Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

சோடஷ கௌரி வடிவங்கள்

உ. தாமரைச்செல்வி


கௌரி தேவியை 108 வடிவங்களில் ஞானியர்கள் போற்றி வழிபட்டனர். அதில் முக்கியமான வடிவங்களாக, 16 எனும் எண்ணிக்கையிலான சோடஷ கௌரி வடிவங்கள் இருக்கின்றன. அவை;

1. ஞானகௌரி

அறிவே சகல லோகங்களையும் இயக்குகிறது என்று சிவனிடம் கற்றுக்கொண்ட தேவி, வன்னி மரத்தடியில் நீண்ட காலம் தவமிருந்து, ஞானசக்தியாக வடிவம் கொண்டாள். புரட்டாசி மாதம், சுக்கிலபட்ச தசமியில் வணங்கப்படும் இந்தத் தேவி, ஞானத்தின் அம்சம். எனவே, இவளை வழிபட்டால் உயர்ந்த ஞானம் கிட்டும். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை ஞானகௌரியாக வழிபடப்படுகிறாள்.

2. அமிர்தகௌரி

ஆயுள் விருத்திக்கு அமிர்தகௌரியே. ஈசனிடம் பெற்ற அமிர்தக் கலசத்தை, தனது பக்தர்களுக்கு வழங்கும் இவர், இடைவிடாது ஈசனைத் தியானிப்பவர். ஆடிமாதப் பௌர்ணமியில் இவளை வழிபட, ஆயுள் அதிகரிக்கும். திருக்கடையூர் அபிராமி அமிர்த கௌரியின் அம்சமானவர்.

3. சுமித்ர கௌரி

உயிர்களுக்கெல்லாம் சினேகமாக இருப்பதால், இந்தக் கௌரி வடிவம் 'சுமித்ரா' என்று அழைக்கப்படுகிறது. இனியாள், ஸ்நேகவல்லி என்று கொண்டாடப்படும் இந்த கௌரி, மன நிம்மதிக்காக வணங்கப்பட வேண்டியவள். திருவாடானை அன்பாயிரவல்லி தேவி, சுமித்ரகௌரி அம்சமாகக் கொள்ளப்படுகிறாள்.

4. சம்பத் கௌரி

இவள் 'செல்வம்' என்று சொல்லப்படும் கால்நடைகளின் தேவி. வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளின் நலம் காக்க இவளை வழிபடலாம். உழவர்களின் தெய்வம் இந்த தேவி. பசுவின் வடிவெடுத்து, ஈசனை வணங்கியவள். ஆவுடைநாயகி, கோமதி என்று போற்றப்படும் இவளை, காசி அன்னப்பூரணியின் அம்சம் என்றும் கூறுகிறார்கள். சகல சம்பத்துகளையும் அருளும் இந்தத் தேவிக்கு பங்குனி சுக்லபட்ச திருதியை நாள் உகந்தது.

5. யோக கௌரி

யோகக்கலையின் அம்சம் இவள் என்பதால், முனிவர்களும் சித்தபுருஷர்களும் கொண்டாடிய தேவி இவள். சிவன், சித்தர் வடிவம் கொண்டபோது, யோக கௌரியாக உடன் வீற்றிருந்தவள் இவளே. திருவாரூர் கமலாம்பிகை, யோகாம்பிகை என்றே அழைக்கப்படுகிறார். யோகம் ஆழ்ந்த நம்பிக்கையை அளிக்கும். எனவே, இவளை வணங்கினால் அமைதி கிடைக்கும்.

6. வஜ்ரச்ருங்கல கௌரி

உறுதியான உடலைத் தரக்கூடிய தேவி இவள். வஜ்ரதேகத்தை வரமாகத் தருபவள். கருட வாகனத்தில் வலம் வருபவள். ஸ்ரீதுர்க்கை, இவளின் அம்சமாகப் போற்றப்படுகிறாள். நோய்கள் அண்டாமல் இருக்க வணங்க வேண்டிய அன்னை இவள்.


7. திரிலோக்ய மோஹன கௌரி

உற்சாகம் வேண்டுவோருக்கு இந்த கௌரி வரங்களை வாரி வழங்குவாள். உறுதியாக செயலாற்றும் எவருக்கும் இவள் ஆசிகளை வழங்கிக் காக்கிறாள். புதிய செயல், புதிய தொழில் தொடங்குவோர், இவளை வணங்கி ஆரம்பிக்க சுபம் உண்டாகும். வரலட்சுமியின் அம்சம் இவள்.

8. சுயம்வர கௌரி

'பதிவிரதைகளின் நாயகி' என்றே இவள் கொண்டாடப்படுகிறாள். நல்ல கணவரை அடைய வழிகாட்டும் அன்னை இவள். சதிசாவித்ரி, ருக்மிணி, சீதாதேவி ஆகியோர் வழிபட்ட கௌரி இவள். சுயம்வர கௌரியும் கடும் தவமிருந்தே ஈசனை மணந்தார் என்பதால், காமாட்சி இந்த கௌரியின் அம்சமானவள்.

9. கஜகௌரி

கணபதியை மடியில் வைத்துக் கொண்டு அருளும் இந்த கௌரி, பிள்ளை வரம் அருளும் மஹாசக்தி. ஆடி மாத பௌர்ணமியில் விரதமிருந்து இவளை வணங்க, சந்தான பாக்கியம் கிட்டும். சீர்காழியில் உறையும் திருநிலை நாயகி, கஜகௌரியின் அம்சமாக வணங்கப்படுகிறார்.

10. கீர்த்தி கௌரி

நீடித்த நற்புகழைத் தரும் தேவி இவள். நல்ல பெயரைப் பெற இந்தத் தேவியை வணங்கிப் பலன் பெறலாம். விஜயகௌரி என்று சொல்லப்படும் இவள், நல்ல உறவுகளையும், நட்பையும் தருபவள். தீய மனிதர்கள் நம்மை விட்டு விலகி, நன்மை பெருகச் செய்பவள் கீர்த்தி கௌரி.

11. சத்யவீர கௌரி

துணிச்சலுக்குரிய தேவி இவள். மனதில் பயம், எதிரிகளின் தொல்லை என எது வந்தாலும், இவளிடம் சரண் அடைந்து வணங்கி வழிபட்டால், நிச்சயம் காப்பாள். ஆடி மாத சுக்லபட்ச திரயோதசியில் இவளை வணங்கப் பலன் கிட்டும்.

12. வரதான கௌரி

வரங்களை அளிப்பது மட்டுமல்லாமல், தன்னை வணங்குபவர்களையும் கொடை வள்ளல்களாக மாற்றுபவள் இந்த தேவி. திருவையாறில் வீற்றிருக்கும், அறம் வளர்த்த நாயகி இவளுடைய அம்சம்தான். புரட்டாசி மாத சுக்லபட்ச திருதியை நாளில் இந்த அன்னைக்கு விரதம் இருந்து வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.


13. சுவர்ண கௌரி

'பொற்கொடி' என்று வணங்கப்படும் இந்த தேவி செல்வ வளங்களை அளிக்கக் கூடியவள். பிரளய காலத்தில் கடலில் தோன்றிய இந்த கௌரி மாசி மாதத்திலும், ஆவணி சுக்கிலபட்ச திருதியை நாளிலும் வணங்கப்பட வேண்டியவள். குலதெய்வ கடாட்சம் பெறவும், வறுமை நீங்கி செழிக்கவும் இவளை வணங்கலாம். திலதைப்பதி ஸ்வர்ணவல்லி இவளது அம்சம்.

14. சாம்ராஜ்ய கௌரி

எந்தப் பதவியை வேண்டினாலும், தகுதி உள்ளவருக்கு அதை வழங்கும் தேவி இவள். தலைமைப் பண்பை வளர்க்க வேண்டியவர்கள் இவளை வணங்கலாம். ஸ்ரீராஜராஜேஸ்வரியின் அம்சமாக இந்த கௌரி விளங்குகிறாள். ராஜயோகம், பதவி உயர்வு வேண்டுவோர் பௌர்ணமி நாளில் இவளை வணங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

15. அசோக கௌரி

கஷ்டமில்லாத வாழ்வையே எல்லோரும் வேண்டுகிறோம். அதற்குத் துணைபுரிபவள் இந்தக் கௌரி. சோகம் இல்லாத இடம்தான் ஸ்ரீகௌரியின் இருப்பிடம். தன்னை வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கும் இந்த தேவி, மீனாட்சியின் அம்சம் எனப்படுகிறாள். சித்திரை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் இவளை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

16. மனோரதபூர்த்தி கௌரி

விரும்பிய எல்லாவற்றையும் தகுதியானவர்களுக்கு வழங்கும் தேவி இவள். தூய மனதோடு தன்னை நாடி வருபவருக்கு வேண்டியதை அள்ளித் தரும் இந்த அன்னை விஸ்வ புஜா மகாகௌரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத சுக்லபட்ச திருதியை நாளில் வணங்கலாம். மாயவரம் அபயாம்பிகை இவளது அம்சம் ஆகும்.

வேண்டியதை வேண்டியவாறு தரும் இந்த சோடஷ கௌரிகளை வணங்கி வேண்டியதைப் பெறுவோம். கேதார கௌரி விரதம் கடைப்பிடித்து. இறைவன் சிவபெருமானிடமிருந்தும் வேண்டிய வரங்களைப் பெறுவோம்.


கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் ஆரம்பித்து, தீபாவளி அமாவாசை அன்று முடிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க இறைவன் சிவபெருமான் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று.

இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டைச் சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல் உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்துக் கோவிலுக்குச் சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.

நோன்பின் முடிவில் நோன்புக்கயிறை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் என்று அனைவரும் கட்டிக் கொள்ள வேண்டும். நோன்புச் சட்டியில் வைத்த பலகாரங்களை அந்த வீட்டினரேச் சாப்பிட வேண்டும். நோன்புக்கயிறை எக்காரணம் கொண்டும் தொலைத்துவிடக்கூடாது. மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து நோன்பில் வைத்துச் சாப்பிட்ட பலகாரம், கயிறு, வெற்றிலை, பாக்கு, பூக்கள் என்று எஞ்சியவகளை ஆற்றில் விட்டுவிட வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p492.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License