முருகப்பெருமானின் திருவுருவத்தைப் பதினாறு வகையாகப் பெயரிட்டு வழிபடுகின்றனர். அத்திருவுருவங்களின் பெயர்களும், அத்திருவுருவத்தை வழிபடுபவதால் கிடைக்கும் பலன்களும் கீழேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. ஞானசக்திதரர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், நினைத்த செயல்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். திருத்தணிகை முருகப்பெருமானின் மூலவர் திருவடிவம் இது.
2. கந்தசாமி
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்துச் செயல்களும் வெற்றியடையும். பழனி முருகப்பெருமானின் திருவடிவம் இது.
3. ஆறுமுக தேவசேனாபதி
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், வினைகளை நீக்கி ஆனந்தப்பேறு கிடைக்கும். நாகை மாவட்டம், திருவிடைகழி முருகப்பெருமான் மூலவர் திருவடிவம் இது.
5. கஜவாகனர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இந்தத் திருவுருவம் உள்ளது.
6. சரவணபவர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இந்தத் திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்து நலங்களும் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இத்திருவுருவத்தை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் இந்தத் திருவுருவம் உள்ளது.
8. குமாரசாமி
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இத்திருவுருவத்திலான பஞ்சலோகச் சிலை இருக்கிறது.
9. சண்முகர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமான் வடிவம் இத்திருவடிவமாகும்.
10. தாரகாரி
`தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திருப்பெயரைப் பெற்றார். இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், உலக மாயைகளில் இருந்து விடுபடலாம். விராலிமலை முருகப்பெருமான் இத்திருவடிவமாகும்.
11. சேனானி
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், பகை அழியும், போட்டிகளில் வெற்றிகிடைக்கும், பொறாமை நீங்கும். தேவிகாபுரம் கோயிலில் இத்திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் இத்திருக்கோலம் இருக்கிறது.
13. வள்ளிகல்யாணசுந்தரர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குத் திருமணப்பேறு உடன் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இத்திருவுருவம் இருக்கிறது.
14. பாலசுவாமி
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், உடல் குறைகள் நீங்கும். மேலும், உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டார் கும்பம் கோயில்களில் இத்திருவுருவம் இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர்
இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்துத் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில் இத்திருவுருவம் இருக்கின்றன.
16. சிகிவாகனர்
மயில் மீது இருக்கும் இந்தத் திருவுருவத்திலான முருகப்பெருமானை வழிபட்டால், இன்பமான வாழ்வு கிடைக்கும். இந்தத் திருவுருவத்தைப் பல கோயில்களில் காணமுடியும்.