1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்த தலம்.
2. உத்திரகோசமங்கை - இறைவன் சிவபெருமான் பார்வதிக்கு வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்த தலம்.
3. இன்னம்பர் – இறைவன் சிவபெருமானிடம் அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம்.
4. திருவுசாத்தானம் - இறைவன் சிவபெருமானிடம் இராமர் சேது அணை கட்டுவதற்கு மந்திர உபதேசம் பெற்ற தலம்.
5. ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்ற தலம். ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்ற தலம்.
6. திருவான்மியூர் - இறைவன் சிவபெருமான் அகத்தியருக்கு மூலிகை வைத்தியம் பற்றி உபதேசம் செய்த தலம்.
7. திருவாவடுதுறை - இறைவன் சிவபெருமான் அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்த தலம். போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளிய தலம்.
8. சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம்.
9. திருப்பூவாளியூர் - இறைவன் சிவபெருமான் நுன்முனிவர் எழுபது பேருக்கு பரஞான உபதேசம் செய்த தலம்.
10. திருமங்கலம் - இறைவன் சிவபெருமான் சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம் செய்த தலம்.
11. திருக்கழுக்குன்றம் - இறைவன் சிவபெருமான் சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம் செய்த தலம்.
12. திருமயிலை - இறைவன் சிவபெருமானிடம் ஆயிரம் முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்ற தலம்.
13. செய்யாறு - இறைவன் சிவபெருனான் வேதம் பற்றியும் கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை வழங்கிய தலம்.
14. திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்ற தலம். இங்கிருக்கும் இறைவி பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்த தலம்.
15. திருப்பனந்தாள் - இறைவி இறைவனிடம் ஞானோபதேசம் பெற்ற தலம்.
16. திருக்கடவூர் - இறைவன் சிவபெருமானிடம் பிரம்மன் ஞானோபதேசம் பெற்ற தலம்.
17. திருவானைக்கா - இறைவன் சிவபெருமானிடம் அம்பிகை ஞானோபதேசம் பெற்ற தலம்.
18. மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற தலம்.
19. திருவாவடுதுறை - இறைவன் சிவபெருமான் அகத்திய முனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம் செய்த தலம்.
20. தென்மருதூர் - இறைவன் சிவபெருமான் ஆயிரம் முனிவர்களுக்கு உபதேசம் செய்த தலம்.
21. விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்த தலம். இங்கிருக்கும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22. திருப்பெருந்துறை - இறைவன் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம் செய்த தலம்.
23. உத்தரமாயூரம் - மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்த தலம்.
24. காஞ்சி - இறைவன் சிவபெருமான் சப்தரிஷிகளுக்கு உபதேசம் செய்த தலம்.
25. திருப்புறம்பயம் - இறைவன் சிவபெருமான் ஜனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம் செய்த தலம்.
26. விளநகர் - இறைவன் சிவபெருமான் அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம் செய்த தலம்.
27. திருத்துருத்தி - சிவன் பிரம்மச்சாரியாய் வேதத்தைத் தாமே சொன்ன தலம்.
28. கரூர் - இறைவன் சிவபெருமான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்த தலம்.
29. திருவோத்தூர் - இறைவன் சிவபெருமான் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்த தலம்.