துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன.
* `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள்
* `உ' என்றால் இடையூறை அகற்றுபவள்
* `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள்
* `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள்
* `ஆ' என்றால் பயம், சத்ரு இவற்றை அழிப்பவள்
என்பது பொருளாகும்.
துர்க்காதேவிதான் பரசுராமருக்கு அமரத்துவம் அளித்தவள். துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது மந்திர சாஸ்திரம்.
1) குமாரி
2) த்ரிமூர்த்தி
3) கல்யாணி
4) ரோஹிணி
5) காளிகா
6) சண்டிகை
7) சாம்பவி
8) துர்கா
9) சுபத்ரா
சுவாஸினி பூஜையில்
1) சைலபுத்ரி
2) ப்ரம்ஹசாரிணி
3) சந்த்ரகண்டா
4) கூஷ்மாண்டா
5) மகாகௌரி
6) காத்யாயனி
7) காளராத்ரி
8) மகாகௌரி
9) சித்திதார்ரி
என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.
துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி மயில்தோகை. துர்க்கா தேவிக்கு மிகப்பிடித்த மலர் நீலோத்பலம். இது எல்லா மலர்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. அஷ்டமி நாளில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு ஆடையினை அம்பாளுக்கு அணிவிக்கலாம். துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
வழிபாட்டுப் பலன்கள்
* துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.
* வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களையும் போக்கத் துர்காதேவியை நினைத்து வழிபட வேண்டும். துர்க்கை வழிபாடு மனத்தெளிவைத் தரும்.
* மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை அனைத்தையும் நிறைவேற்றித் தருபவள் துர்க்காதேவி.
* துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 சுலோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.
* நீதிமன்றம் சென்றிருக்கும் வழக்குகளில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியைச் சரண்டைந்து வணங்கிட வேண்டும்.
* துர்க்கையை வழிபடுவர்களுக்குப் பயம், மனத்தளர்ச்சி, சோகம் ஏற்படுவதில்லை.
* துர்க்கையை வழிபாடு செய்தவருக்கு உறுதியாக மோட்சம் கிடைக்கும்.
* ஒரு ஆண்டு காலம், துர்க்கையை வழிபட்டு வருபவர்களுக்கு முக்தி நிச்சயம்.
* தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கையை அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.
* தூங்கும் போதும், நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்குச் சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.
* துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.