கோவில்களில் உள்ள சிலைகள் பெரும்பாலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
பொதுவாக உலோகத்தின் ஆற்றலை விடக் கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். எனவே கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது. அத்தகைய கருங்கல்லானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து வகை பஞ்சபூதத்தின் தன்மைகளையும் கொண்டுள்ளது.
நீர் - கருங்கல்லில் நீர் உள்ளது, அதனால் தான் கல் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது.
நிலம் - பஞ்ச பூதங்களின் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றது.
நெருப்பு - கல்லில் நெருப்பின் தன்மையும் உள்ளது. அதாவது, கற்களை உரசும் போது அதிலிருந்து தீப்பொறி பறக்கும்.
காற்று - கல்லில் காற்றும் உள்ளது. அதனால் தான் கல்லில் தேரைகள் உயிர் வாழ்கிறது.
ஆகாயம் - ஆகாயத்தைப் போல், வெளியில் உள்ள சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி வைத்துப் பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உள்ளதால்தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவது நமக்கு எதிரொலிக்கிறது.
இத்தகைய சிறப்பு சக்திகள் வேறு எந்த வகையான உலோகத்திலும் வெளிப்படுவதில்லை. கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோவிலில் அபிசேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, அந்த கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது. அத்தகையக் கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது. எனவேதான், கோவில்களில் உள்ள சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுகிறது..