1. சிவனுக்கு யான் அடியார் என்று எண்ணி எண்ணி மகிழ்பவர்.
2. தனக்கு உகந்ததைச் சிவனுக்கு படைத்து மகிழ்பவர்.
3. சிவனுக்கு உகந்ததைத் தானும் உகந்து மகிழ்பவர்.
4. அண்டசராசரத்தைப் படைத்து அதில் இன்புற வாழ, என்னையும் படைத்தான் என்பதை இன்புறும் போதெல்லாம் மறவாது நினைப்பவர்.
5. சிவபெருமான் மட்டுமே தனக்கு வேண்டியதைக் கொடுக்க வல்லவன் என்பதை உணர்ந்து வாழ்பவர்.
6. சிவனிடம் தான் பெற்றதைப் பிறருக்குக் கொடுத்து மகிழ்பவர்.
7. பிறருக்கு தான் கொடுத்ததை, சிவன் கொடுத்ததே என்று எண்ணி அவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என எதிர்பாராது இருப்பவர்.
8. துன்பங்களும், நோய்களும் தன்னைச் சூழ்ந்த வினைகளைப் போக்க வந்தவை என்று உணர்ந்து அனுபவித்து வினைகளைக் கழற்ற வல்லவர்.
9. தனக்குத் துன்பம் தரும் காரணிகள் யாவும், பிறரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தன்னாலே வரவழைக்கப்பட்டது என்று உணர்பவர்.
10. தான் இன்புற தடை ஏதும் விதிக்காதவன் சிவன் என நம்புபவர்.
11. இன்புறலும், துன்புறலும் தன் ஆன்மாவை சிவனடிக்கு இழுத்துச் செல்லும் இரட்டை மாடுகள் என உணர்ந்து ஒவ்வொரு அனுபவத்திலும் தன் வினை கழன்று போவதை அறிந்து, நொடிக்கு நொடி அதிகரிக்கும் ஆனந்தத்தோடு வாழ்பவர்.
12. தானே சிவமாக சிவானந்தப் பேரின்பத்தில் மூழ்கி இருந்தாலும் சிவனொருவன் மட்டுமே எல்லாம் வல்லவன் என்பதை மறவாது இருப்பவர்.
13. தன்னால் ஆக வேண்டியது என சிவனார் பணித்த தன் பிரபஞ்சக் கடன் மட்டுமே தன்னாலாகும் என உணர்ந்து நடப்பவர்.
14. சிவனை நாட, தடை ஏதும் சொல்லாதிருப்பவர்.
15. சிவனால் ஆகும் பிரபஞ்சச் செயல்களைப் பார்த்து, ரசித்து மகிழ்பவர்.
16. தனக்கென ஒரு பிரபஞ்சக் கடனைத் தந்து, தன் பணியில் என்னையும் இணைத்துக் கொண்டானே அந்தச் சிவன் என எண்ணி அளித்தப் பிறவியை வியந்து போற்றி வாழ்பவர்.