குபேர விளக்கு

ஒரு சிறிய ஆழமான வட்டக் கிண்ண வடிவில் உள்ளது. சில விளக்குகளில் அதன் பின் பலகையில் செல்வத்தின் அதிபதியான குபேரனின் திருவுருவமோ அல்லது "குபேர முத்திரை" மற்றும் குபேர நாணயங்களின் வடிவங்களோ செதுக்கப்பட்டிருக்கும். பொதுவாக, வியாழக்கிழமை மற்றும் தீபாவளி, தனத் திரியோதசி போன்ற நாட்களில் வீட்டின் பூசை அறையின் வடக்குத் திசையில் அல்லது பணப்பெட்டியின் அருகில் ஏற்றப்படுகிறது. பூச நட்சத்திரம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்கள், தேய்பிறை பிரதமை திதி மற்றும் வியாழக்கிழமையுடன் பூச நட்சத்திரம் இணைந்து வரும் நாட்கள் குபேர தீப வழிபாட்டிற்கு மிக விசேஷமான நாட்களாகும். இவ்விளக்கு ஏற்றி வழிபடுவது, வறுமை நீங்கித் தொழில் வளம் சிறக்கவும், வீட்டில் எப்போதும் செல்வமும் பணப்புழக்கமும் தடையின்றி நிலைத்திருக்கவும் நவீனப் பரிகாரமாக இருக்கிறது.

6. கோபுர வடிவ விளக்கு

இந்து சமயக் கோயில்களின் பிரதான நுழைவாயில் கோபுரத்தை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வகையில் மிக நுட்பமான அடுக்குக் கட்டிடக் கலை வடிவில் பித்தளையால் செய்யப்படுகிறது. கோபுரத்தின் அடியில் விளக்குக் கிண்ணங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களுக்கு அடிக்கடி செல்ல முடியாத தற்கால நகரத்து மக்கள், தங்களின் வீட்டின் பூசை அறையிலேயே கோயில் கோபுர தரிசனம் செய்த பலனைப் பெற இவ்வடிவ விளக்கை ஏற்றி வழிபடுகின்றனர். "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த விளக்கை வீட்டில் ஏற்றுவதன் மூலம் ஒட்டுமொத்தக் கோயிலையே வீட்டிற்குள் எழுந்தருளச் செய்வதற்குச் சமமான நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்பது தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.


7. வராகி விளக்கு

சப்தகன்னியரில் ஒருவரான, பன்றி முகத்தைக் கொண்ட மிகச் சக்தி வாய்ந்த பெண் தெய்வமான வாராஹி அம்மனின் முழு உருவச் சிலையையும், அதன் அடியில் விளக்கேற்றும் கிண்ணத்தையும் ஒரே அமைப்பாக இணைத்து வார்த்தெடுக்கப்படும் நவீன வடிவ விளக்காகும். பஞ்சமி திதி நாட்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் இரவு நேரங்களிலோ அல்லது ராகு காலத்திலோ இந்த விளக்கில் நெய் அல்லது இலுப்பெண்ணெய் ஊற்றி ஏற்றி வழிபடுகின்றனர். தன்னை நம்பிய பக்தர்களைக் காக்கும் வெற்றித் தேவதையான வராகிக்கு இவ்விளக்கை ஏற்றுவதன் மூலம் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கண் திருஷ்டி மற்றும் செய்வினைக் கோளாறுகள் அழியும் என்பது தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.

8. காமதேனு விளக்கு

பாற்கடலில் தோன்றிய, நினைத்த யாவற்றையும் தரும் மங்களகரமான கற்பகப் பசுவான காமதேனுவின் வடிவத்தைக் கொண்டிருக்கும். பசுவின் உடம்பில் சகல தேவர்களும் உறைவது போன்ற செதுக்கல்களுடன், அதன் முன்பகுதியில் விளக்கேற்றும் அமைப்பு இருக்கும். புதியதாக வீடு குடியேறும் போது அல்லது வெள்ளிக்கிழமைகளில் இவ்வடிவ விளக்கை ஏற்றுவது குடும்பத்தில் உள்ள தரித்திரங்களை நீக்கி, சகல நன்மைகளையும் தரும் என்பது தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.


9. மயில் / அன்னப்பறவை அடுக்கு விளக்குகள்

பாரம்பரியக் குத்துவிளக்கின் நவீனப் பரிணாமமாக, ஐந்து அல்லது ஏழு அடுக்குகளைக் கொண்ட தட்டுகளுடன், அதன் உச்சியில் மயில் அல்லது அன்னப்பறவையின் வடிவம் பிரம்மாண்டமாகப் பொருத்தப்பட்டிருக்கும். தற்காலத்தில் பெரிய ஆன்மீகச் சொற்பொழிவுகள், திருமண விழாக்கள் மற்றும் நவீனப் பொதுக் கூட்டங்களின் தொடக்க விழாக்களில் மங்கள விளக்காக இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

(தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆகம நூல்களிலோ அல்லது பழங்கால நாட்டார் சடங்கு முறைகளிலோ பரிகார விளக்குகள் என்பவை குறிப்பிடப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1240.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License