இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

இராமர் நீராடிய சேதுதீர்த்தம்

மு. கோபி சரபோஜி


இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம் கட்டும் வேலையில் அனுமனும், மற்றவர்களும் ஈடுபட்டிருக்க, பொங்கி வரும் கடல் அலைகளும், அதன் சீற்றமும் அதற்குப் பெரும் தடையாக இருந்தன. அதனால் இராமர் கடலரசனிடம் கடல் அலைகளையும், சீற்றத்தையும் அடக்கிக் கொள்ளும்படி கூற, அவனோ பதில் ஏதும் சொல்லாமலும், தன் சீற்றத்தை அடக்கிக் கொள்ளாமலும் இருந்தான். இதனால் கோபம் கொண்ட இராமர் தன்னுடைய அம்பை எய்திக் கடலையே வற்றிவிடச் செய்வதாக கூறினார்.

இதைக் கேட்டதும் கடலில் இருந்து எழுந்த கடலரசன் இராமரை வணங்கி, “தங்களின் பாதம் பட்ட இந்த பூமியில் எத்தனையோ நதிகள் புனிதமாகி விட்டன. அந்தப் புண்ணிய நதிகள் எல்லாம் இந்தக் கடலில் தான் கலந்து இருக்கின்றன. அப்படிப்பட்ட இந்தப் புண்ணியக் கடலை உங்களால் வற்றி விடச் செய்ய முடியாது” எனக் கூறியதோடு தன் அலைகலையும், அதன் சீற்றத்தையும் அடக்கிக் கொண்டான்.

அதனால் தான் இராமரின் பாதம் பட்ட நதிகளில் நீராடினால் புண்ணியம் என்பதால் அவர் பாலம் அமைக்க வந்த இராமேஸ்வரம், தனுஷ்கோடி, சேதுக்கரை, தேவிபட்டிணம் போன்ற இடங்களில் உள்ள தீர்த்தங்களில் மக்கள் நீராடுகின்றனர். மற்ற தீர்த்தங்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு தனுஷ்கோடி சேதுதீர்த்தத்திற்கு உண்டு. இலங்கையிலிருந்து இராவணவதம் முடிந்து திரும்பிய இராமர் இத்தீர்த்தத்தில் தான் நீராடினார். இதுதவிர, சேது புராணமும், தேவையுலாவும் 24 பெரிய நீராடும் துறைகளுள் ஒன்றாக இச்சேதுதீர்த்தத்தை குறிப்பிடுகின்றன.

வேட்டையாடக் காட்டிற்குச் சென்ற தர்மகுப்தன் என்ற அரசன் இரவு நேரமாகி விட்டதால், விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தில் ஏறி இருந்து கொண்டான். அச்சமயத்தில் ஒரு சிங்கம் கரடியைத் துரத்திக் கொண்டு வர கரடியும் மரத்தின் மீது ஏறிக் கொண்டது. அங்கு அரசனைக் கண்ட கரடி, “அரசனே! பயப்படாதே. முன்னிரவில் கவலைப்படாமல் நீ தூங்கு. நான் காவல் காக்கின்றேன். பின்னிரவில் நான் தூங்கும் போது நீ காவல் காக்கலாம்” என்றது.

கரடியின் யோசனைக்கு அரசனும் ஒப்புக் கொண்டான். அரசன் தூங்க ஆரம்பித்ததும் தரையில் நின்ற சிங்கம் கரடியிடம், “அவனைக் கீழே தள்ளி விட்டு விட்டு நீ பிழைத்துக் கொள்” என்றது. கரடியோ, “நம்பியவனை ஏமாற்றுவது பாவம்” எனச் சொல்லி மறுத்து விட்டது.

முன்னிரவு நேரம் முடிந்து அரசன் விழித்ததும் கரடி தூங்கியது. தரையில் நின்ற சிங்கம் கரடியிடம் சொன்னதையே அரசனிடம் கூறியது. உடனே அரசன் கரடியைக் கீழே தள்ள அது விழாமல் ஒரு மரக்கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. தன்னை ஏமாற்றத் துணிந்த அந்த அரசனிடம் கரடி, “அரசனே! நான் கரடி உருவில் வந்த தியானநிஷ்டன் என்ற முனிவன். கீழே நிற்கின்ற சிங்கமோ முன்பு யட்சனாய் இருந்தது. சொன்னபடி நடந்து கொள்ளாமல் நீ துரோகம் செய்து விட்டாய். அதனால் உனக்குப் பித்து பிடிக்கட்டும்” என சாபம் கொடுத்தது.



பித்துப் பிடித்த அரசன் சித்தம் கலங்கிப் பைத்தியமானான். அதன்பின் ஜைமினி என்ற முனிவரின் சொல்படி இச்சேது தீர்த்தத்தத்தில் நீராடி சித்தப் பிரமை நீங்கினான் என்று புராண கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதப்போரில் துரோணாச்சாரியாரைப் பாண்டவர்கள் தந்திரமாகக் கொன்றதோடு, பீமன் துரியோதனணை கதாயுத நெறிமுறைகளுக்கு மாறாக நாபிக்கு கீழே அடித்து விழ்த்தினான். இதனால் கோபம் கொண்ட துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் பாண்டவர்களை வஞ்சம் தீர்க்க முடிவு செய்தான். பதினெட்டாம் நாள் யுத்தம் முடிந்த இரவில் பாண்டவர்களின் பாசறைக்குள் புகுந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த இளம் பாண்டவர்களை, பாண்டவர்கள் என நினைத்து கழுத்தை அறுத்துக் கொன்றான். அவர்களோடு உறக்கத்தில் இருந்த சிகண்டி, திட்டதுய்மன் ஆகியோரையும் கொன்றான். அதோடு நில்லாமல் அபிமன்யுவின் குழந்தையாக உத்தரையின் வயிற்றில் வளரும் கருவை அழிக்கத் தர்ப்பை புல்லை மந்திரித்து அனுப்பினான்.

பாவங்களிலேயே பெரிய பாவமாகக் கருதப்படும் கருவிலிருக்கும் குழந்தையை அழிக்க முயல்வது, உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது ஆகிய பாவங்களைச் செய்த அசுவத்தாமன் இச்சேது தீர்த்தத்தில் நீராடித் தன் பாவத்தைப் போக்கிக் கொண்டான் என்று இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமி சாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, திருவரங்கம், திருவனைக்கால், கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்களத்தி ஆகிய இயங்களில் ஒரு வருடம் தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம் என்றும் இச்சேது தீர்த்தத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

இவைதவிர, இத்தீர்த்தத்திற்கு வேறு ஒரு சிறப்பான மருத்துவ குணமும் உண்டு. மலைகள், காடுகள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள் வழியே பாய்ந்து வருகின்ற நதிகள் அங்கு விளைந்து, விரிந்து கிடக்கின்ற பல அபூர்வமான, ஆற்றல் வாய்ந்த, மருத்துவ குணமிக்க மூலிகைகளையும், செடி, கொடிகளையும் ஆரத்தழுவி அள்ளி வருகின்றன. அப்படி அள்ளி வருகின்ற நதிகள் இறுதியில் கடலில் வந்து சங்கமமாகும் போது அதில் உள்ள மூலிகைகளின் உயிர்சத்துகள் கடலின் அடியில் உறைந்து விடுகின்றன. “மகோதயம்” எனப்படும் அமாவாசையன்றும், “அர்த்தோயம்” எனப்படும் பெளர்ணமியன்றும், கிரகணங்கள் ஏற்படும் காலத்திலும் கடலின் நீரோட்டம் அதிகமாகும் போது அதன் வேகத்தால் சுழற்சி ஏற்பட்டு உறைந்து கிடக்கக்கூடிய மூலிகைகளின் உயிர்ச்சத்துகள் மேல்நோக்கி வருகின்றன. அதனால் தான் உயிர்சத்துக்களின் உறைவிடமாய் திகழும் இருபெரும் கடல்களான வங்காள விரிகுடாவும், இந்து மகாசமுத்திரமும் கூடும் இடமான தனுஷ்கோடியில் இந்நாட்களில் புனித நீராடுவது விசேசமானதாக கருதப்படுகிறது.

பொதுவாகத் தீர்த்தங்களில் நீராடுவதற்கென சில நியதிகள் உண்டு. ஆனால், அத்தகைய நியதிகள் சேதுதீர்த்தத்தில் நீராடுவதற்குக் கிடையாது. எந்த இடத்தில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீராடலாம் என சேதுமகாத்மியம் இத்தலச் சிறப்பைக் கூறுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p130.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License