இருக்கு வேதத்தில் இந்திரனை 26 வகையான பெயர்களில் அழைத்திருக்கின்றனர்.
1. காற்றிலிருந்து மூன்று உலகங்களில் பரவி நிற்பதால் ’வாயு’
2. மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால் ‘வருணன்’
3. வானில் கர்ஜனை செய்வதால் ’உருத்திரன்’
4. நான்கு விதமான பொருள்களுக்கு, நிலையான உயிர் நிலயமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’ (இந்திரன்)
5. சரியான காலத்தில் பூமியை நீரால் திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’
6. இரண்டு பெரிய உலகங்களுக்கு தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’
7. வாக்கு, சத்தியம், மனம், பூமண்டலம் அறிவைத் தரும் கருவிகளாக இருப்பதால் ’பாதுகாப்பவன்’ அல்லது ‘பிராம்மணஸ்பதி’
8. சரியான காலத்தில் பூமியில் உள்ள சீவராசிகளுக்கு உணவு தருவதால் ’நிலங்களின் தலைவன்’ அல்லது ‘சேத்திராதிபதி’
9. பூமியின் நடுவில் இருந்து மக்களை பாதுகாப்பதால் ’வாஸ்தோஷ்பதி’
10. சத்தியத்தால் சத்தியத்திலேயே இருப்பதால் ‘ருதம்’
11. வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’
12. எங்கும் சுற்றிக் கொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’
13. படைப்புகளுக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டு, கருத்தில் சுகத்தை விரும்புவதால் "ஹிரண்யகர்பன்”
14. படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘எமன்’
15. இவன் அனைவரிடம் நன்கு பழகுவதால் ‘மித்திரன்’
16. வெயிற்காலத்திற்கு பின் நல்ல மழை அளித்து, அனைத்தையும் நன்கு செயல்பட வைப்பதால் ‘விஸ்வகர்மன்’
17. இந்திரனுக்கு மூவுலகில் நெய்க்குளம் இருப்பதால் ‘சரசுவதி’
18. வேன பார்க்கவ முனிவர் என்பவர் இந்திரனை ‘வேனன்’ என்கிறார்.
19. ’மன்யுதாபச முனி’ இந்திரனை ‘மன்யு’ (கோபக்காரன்) என்றார்.
20. மரணவேளையில், உயிர்களை இழுத்துச் செல்வதால் ’சுருநபந்து’ அல்லது ‘அசுனீதி’
21. கோடைகால முடிவின் போது அவன் தோண்றுவதால் ‘கிருத்சமதன்’, ‘அபாம்நபதன்’ அல்லது ‘சலமகன்’
22. வானில் கார்மேகங்களை தாங்கி நிற்பதால் ‘நிரந்ததி’ அல்லது ‘ தசீகரன்’
23. கர்ஜனை செய்து கொண்டு பூமியில் ஒன்பது மாதம் ஜனனக் கிருமியாவதால் ‘தாத்ரி’
24. அந்தரிட்சத்தில் வசிப்பதாலும், வேகமாக நழவி விழுவதாலும் ‘தர்க்ஷியர்’
25. வானத்தில் கர்ஜித்துக் கொண்டு,சூரியோதயத்திற்கு சென்று, அடித்தளத்திலிருந்து நீரை விடுவதால் ‘ஊர்வசி புரூரவன்’
26. பெரும் ஒலியுடன் இறந்தவனை எடுத்துச் செல்வதால் இறந்த அவனை எமனின் கடைசி மகன் ’மிருத்யு’