1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க / வாங்க வேண்டும்.
3. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்துச் செல்வம் பெருக, வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
4. வெற்றிலையைத் தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது, பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
5. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. அரிசியைக் கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது
7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியேக் கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமேப் பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
9. செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது; அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
10. செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக் கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
11. நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால், செல்வம் சேரத்துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
12. துணிமணிகளை உடுத்திக் கொண்டேத் தைக்கக் கூடாது, அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது.
13. ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்க வேண்டும்.
14. வெள்ளிக்கிழமைகளில் மாலை ஐந்து மணிக்குள் நமது வீட்டைப் பெருக்கி, சுத்தம் செய்து, அலசிவிட்டுவிட வேண்டும். அலசிய பின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
15. ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை; மாட்டேன்; இது மாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
16. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்குக் கொடுக்கக் கூடாது.
17. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்குப் பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்பக் கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
19. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
20. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
21. எரியும் குத்துவிளக்கைத் தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பம் / கல்கண்டு கொண்டு அணைக்க வேண்டும்.
22. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
23. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனைக் கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
24. வீட்டில் நெல்லி மரம் இருந்தால், லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்விதத் தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
25. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது, அவற்றுக்குத் தீவனங்கள் வாங்கி தந்து வணங்கினால் சிறப்பு. கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
26. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளைப் புறாக்கள் வளர்க்கலாம்.
27. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
28. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப்படம் இவற்றைப் பார்க்கவேண்டும்.
29. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
30. எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
31. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்குக் குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், மகிழ்ச்சியும் பெருகும்.
32. எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது.
33. பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
34. பெண்கள் தலைவிரிக் கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது. இருகைகளும் கொண்டு தலையைச் சொரியக் கூடாது .
35. அக்கினியை வாயால் ஊதி எழுப்பவோ, அணைக்கவோக் கூடாது, நகத்தைக் கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
36. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது. தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்குக் கீழேப் பெண்கள் அணியக்கூடாது.
37. பெண்கள் மாதவிடாய் காலத்தில், அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது.
38. தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடிப் பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
39. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
40. விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
41. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
42. ஒருபோதும் இருட்டியபின்னர், தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
43. குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
44. சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
45. அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.