பிள்ளையார் பிடித்து வைக்கும் பொருட்களுக்கேற்ப அதன் பலன்களும் மாறுபடுகின்றன. பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கும் பொருட்களுக்கேற்ப பலனும் கிடைக்கும் என்கின்றனர்.
1. மஞ்சள் - அனைத்து வளங்களும் கிடைக்கும். செயலிலும் வெற்றி கிடைக்கும்.
2. குங்குமம் - செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
3. புற்று மண் - நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்.
4. வெல்லம் - உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். நல்ல உடல் நலம் கிடைக்கும்.
5. உப்பு - எதிரிகளின்தொல்லை நீங்கும்.
6. வெள்ளெருக்கு - பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரும்.
7. விபூதி - வெப்ப நோய்கள் நீங்கும்.
8. சந்தனம் - புத்திரப்பேறு கிடைக்கும்.
9. சாணம் - அனைத்துத் தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
10. வாழைப்பழம் - வம்ச விருத்தி உண்டாகும்.
11. வெண்ணெய் - கடன் தொல்லை நீங்கும்.
12. சர்க்கரை - சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
13. பசுஞ்சாணம் - நோய்களை நீக்குவார்.
14. கல் விநாயகர்- வெற்றி தருவார்.
15. புற்றுமண் விநாயகர்- வியாபாரம் பெருகும்.
16. மண் விநாயகர்- உயர் பதவிகள் கிட்டும்.