* அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.
* அனுமனை வழிபடுவதால், சிவபெருமான் மற்றும் விஷ்ணு என்று இருவரையும் சேர்த்து வழிபட்ட பலன்களைப் பெற முடியும்.
* வியாழக்கிழமை, சனிக்கிழமை இரு நாட்களும் அனுமன் வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும்.
* அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சார்த்தி வழிபடுவதால் அனைத்துத் துன்பங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகிக் கரைந்து விடும் என்பது தொன்ம நம்பிக்கை.
* தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாகக் கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமன் கவசம் படித்தால் எதிரிகள் பயம் நீங்கி நலம் பெறலாம்.
* அனுமனுக்குப் பிடித்த திராட்சைப்பழம் படைத்து வழிபட்டால், எளிதில் வெற்றி கிடைக்கும்.
* அனுமனுக்குச் செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்தால் அனுமன் வழங்கும் நற்பலன்களைப் பெறலாம்.
* அனுமனுக்குத் துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனால் வரும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
* அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபடத் திருமணத்தடை நீங்கும்.
* அனுமனுக்கு வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபட்டுத் தொடங்கிய வேலைகளில் இருக்கும் தடை நீங்கப் பெறலாம்.