நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்குச் செல்லும் போது, வேண்டுதலை முடித்துவிட்டுக் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருகிறோம். பிரகாரத்தை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்கள் கிடைக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?
* ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
* மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
* ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
* ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
* ஒன்பது முறை வலம் வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.
* பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
* பதின்மூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
* பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டாகும்.
* பதினேழு முறை வலம் வந்தால் தானியம் சேரும்.
* பத்தொன்பது முறை வலம் வருவதால் பிணிகள் நீங்கும்.
* இருப்பத்தொன்று முறை வலம் வருவதால் கல்வி விருத்தியாகும்.
* இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
* நூற்றியெட்டு முறை வலம் வந்தால் புத்திரப்பேறு கிடைக்கும்.
* இருநூற்றுயெட்டு முறை வலம் வந்தால் யாகம் செய்த பலன் உண்டாகும்.