ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று பொருள். அத்தகைய வீடுகளில் அஷ்ட மங்கல வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு அஷ்டமங்கலப் பொருட்கள் எனப்படும்
1. குண்டு மஞ்சள் - 3
2. குங்குமம்
3. மரப்சீப்பு
4. தர்ப்பணம் என்ற கண்ணாடி
5. சந்தனம்
6. தாம்பூலம்
7. தீபம்
8. ரவிக்கைத் துணி (பச்சை நிறம்).
ஆகியவற்றை ஒரு தட்டில் வழிபாட்டுக்காக வைத்து, அத்தட்டின் இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை ஏற்றி,
“ஓம் லட்சுமி நம
ஓம் ஸ்ரீதேவி நம
ஓம் கமலாசனி நம
ஓம் பத்ம பூஜனி நம
ஓம் மகாதேவி நம
ஓம் சங்கமாதா நம
ஓம் சக்ர மாதா நம
ஓம் கதா மாதா நம
ஓம் ஐஸ்வர்னய நம”
எனும் ஒன்பது திருமகள் நாமங்களை எட்டு தடவைகள் கூற வேண்டும். பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் பார்வை பட்டு குடும்பத்தில் செல்வம் பெருகும்.