நாக வழிபாட்டின் மூலம் பயனடையக் கீழ்க்காணும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கலாம்.
1. செல்வ செழிப்பு - தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும்.
2. கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு - பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும்.
3. நல்ல உடல் நலம் - உப்பு காணிக்கை செலுத்த வேண்டும்.
4. விசத்தன்மை நீங்க - மஞ்சள் காணிக்கை செலுத்தலாம்.
5. ஆரோக்கிய வாழ்வு – நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தலாம்.
6. சர்ப்பதோசப் பரிகாரம் – தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கிச் சமர்ப்பிக்கலாம்.
7. நீண்ட ஆயுள் - நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
8. நினைத்த காரியம் கை கூடிட - பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
9. குழந்தைப்பேறு - மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
10. விவசாயம் வளம் பெற – மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் சமர்ப்பிக்க வேண்டும்.
11. நாகதோச பரிகாரத்திற்கு – மஞ்சள் பொடி காணிக்கை, பால்– பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம்.