கீதையில் கிருஷ்ண பகவானுக்குப் பதினெட்டு பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை;
1. கிருஷ்ணன் - கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார்படும் துயரம் துடைப்பவன்
2. அச்சுதன் - தன் நிலையிலிருந்து வழுவாதவன்
3. கேசவன் - அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்
4. கோவிந்தன் - ஜீவர்களை அறிபவன்
5. மதுசூதனன் - மது என்ற அசுரனை அழித்தவன்
6. ஜனார்த்தனன் - மக்களால் வழிபடப்படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)
7. மாதவன் - திருமகளுக்குத் தலைவன்
8. வார்ஷ்ணேயன் - வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
9. அரிசூதனன் - எதிரிகளை அழிப்பவன்
10. கேசிநிஷூதனன் - கேசி என்ற அசுரனை அழித்தவன்
11. வாசுதேவன் - வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
12. புருஷோத்தமன் - பரமப்புருஷன்
13. பகவான் - ஷட்குண சம்பன்னன்
14. யோகேஷ்வரன் - யோகத்துக்குத் தலைவன்
15. விஷ்ணு - எங்கும் வியாபகமாய் இருப்பவன்
16. ஜகந்நிவாசன் - உலகுக்கு இருப்பிடம்
17. யாதவன் - யதுகுலத்தில் தோன்றியவன்
18. ஹ்ருஷீகேசன் - இந்திரியங்களுக்கு ஈசன்.